Wednesday, January 18, 2017

சர்வதேச நியமங்களின் படி மாற்று 'பயங்கரவாத' சட்டம் வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து




தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டுமென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான கரிசனையாக அமைந்துள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங்-லை-மார்க் தெரிவிக்கின்றார்.

2010ம்ஆண்டில் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நிறுத்தப்பட்டபோதும் இவ்விடயமே முக்கியமாக ஆராயப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


இலங்கைக்கு மீண்டுமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு பரிந்துரைதுள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தீர்மானம் தொடர்பில் இணங்குவதா இல்லையா என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும் ஐரோப்பிய பேரவை அமைச்சர்களும் தீர்மானித்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் எனக்குறிப்பிட்ட அவர் எதிர்வரும் மார்ச் 12ம்திகதி அன்றேல் மே 12திகதி இதுதொடர்பிலான இறுதிமுடிவு தெரிந்துவிடும் எனவும் அவர் விளக்கமளித்தார். 


இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குதற்கு ஆதரவாக ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில் இலங்கையிலுள்ள ஊடகமொன்றிற்கு வழங்கிய முதலாவது செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 






இலங்கையின்  பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக ஏற்றுமதித்துறைக்கு மிகவும் முக்கியத்துவமானதொன்றாக காணப்படுகின்ற ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு சாதகமான முறையில் ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரைசெய்துள்ளது. இந்தத்தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாக ஏன் ஆணைக்ழுவானது பரிந்துரை செய்தது எதற்காக? 


இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆதரவாக பரிந்துரை செய்துள்ளது, இது நடைமுறையின் முடிவிடமல்ல. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல்வேறு விடயங்களில் நடைமுறைக்கிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் நல்லாட்சி மற்றும் பேண்தகு அபிவிருத்தி விடயத்தில் காணப்பட்ட முன்னேற்றங்களுடன் இந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான தீர்மானம் தொடர்புபடுத்தி நோக்கப்பட்டது. தற்போதைய தறுவாயில் இலங்கைக்கு மீண்டுமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்கமுடியும் என பரிந்துரைக்க ஆணைக்குழு தீர்மானித்தமைக்கான காரணங்களாகும்.

கடந்த வருடம் முதல் உண்மையில் அதற்கு முந்திய வருடம் முதற்கொண்டு இலங்கை மறுசீரமைப்பு பாதையில், நல்லாட்சியின் பாதையில், நல்லிணக்கத்தின் வழிமுறையிலும் மனித உரிமைகள் மட்டுமன்றி பேண்தகு அபிவிருத்தி மற்றும் தொழிலாளர் தராதரம் தொடர்பான பல சர்வதேச சாசனங்களை அங்கீகரித்து அவற்றை நடைமுறைக்கு இடுவதற்கு எடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் அவதானமான ஐரோப்பிய ஆணைக்குழுவின் மதிப்பீட்டுடன் தொடர்புடையதாகவே இலங்கைக்கு மீளவும் ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது




மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளமைக்கும் உண்மையிலேயே அது நடைமுறைச்சாத்தியமாவதற்கும் இடையிலுள்ள நடைமுறைக் காலப்பகுதியாது?

 நாம் தற்போது முதலாவது கட்டத்தில் தான் இருக்கின்றோம். ஆனால் இது முக்கியமான கட்டம் ஏனெனில் இந்த சாதகமான பரிந்துரை இல்லாவிட்டால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியாது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுடன் இணங்கிச் செல்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பேரவை அமைச்சர்களும்( EU Council of ministers ) இன்னமும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்தக்காலப்பகுதியில் அவர்களுக்கு இன்னமும் சந்தேகம் இருக்குமிடத்து அவர்கள் மேலும் இரண்டு மாதங்கள் கால அவகாச நீடிப்பைக் கோர முடியும். அந்தவகையில் இந்த நடைமுறையின் ( இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதா இல்லையா) முடிவானது மார்ச் மாதம் 12ம்திகதி இடம்பெறலாம். இல்லாவிடின் மேலும் இருமாதம் கால அவகாலம் கோருமிடத்து மே மாதம் 12ம்திகதி இந்த நடைமுறை முடிவிற்கு கொண்டுவரப்படலாம்.

இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்தமை தொடர்பான அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் மனித உரிமைகள் விடயம் உட்பட முக்கிய விடயங்கள் சிலவற்றின் மீது கரிசனைகள் காணப்படுவதாகவும் அரசாங்கம் இன்னமும் செய்யவேண்டியுள்ளது எனச்சுட்டிக்காட்டியுள்ளீர்கள்? அரசாங்கம் உங்கள் கரிசனைகள் விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்பது தொடர்பில் எவ்வளவு நம்பிக்கையுடையவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்?


முதலில் நீங்கள் இந்த நடைமுறை ( இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கும் நடைமுறை) தொடர்பாக நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். நடைமுறையின் படி இலங்கைக்கு மீண்டுமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான காலம் கனிந்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவானது பரிந்துரைத்துள்ளது. இருந்தபோதிலும் இது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தினாலும்  ஐரோப்பிய ஒன்றிய பேரவையின் அமைச்சர்களாலும் மீள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படவேண்டியுள்ளது. இது உண்மையில் அர்த்தப்படுத்துவது யாதென்றால் அனைத்து கரிசனைகள் விடயத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டாகிவிட்டது என்பதாகிவிடாது. ஆனால் இந்த விடயங்களில் போதுமான முன்னேற்றங்கள் எய்தப்பட்டுள்ளன. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்கிய பின்னரும் கூட இந்த முன்னேற்றங்கள் கண்காணிக்கப்படவேண்டியவையாக அமைந்துள்ளன. அந்தவகையில் இது தற்போதும் முன்செல்கின்ற நடைமுறையாகும். இது அடுத்துவரும் ஆண்டுகள் பலவற்றிலும் தொடர்ந்திருக்கும். வரிச்சலுகைகள் நடைமுறையில் இருக்கும் வரையில் கண்காணிப்பு இருந்துகொண்டிருக்கும். அந்தவகையில் அரசாங்கம் ( வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்புக்கள் தொடர்பில்) நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக காலமும் அழுத்தமும் கையாளப்படுதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த அரசாங்கம் எம்மிடம் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்புக்களை நிறைவேற்றும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். 


ஆனால் அண்மைக்காலமாக அரசாங்கம் வெளிப்படுத்திவருகின்ற கருத்துக்களானது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள், வெளிக்காண்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புக்களில் இருந்து பின்வாங்குவதாக அன்றேல் நேர்மறையாக காணப்படுகின்றதே. குறிப்பாக பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கத்திலுள்ளவர்கள் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனவரியில் வரைவு யாப்பு சமர்பிக்கப்படு;ம் என அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும் தற்போது அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைகளை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

இலங்கைக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வெளிப்படுத்தப்படுகின்ற எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக நாம் அரசாங்கத்திடம் அதிகமாக கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கின்றோம். நீங்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக குறிப்பிட்டீர்கள். உண்மைதான் நாங்கள் முன்னேற்றமானது காலம் கடந்தன்றி விரைவாகவே வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பைக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இது ஒரு சிக்கலான நடைமுறை என்பதையும் நாம் புரிந்துகொள்கின்றோம். இங்கிருப்பது ஒரு கூட்டணி அரசாங்கம் அவர்கள் மக்கள் முன்னர் பகிரங்கமாக செல்லும் முன்னர் சில சூழ்நிலைகளை அவர்கள் சந்தித்து சரிசெய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது. இன்னமும் செய்யப்படவேண்டிய விடயங்களில் பார்க்க தற்போதைய நிலையில் அதிகமான முன்னேற்றங்கள் எமக்கு தென்படுகின்ற எதனைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்த மதிப்பீட்டை ஆணைக்குழுவான 27 சர்வதேச சாசனங்களின் (International convetions) அடிப்படையிலேயே எடுத்துள்ளது. இந்தக்கட்டத்தில் இலங்கைவிடயத்தில் பாதகமாக அன்றி நிலைமைகள் நன்றாக இருக்கின்றன என்ற காரணத்தினாலேயே ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது. 



கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்போது இலங்கையில் மனித உரிமைகள் நல்லாட்சி சட்டத்தின் ஆட்சி போன்ற விடயங்களில் பல்வேறு கரிசனைகளை வெளியிட்டிருந்தனர். அந்த விஜயம் இடம்பெற்று மூன்று மாதங்களில் எப்படி இப்படியொரு தீர்மானத்தை ஐரோப்பிய ஆணைக்குழு எடுத்தது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?


