Thursday, November 21, 2013

சச்சினுக்கு முன்.. சச்சினுக்கு பின்


உலக வரலாற்றை எடுத்துரைக்கும் போது கிமு இகிபி வரலாற்றாளர்கள் எடுத்துரைப்பதைப் பார்க்கின்றோம். இனிமேல் கிரிக்கட் விளையாட்டை எடுத்துரைக்கும் போது சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் குறிப்பிடும் நிலைவருமோ என்ற அளவிற்கு அண்மையில் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அன்றேல் செல்வாக்கு எண்ணவைக்கின்றது.

விளையாட்டு மைதானத்தில் படைத்த வியத்துக சாதனைகளுக்க அப்பால் அவர் நடந்துகொண்ட விதமே ஏனைய வீரர்களில் இருந்து அவரை வேறாக தனித்தட்டில் வைத்து அழகுபார்க்க வைக்கின்ற து. இதற்கு ஒய்வுபெற்ற பின்னர்; ஆற்றிய உணர்ச்சிமயமான உரையே ஓர் சான்றாகும். பிரித்தானியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி பிரமுகர்களிலர ஒருவராக விளங்கும் பியர்ஸ் மோர்கன் ' ஒரு விளையாட்டு வீரரால் நிகழ்த்தப்பட்ட மிகச்சிறந்த பிரியாவிடை உரை' என சச்சினின் உரையைப் பாராட்டியிருந்தார். இதே கருத்தினை இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் ஆமோதித்திருந்தனர். சச்சினின் திறமை வெளிப்பாட்டுடன் அவரது பணிவே அவரை ரசிகர்களின் இதயச்சிம்மாசனத்தில் ஏற்றிவைத்திருக்கின்றது. 

பிரியாவிடைஉரையில் தனது கிரிக்கட் வாழ்வில் பெற்றோர் குடும்பத்தினர் நண்பர்கள் வீரர்கள் உடற்பயிற்சியாளர்கள் ஊடகத்துறையினர் மற்றம் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரின் வகிபாகங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்;ந்த விதம் மட்டுமன்றி தாம் செய்யத்தவறிய கடமைகளை குறிப்பாக பிள்ளைகளின் வாழ்வில் தவறவிட்ட தருணங்களையும் கூறித்தவறவில்லை. அதே போன்று 2004ம் வுநnnளை நுடடிழற  முழங்கை உபாதை ஏற்பட்ட தருணத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கை அத்துடனேயே அஸ்தமித்து விடுமா எனப் பயந்த தருணங்களை எவ்வித ஒளிவுமறைவின்றி சச்சின் குறிப்பிட்டிருந்தார். அந்த தருணத்தில் தனது மகனின் கிரிக்கட் பையைக் கூட தூக்கும் பலம் தனக்கிருக்கவில்லை என சச்சின் ;கூறியபோது அவரது ரசிகர்கள் கண்கள் கண்ணீர்க்குளமானதை தொலைக்காட்சித் திரைகள் காண்பித்தன.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து சச்சினின் முழுமையான ஓய்விற்கு பின்னர் இந்திய அணி பங்கேற்கும் முதலாவது சர்வதேசப் போட்டி மேற்கிந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியுடன் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கின்றது. டோன் பிரட்மனுக்கு பின்னர் உலகில் தோன்றிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உலகின் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் பிரியாவிடைபெற்ற பின் இந்திய அணி கால்பதிக்கும் இந்தப் போட்டியை சச்சினின் சகாப்தத்திற்கு பின்னரான போட்டியென ரசிகர் அழைப்பதில் தவறேதும் இல்லை.

சாதனைகளாலும் அதற்கான விருதுகளாலும் நிறைந்த சச்சின் டெண்டுல்க    ருக்கு இந்திய அரசாங்கம் நாட்டுப்பிரஜையொருவருக்கு வழங்கப்படும் மிக உயர்;ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்கிகௌரவப்படுத்தியுள்ளமையை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கட் களத்திலும் புரிந்த ஒப்பற்ற சாதனைகள் அதற்கு வெளியில் சிறந்த முன்மாதிரியாக நடந்து நாட்டிற்கு பெருமை சேர்த்தமை உட்பட பலகாரணங்களை சச்சினுக்கான விருதிற்கான தகைமைகளாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

விளையாட்டுக்கலாசாரமே இந்தியாவில் பிரபல்யமின்றி இருந்த போது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் ஹொக்கி விளையாட்டில் பதக்கங்களை வென்றுதந்த தயான் சந்த் ஐந்துமுறை சதுரங்க உலக சம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருக்கு வழங்காமல் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் காஸ்கிரஸ் கட்சி பாரத ரத்னாவை வழங்கிவிட்டதாக விமர்சனங்கள் வந்துள்ள போதிலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உச்ச ஆற்றலை வெளிப்படுத்தி நூறுகோடிகளைக் கடந்த இந்திய ரசிகர்களாலும் உலக ரசிகர்களாலும் கொண்டாடப்படும் சச்சின் அதற்கு தகுதியானவர்; என்பதே பலரதும் கருத்தாகும்.

