Pages

Friday, September 25, 2020

மிலிந்த மொரகொட, பாலித கோகண உட்பட எட்டு புதிய தூதுவர்களின் நியமனம் உறுதி!




 இந்தியாவிற்கான புதியதூதுவராக மிலிந்த மொரகொட, சீனாவிற்கான புதிய தூதுவராக கலாநிதி பாலித கோகண உட்பட எட்டு புதிய தூதுவர்களின் நியமனங்களை உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்குழு இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதன் படி  பின்வரும் நியமனங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.


1.சீ.ஏ. சந்திரப்பிரேம - ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி

2. மிலிந்த மொரகொட- இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் 

3.ரவிநாத ஆரிய சிங்க - அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர்

4. எஸ்.அமரசேகர- தென் ஆபிரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர்

5. ரியல் அட்மிரல் - ஹரிஸ்சந்திர சில்வா- ஆப்கானிஸ்தானிற்கான இலங்கைத்தூதுவர்.

6. விஸ்ராமல் எஸ்.குணசேகர - ஜப்பானிற்கான இலங்கைத்தூதுவர்

7. பேராசிரியர் ஷனிகா ஹிரிபுரேகம- பிரான்ஸிற்கான இலங்கைத்தூதுவர்

8. கலாநிதி பாலித் கோகண- சீனாவிற்கான இலங்கைத்தூதுவர்


இவர்களது பெயர்கள் உயர்பதவிகளுக்கான பாராளுமன்ற குழுவின் அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டபின்னரே நியுயோர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கான நிரந்திர வதிவிடப்பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் முன்மொழியப்பட்டது. அந்தவகையில் இன்னமும் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்படவில்லை. 

No comments:

Post a Comment