நான் சரியான முறையில் நினைவுகூருமிடத்து கடந்த ஒக்டோபரில் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவும் அந்தவகையிலேயே முன்செல்வதைக்காண விரும்புகின்றது என நான் நினைக்கின்றேன். அரசாங்கம் சரியான தடத்தில் பயணிக்கின்றதா என பல்வேறு விடயங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆணைக்குழுவானது மதிப்பீட்டை மேற்கொண்டிருந்தது. அனைத்துமே எவ்வித குறைகளுமற்று நேர்த்தியாக உள்ளதென எவருமே கூறவில்லை. இந்த நடைமுறையின் நோக்கமும் அதுவல்ல. முக்கியமான விடயங்களில் குறிப்பிடத்தக்க தோல்விகள் இல்லையென காண்பதே நோக்கமாகும். மதிப்பீடுகளின் அடிப்படையில் முக்கியமான விடயங்களில் எவ்வித தோல்விகளும் இல்லை என்பதை ஆணைக்குழுவானது தீர்மானித்தது. அதேவேளை மேலும் முன்னேற்றம் காணப்படவேண்டும் எனவும் அது பரிந்துரைத்துள்ளது. தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றம் வேறு கோணத்தில் இதனை நோக்கலாம். மேலும் பலவிடயங்கள் செய்யப்படவேண்டும் என கருதலாம். அடிப்படையில் நோக்குகையில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு போதுமான முன்னேற்றத்தை இலங்கை காண்பித்துள்ளது என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும். ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் வழங்கப்படுமிடத்து அதனை கண்காணிப்பதற்கு மிகவும் கடுமையான கண்காண்காணிப்பு பொறிமுறையானது நடைமுறைக்கிடப்படும் என்பதை நான் கூறிவைக்க விரும்புகின்றேன். முன்னேற்றம் தொடர்;ச்சியாக ஈட்டப்படுகின்றதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு இடம்பெறும். நாடாளுமன்ற தூதுக்குழுவினர் வந்தபோது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள சட்டம் தொடர்பாக அவர்கள் கடுமையான கரிசனைகளைக் கொண்டிருந்தனர். அத்தோடு குற்றவியல் ஒழுக்கக் கோவை (உசiஅiயெட உழனந ழக pசழஉநனரசந) தொடர்பிலுமம் கரிசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அப்போது வெள்ளைக்காகிதமே இருந்தது. அரசாங்கத்திடமிருந்து எவ்வகையான உறுதிமொழிகளும் அர்ப்பணிப்புக்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அப்போது பாரதூரமான கரிசனை இ;வ்விடயத்தில் காணப்பட்டது. இதன்காரணமாகவே அந்தநேரத்தில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் சற்றே காரமானதாக விமர்சனத்திற்குரியதாக இருந்தது. அதன்பின்னர் பிரதமர் பிரசல்ஸிற்கு வந்தவேளையில் தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பயங்கர வாத தடைச்சட்ட விடயத்தில் எதிர்காலத்தில் வரையப்படும் சட்டமானது சர்வதேச மனித உரிமை நியதிகளுக்கு அமைவாக காணப்படும் என உறுதிவழங்கியிருந்தார். 




இது இந்த நடைமுறையின் முடிவல்ல என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறினேன். இது ஒரு படிக்கட்டு மாத்திரமே. இந்த ஒரு படி நகர்வானது ஐரோப்பிய ஆணைக்குழுவின் மிகவும் அவதானமான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளது. நீங்கள் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினரின் விஜயத்தை குறிப்பிடுகின்றீர்கள். ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுடன் இணங்கிச் செல்வதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியது அவர்களுக்குரிய பொறுப்பாகும். ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுடன் இணங்காதிருக்க அவர்கள் முடிவெடுத்தால் அது பிரச்சனையாகும். இருந்தபோதும் ஐரோப்பிய பாராளுமன்றமும் கூட நடைமுறையில் நம்பிக்கை வெளிப்படுத்தும் என நான் நம்புகின்றேன். 