அடுத்ததாக சச்சின் என்ன செய்யப்போகிறார்? இதுவே அனைத்து ரசிகர்கள் முன்பாகவும் உள்ள கேள்வியாகும். சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப்பார்க்க முடிகின்றது ஆனால் கிரிக்கெட் இல்லாத சச்சினை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை என அவரது மனைவி அஞ்சலி கூறியிருந்தார். கிரிக்கெட் மீது அளவுகடந்த பிரியம் வைத்துள்ள சச்சின் ஒரு பயிற்றுவிப்பாளராகவோ வர்ணனையாளராகவோ வரக்கூடும் என்ற கருத்துக்கள் இருந்தாலும் 24 ஆண்டுகளாக விளையாடிய எனக்கு எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்க 24 நாட்களேனும் தேவை என சச்சினே கூறியுள்ள நிலையில் அவரது அறிவிப்பு வரும்வரை பொறுத்திருப்போம்.

Monday, July 1, 2013

Neymar

The new footballing sensation

Mandela - irreplaceable Hero

When you hear the name of Nelson Mandela, you will feel a sense of fulfillment.

Sunday, June 23, 2013

சம்பியன் கிண்ணத்தை வெல்லப்போவது யார்?அட்டகாச இந்தியாவா ? ஆர்ப்பாட்டமில்லா இங்கிலாந்தா?

கிரிக்கட் உலகின் முன்னணி எட்டு அணிகள் பங்கேற்கும் சம்பியன் கிண்ணத் தொடர்- 2013 ன் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஜிஎம்ரி நேரப்படி காலை 9.30ற்கு இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இறுதிப்போட்டியில் நடப்பு உலகச் சம்பியன் இந்தியா போட்டிகளை நடத்தும் கிரிக்கட்டின் தாயகமான இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.


இந்திய அணியைப்பொறுத்தமட்டில் அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக திறமைகளைப்பறைசாற்றி இந்த தொடரில் கம்பீரமாக எழுந்துநிற்கின்றது.கடந்த தடவை இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ற் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஊடகங்கள் (குறிப்பாக வட இந்திய ஊடகங்கள்) மற்றும் முன்னாள் வீரர்கள் கிரிக்கட் (அறப்)படித்த பண்டிதர்களிடம் இருந்து கடும் விதிமர்சனங்களை எதிhர்நோக்கி வந்த அணித்தலைவர் மகேந்திர சதிங் டோனி என்றும் போல எதையுமே பொருட்டில் கொள்ளாமல் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியும் நிதானமும் நிறை ந்து தலைமைத்துவத்தை வழங்கியமையே இந்திய அணியின் வீறு நடைக்கு முக்கிய காரணம்.



 அதிலும் ஐ பி எல் போட்டிகளி களின் போது இடம்பெற்ற சூதாட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் வெளிவந்த செய்திகள் என எண்ணற்ற நடந்தும் இந்த அளவில் இடைவிடாத வெற்றிகளை குவித்தமை வெற்றிகளை பெற்றதிலும் பார்க்க அதை பெற்ற அசத்தலான துணிகரமான பாங்கானது டோனியின் மீதான மதிப்பையும் வியப்பையும் அதிகமாக்கிவிட்டுள்ளது.


இந்திய அணியின் வெற்றிநடைக்கு ஷீகார் தவானின் அசத்தலான துடுப்பாட்டம் முக்கிய காரணம். தவானின் தாண்டவம் தொடர்ந்தால் இங்கிலாந்தின் வெற்றிக் கனவு வெகுதூரமாகிவிடும். நீண்டநாட்களாக விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து தனது திறமைகளை சர்வதேச அரங்கில் வெளிக்காட்ட லாயக்கில்லாதவராக கருதப்பட்ட ரோஹித் சர்மாவின் துடுப்பிலிருந்தும் ஓட்டங்கள் குவிவது இந்திய அணியின் முன்வரிசையை பெரிதும் பலப்படுத்திவிட்டுள்ளது. இதனைத்தவிர வீராட் ஹோலியின் தொடர்ச்சியான முன்னேற்றம் இந்திய அணிக்கு மிகுந்த அனுகூலத்தை கொடுத்துள்ளது. டினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு உள்வாங்கப்பட்டமை டோனியின் தீர்மானமெடுக்கும் வகிபாகத்திற்கு காட்டக்கூடிய மிகச்சிறந்த சான்றாகும். அதேபோன்று சுரேஷ் ரெய்னா  அற்புதமாக தனது மத்திய வரிசைப்பணியை மேற்கொள்கின்றார் .


