Pages

Saturday, April 21, 2012

நானும் பட்டதாரிதான்


நாம் வாழும் சமூகம் மனிதர்களை குணத்திற்காக மதிப்பது வெகுவெகு குறைவானது

நாம் வாழும் சமூகம் மனிதர்களை குணத்திற்காக மதிப்பது வெகுவெகு குறைவானது.மனிதர்கள் தம்மகத்தே வைத்துள்ள பணம் பொருள் பதவி பட்டம் இவற்றை வைத்துத்தான் சமூகமானது மனிதர்களை எடைபோடுகின்றது. கா.பொ.த. சாதாரணதர பரீட்சையில் பாடசாலையிலேயே சிறந்த பெறுபேறுகளை எடுத்தபோது தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள் உயர்தரப்பரீட்சையில் பிரசாசிக்கத்தவறியதும் என்னை ஏதோ தோல்வியின் அடையாளமாகவே பார்த்தமை ( அம்மாவைத்தவிர) எப்போது நினைத்தாலும் மனதை உறுத்தும். அப்போதே கனவு கண்டேன் நானும் ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்று! எத்தனையோ எத்தனிப்புக்கள் கேலிக்கூத்துக்கள் நக்கல்கள் நளினங்களைத் தாண்டி கடந்த 2011 ஆண்டில் சமூக விஞ்ஞானத்தில் இளமானிப்பட்டத்தை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றமை என்வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாகும். ஏனையோருக்கு சவால் விட்டேன் என்று சொல்வதை விட எனக்கு நானே விட்ட சவாலில் வெற்றி பெற்றமையையே பெரிய விடயமாக கருதுகின்றேன்

No comments:

Post a Comment