கடந்த நவம்பர் மாதத்தில் யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான நிகழ்ச்சித்திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இன்னமும் சித்திரவதையும் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக ஆணித்தரமானமுறையிலே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையிலே ஐரோப்பிய ஆணைக்குழுவின் தீர்மானமானது குழப்பகரமானதாக அமைந்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அவதானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கைகழுவிவிடுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக உடனடியாக சட்டமொன்று கொண்டுவரப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து நான் முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். ஏனெனில் 2010ம் ஆண்டில் ஜிஎஸ்பி வரிச்சலுகையானது விலக்கிக்கொள்ளப்படுவதற்கான முக்கியமான காரணங்களிலொன்றாக இது அமைந்திருந்தது. இந்த சட்டமே பல்வேறு துன்பகரமான முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு வழிசமைத்தது. இதன் காரணமாகவே புதிய சட்டமானது சர்வதேச மனித உரிமைத்தராதரங்களுடன் ஒன்றியதாக அமையவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். நான் பிரதமரைச் சந்தித்தபோது யாதார்த்தத்துடன் இணைந்ததான பொறிமுறையொன்றை உள்ளடக்குவது பற்றி எனது யோசனைகளை சமர்ப்பித்திருந்தேன். பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுயாதீன மீள்பரிசீலனையாளர் நியமனம் குறித்து அவதானம் செலுத்தினோம். நாட்டிலுள்ள அனைத்து வழக்குகளின் முறைப்பாடுளையும் பார்வையிடுவது அதுதொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைகளைச் செய்வது அத்தோடு பொது அறிக்கைகளi தயாரிப்பது போன்ற விடயங்களை அவரால் செய்யக்கூடும். இது தவறான நடைமுறைகiளை கையாள்வதற்கான மிகவும் வலுவான பொறிமுறையாக இருக்கும் என நாம் உணர்கின்றோம். அத்தோடு அரசாங்கமானது புதிய நல்வழிமுறைகள் கோவையை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நான் யோசனை முன்வைத்திருந்தேன்.


உங்களின் கருத்துக்களை நோக்குமிடத்து இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்களில் முன்னேற்றங்களைக் காண்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் அரசியல் தீர்வு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்ற விடயங்களில் இலலங்கை அரசாங்கம் இன்னமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்கவில்லையே. இந்த எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றும் என்பது தொடர்பில் எத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்கள்?





இந்த நாடு மிகவும் கடினமான கடந்தகாலத்தை கடந்து போயுள்ளது என்ற விடயம் எம் அனைவரது உள்ளங்களிலும் பதிவாகியுள்ளது. ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்றது முதலாக தீவிரமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதை நாம் கவனத்திலெடுத்துள்ளோம். வெறுமனே அர்ப்பணிப்பு மாத்திரமன்றி காத்திரமான நடவடிக்கைகள் பலவும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பிக்கையை நம்மத்தியில் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புதிய அரசியல்யாப்புவிடயத்தில் நியாயமான பெறுபேறு கிடைக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் நியாயமான முடிவு எய்தப்படவேண்டும்.  ஏனெனில் இந்த வழிமுறையானது இலங்கையில் நின்று நிலைக்கும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் உறுதிப்படுத்தும் என நாம் நம்புகின்றோம். இந்தத் தருணத்தில் எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளையும் அர்ப்பணிப்புக்களையும் அரசாங்கம் நிறைவேற்றமாட்டாது என நம்புவதற்கு என்னைப்பொறுத்தவரையில் எந்தக்காரணமும் கிடையாது. நாங்கள் எதிர்பார்ப்பதைப் போன்று சில விடயங்கள் விரைவாக முன்னகராமல் இருப்பது தொடர்பிலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் நான் அறிந்துள்ளேன். ஆனால் தற்போது முன்னெடுக்கப்படும் நடைமுறையிலும் இறுதியாக அடையக்கூடிய பெறுபேற்றிலும் நான் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளேன். 






​​==========================================​

Tuesday, January 17, 2017

சமஷ்டி ஒற்றையாட்சி என்ற வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்காதீர்கள்- கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண



சமஷ்டி ஒற்றையாட்சி என்ற வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்காமல் பிளவுபடாத நாட்டிற்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது எப்படி என்பது குறித்தே புதிய அரசியல்யாப்பில் கவனம்செலுத்தப்படவேண்டும் என அரசியல்யாப்பு வழிகாட்டுதல்குழுவின் அங்கத்தவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண கூறுகின்றார். 


நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்



 புதிய அரசியல்யாப்பு உருவாக்க பணிகளில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றவரும் அரசியல்யாப்பு வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினரும் லங்கா சமசமாஜ கட்சியின் அங்கத்தவரும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான அரசியல்யாப்பு நிபுணர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ணவுடனான நேர்காணல் 


புதிய  அரசியல்யாப்பை தயாரிப்பது தொடர்பில் உண்மையான நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருக்க வில்லை எனவும் ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாகவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சில தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை உங்களுடைய குழு
​ ​
எங்ஙனம்நோக்குகின்றது
​?


அங்கே அப்படியொரு குழு கிடையாது. என்னுடைய குழுவொன்று எதுவும் இல்லை. வழிகாட்டுதல் குழுவின் தனிப்பட்ட அங்கத்தவராகவே நான் இருக்கின்றேன்.இதனை முன்னெடுப்பதற்காக அரசியல் யாப்பு சபையில்  அரசாங்கம் தீர்மானத்தை முன்வைத்தது.அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் எளிதான விடயமாக அமைந்துவிடாது 
​.​
அனைவரும் ஒற்றுமையுடன் தமது கவனத்தைக் குவித்து இதனை நிறைவேற்றவேண்டும். ஆனால் நீங்கள் இதனை ( ஏமாற்றுவேலையாக) அனுமானிக்க முடியாது. இருதரப்பிலுமுள்ள கடும்போக்குகாளர்கள் தீர்வை விரும்பவில்லை. தெற்கிலுள்ள கடும்போக்காளர்களும் தீர்வைவிரும்பவில்லை. வடக்கிலும் புலம்பெயர்நாடுகளிலுமுள்ள கடும்போக்காளர்களும் தீர்வை விரும்பவில்லை. இருதரப்பினரும் மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் துணைபோய்க்ககொண்டிருக்கின்றனர். 

-

மத்திக்கும் மாகாணங்களுக்குமான உறவுநிலை  தொடர்பான உபகுழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நாட்டைத்தூண்டாடக்கூடிய சரத்துக்களைக் கொண்டுள்ளதென தெற்கில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகி
​​
ன்றன.இந்த நிலையில் புதிய அரசியல் யாப்பு சாத்தியமா என்ற சந்தேகம் தமிழர் தரப்பில் எழுந்துள்ளது?

​(​
நாட்டை பிரிக்கப்போகிறார்கள் என்பது புதிய கதையல்ல, அதிகாரங்களை பகிர்வதற்கு விருப்பமில்லாத சிலர் பல்வேறு கதைகளை பரப்பி வருகின்றர். அது தொடர்பில் தமிழ் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. தனிநாட்டை கோருபவர்கள் தமிழர்கள் மத்தியிலும் இருக்கின்றார்கள். சமஷ்டி அல்லது கூட்டாட்சியை கோருபவர்களும் இருக்கின்றார்கள். அவ்வாறு கருத்துக்கள் வெளியாகும் போது தெற்கில் உள்ள மக்கள் குழப்பமடைவார்கள். இவ்வாறான இனவாதிகள் தெற்கிலும் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே பிரிவினைவாதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதை கேட்டு தெற்கில் உள்ளவர்கள் அச்சமடைவார்கள் எனினும் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எனினும் மத்திக்கும் மாகாணத்திற்கும் உள்ள உறவுநிலைதொடர்பான குழுவிடமிருந்து சிறப்பான அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. சிலர் தமக்கு அளிக்கப்படாத பொறுப்புக்குறித்தும் பேசியுள்ளனர். வழிகாட்டுதல் குழுவில் கூறிய விடயங்களை அவர்கள் கூறியுள்ளனர் என்பது உண்மை. அது பரவாயில்லை. வழிகாட்டுதல் குழு முக்கிய விடயங்களைத் தீர்மானிக்கும். வழிகாட்டுதல் குழுவினால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கைக்கு அமையவே மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்த அறிக்கையை படிக்கவேண்டும். இது தொடர்பில் உணர்ச்சிவசப்படக்கூடாது. இதனை எதிர்பார்க்கவேண்டும். தமிழ்தரப்பு கடும்போக்காளர்கள் விடயங்களைத் கூறும்போது சிங்களத்தரப்பினர் உணர்ச்சிவசப்படுகின்றனர். அதுபோன்று சிங்களத்தரப்பு கடும்போக்காளர்கள் கூறும்போது தமிழ்த்தரப்பினர் உணர்ச்சிவசப்படுகின்றனர். தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் தங்களை போசித்துக்கொள்கிறார்கள்.
​)​





புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தெற்கிலுள்ள அரசியல் தலைவர்கள் பலரும் தற்போது மேடைகளில் உறுதிகளை வழங்கிவருகின்றன. ஒற்றையாட்சி கட்டமைப்பு பேணப்படும் . பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறுகின்றனர்.அண்மையில் ஜனாதிபதி கூட பௌத்த பீடங்களுக்கு சென்று இந்த வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். மறுமுனையில் சமஷ்டித் தீர்வு வேண்டும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக்கூடாது போன்ற விடயங்களை தமிழ்த்தரப்பு வலியுறுத்துகின்றது. இதனை எவ்வாறு உங்கள் குழு கையாளப்போகின்றது.?




​(​
இல்லை இல்லை தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை
​.​
 ஒருவேளை அவர்கள் சமஷ்டி எண்ணக்கருவை மனதில் கொண்டிருக்ககூடும். சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி என்ற  வார்த்தைகளில் சிக்குண்டு கிடப்பதே
​​
 மக்களிடமுள்ள பிரச்சனை
​. ​
 நீங்களும் அதே தவறையே
​ ​
செய்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அந்த வார்த்தைகளில் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. தெற்கில் உள்ள மக்கள் சமஷ்டி என்றால் நாட்டை பிரிப்பது என எண்ணுகின்றார்கள். ஒரே நாட்டிற்குள் அதிகாரங்களை பகிர்வதே தற்போதைய தேவை. சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்ற வார்த்தைகளை விடுத்து வித்தியாசமான மக்களுக்கு வித்தியாசமான விடயங்களை செய்ய வேண்டும். பெரும்பாலான சிங்கள மக்கள் ஒற்றையாட்சியையே கோருகின்றார்கள் அவர்களிடம் அதன் பிறகு ஒற்றையாட்சி என்றால் என்னவென அடுத்து ஒரு கேள்வியை எழுப்பினால் பிரிக்கப்பாடாத நாட்டிற்குள் தீர்வு என்றே அவர்கள் கூறுவார்கள். பெரும்பாலான சிங்கள மக்களை பொருத்தவரை ஒற்றையாட்சி என்பது பிரிக்கப்படாத நாடு. மேலும் தெற்கில் பலர் சமஷ்டி என்றால் நாட்டை பிரிப்பது என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே யாப்பில் உள்ள லேபல்கள் (தலைப்புகள்) முக்கியமல்ல, அதன் உள்ளடக்கமே முக்கியமானது.
​)


பௌத்தத்திற்கு அரசியல்யாப்பில் முன்னுரிமை அளிக்கப்பவேண்டும் என்பது தெற்கிலுள்ள தரப்பினரால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சரத்து புதிய அரசியல்யாப்பில் உள்ளடக்கப்படுமிடத்து ஏனைய மதங்களும் இனங்களும் பாதிக்கப்படாதவாறு எவ்வாறு உறுதிசெய்யமுடியும்?


​(​அரசியல்யாப்பில் 
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சரத்திலேயே ஏனைய மதங்களும் அடிப்படை உரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தவிடயம் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. . இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு அமைய  இலங்கைஒரு மத சார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு இடதுசாரி என்ற அடிப்படையில்இலங்கை மதச்சார்பற்ற ஒரு நாடாக இருப்பதையே விரும்புகின்றேன். அதனை வெளிப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய பிரச்சினை அதுவல்ல. அதனை மாற்றியமைக்க முற்பட்டால் சிக்கல் ஏற்படும். பெரும்பாலான மக்கள் அதனை புரிந்துகொள்ளமாட்டார்கள். பிரச்சினைகளை ஏன் உருவாக்க வேண்டும். பதிய யாப்பு ஒன்று தேவையென்றால் விட்டுக்கொடுப்புகள் இரண்டு பக்கத்திலும் அவசியம். அனைவரும் விட்டுக்கொடுப்புடன் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்பு பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்பில் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆகவே பிரச்சினை அதுவல்ல தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அவசியம்.
​)​