 பல்வேறு நக்கல்களுக்கும் நளினங்களுக்கும் அவமானத்திற்கும் உட்படுத்தப்பட்ட ரவீந்திர ஜடேஜாவை நம்பி முழுமையாக தட்டிக்கொடுத்தன் மூலம் டோனி தான் சிறந்த தலைவர் என்பதை அனைவருக்குமே உணர்ந்திக்கொண்டிருப்பதுடன் சில வெறித்தனமான வெறுப்பையே கக்கும் விமர்சகர்களைக் கன்னதில் அறைந்திருக்கின்றார்.

 பந்துவீச்சு என்றுமே இந்தியாவின் பலவீனமாக பார்க்கப்பட்ட ஒரு விடயம் . ஆனால் இம்முறை இந்திய பந்துவீச்சு எதிரணிகளின் உயிர்மூச்சையே நிறுத்தும் படியாக  கொஞ்சம் ஒவராக சொல்லிவிட்டேன் என நினைக்கின்றேன். எதிர்கை மோனைக்காக அதை சேர்ந்துக்கொண்டேன் .

ஆனால் உண்மையாகவே இந்திய பந்துவீச்சு உச்சநிலையில் உள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். என்றுமே அலட்டிக்கொள்ளாமல் தனது பணியை செவ்வனே செய்யும் ரவிச்சந்திரன் அஷ்வின் பக்கத்து வீட்டு பையனைப்போல இருந்து கொண்டே தனது மிதவேகஷ ஸ்விங் பந்துவீச்சால் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் புவனேஷ் குமார் இவர்களுடன் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த சர்மா என பந்துவீச்சாளர்களின் பவர்வுல் பர்போமன்ஸ்களால் இந்திய அணி இன்றைய போட்டியில் ஒருபடி மேலே கையோங்கியுள்ளது.


இலங்கை அணியுடனான போட்டியின் நிறைவில் அணித்தலைவர் டோனி கூறியது போல உலகின் முன்னணி களத்தடுப்பு அணியாக இந்தியா திகழ்கின்றது என்ற கூற்று வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தினாலும் தவான் ரோஹிட் வீராட் தினேஷ் சுரேஷ் ஜடேஜா ஆகிய இளம் களத்தடுப்பாளர்களைக் கொண்ட அணியை உயர்வாகவே வைக்கத்தோன்றுகின்றது.


 2007 ICC World Twenty20, the CB Series of 2007–08, the 2010 Asia Cup and the 2011 ICC Cricket World Cup வரிசையில் சம்பியன் கிண்ணமும் சேர்ந்துகொண்டால்  அது டோனியின் தலைமைத்துவத்தின் மதிப்பை மேலும் உயர்த்திவிடும் என்பது திண்ணம்.


இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை தாயகத்தில் காலநிலை அனுகூலத்தை சரியாகப்பயன்படுத்தி டெஸ்ட் துடுப்பாட்ட பாணியை பின்பற்றியே இறுதிப்போட்டிவரை வந்துவிட்டது. ஜேம்ஸ் அண்டர்சனின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு அணித்தலைவர் அலிஸ்டெயார் குக்கின் நிதானமிக்க ஓட்டக்குவிப்பு இயன் பெல்லின் இயல்பான ஆட்டத்திறன் இயன் மோர்கனின் புதினத்துடன் கூடிய நவீன துடுப்பாட்ட ஆற்றல் வெளிப்பாடு ஸ்டுவர்ட் போர்ட்டின் பந்து வீச்சு என்பன இங்கிலாந்து அணியின் பலமாக இருந்தாலும் தற்போதைய நிலையில் இந்திய அணி இருக்கும் ஃபோர்மைப்பார்க்கும் போது நாணயச்சுழற்சியும் காலநிலையும் கைகொடுத்து இங்கிலாந்தின் பந்துவீச்சு பிரகாசித்தாலே தவிர இந்திய அணியின் வீர வெற்றிப்பவனியை தடுத்துநிறுத்துவது இயலாது .

தமது அணிதான் வெல்லவேண்டும் என இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளின் ரசிகர்கள் கனவுகண்டு கொண்டிருக்க கடைசியில் காலநிலை காலைவாரிவிட்டால் 2002ல் போன்று இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதிபெற்ற இரு அணிகளுமே இணைச் சம்பியன்களாகும் வாய்ப்பும் இங்கிலாந்தின் காலநிலையின் படி நடந்தாலும் நடந்துவிடலாம். இந்தப் பதிவை கடந்த ஒராண்டு காலத்திற்கு பின்னர் நான் முதற்தடவையாக பதிவுசெய்கின்றேன். எழுத்தில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் .நிறைகள் இருப்பின் மீண்டும் நான் எழுதநினைத்ததை எண்ணி ஒருமுறை மனத்திற்குள் மௌனச்சிரிப்பை வெளிப்படுத்துங்கள். நன்றி மீண்டும் இன்றுமொரு பதிவில் சந்திக்கும் வரை.....