--
 






அண்மையில் வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தின்  ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்கு புதிய அரசியல் சாசனம் அவசியமற்றதெனவும் தற்போதுள்ள அரசியல் யாப்பில் ஒருசில திருத்தங்களை மேற்கொண்டாலே போதும் எனவும் கூறியிருந்தார். அதிகாரப்பகிர்வு அவசியமல்ல எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். உங்களுடைய குழு  போதுமான அதிகாரப்பகிர்வை முன்வைத்துள்ளதா? 


ஆம் ​இ​நாம் சிறப்பானதொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதிகாரப்பகிர்வானது போதுமானதாகவும் அர்த்தபூர்வமானதாகவும் அமைய வேண்டும். ​ ​மத்தியிலும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் இருக்கவேண்டியது அவசியமாகும். அதன் காரணமாக முன்னோக்கி நகரவேண்டிய கடப்பாடுள்ளது.இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பிரிக்கப்படமுடியாத பிளவுபடாத நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு ஏற்பாடு இடம்பெற்றாகவேண்டும். அதிகாரப்பகிர்வு அந்த நோக்கத்தை அடைவதற்காக மட்டுமல்ல . அதிகாரப்பகிர்வானது முன்னேற்றம் காணாத ஏனைய விடயங்களுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு அவசியமாகும். ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரப்பகிர்வு தேவையாகும்.


சமூக பொருளாதார விடயங்களை முன்னெடுக்கும் போது தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரம் மத்தியிலே இருக்கவேண்டும் என்று வாதிடும் தரப்பினரும் உள்ளனர். மாகாணங்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற நிலையில் இந்த விடயத்தை எப்படிக் கையாள்கின்றீர்கள் ?இந்த விடயத்தில் எத்தகைய ஏற்பாடுகள் உங்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
?

​உதாரணமாக நோக்குமிடத்து நீர்ப்பானத்திட்டங்களைப் பொறுத்தவரையில் பாரிய திட்டங்கள் மத்திய அரசின் கீழ் 
இருந்தாகவேண்டும் என்பதில் எவ்வித கேள்விக்கும் இடமில்லை அதேவேளை சிறியளவிலான திட்டங்கள் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருக்க முடியும். இருந்தாகவேண்டும். அதேபோன்று விவசாயத்துறையை பொறுத்தவரையில் பிரதானமான கொள்கைகளும் திட்டங்களும் மத்திய அரசினால் வகுக்கப்படமுடியும்.ஆனால் நாளாவித விவசாயநடவடிக்கைகள் மாகாணத்திற்குட்பட்டதாக இருக்கவேண்டும். 
​​
சுற்றாடலை எடுத்து நோக்கினால் அதில் மாகாணத்திற்குரிய சுற்றாடல் என்றோ மத்திக்குரிய சுற்றாடலென்றோ கிடையாது. தற்போது பூகோளத்திற்குரிய சுற்றாடல் பற்றியதாகவே இன்று காணப்படுகின்றது. இவ்வாறான உப விடயதானங்களில் மத்தியும் மாகாணமும் இணைந்து பணியாற்ற முடியும்.தேசிய ரீதியான தராதரத்தை கொண்டிருப்பதானால் உதாரணமாக பாடசாலைகளை எடுத்து நோக்குமிடத்து பாடசாலைகளை மாகாணங்களை நிர்வகிக்க முடியும். ஆனால் பரிட்சைகள் பாடவிதானங்கள் போன்றவற்றை நடத்துகின்ற உருவாக்குகின்ற விடயத்தை மத்திய அரசு கையாளமுடியும் 
​.​
இதனை மத்திய அரசு மேற்கொள்ளும் போது அது மாகாணங்களுடன் கலந்துரையாடவேண்டும். இதுவொரு பங்கேற்புப் பொறிமுறையாக இருக்கவேண்டும். மாகாணங்களுடன் கலந்துரையாடும் போது அவர்கள் தேசிய கொள்கைவகுப்பில் தாமும் பங்காளர்கள் என்பதை உணர்ந்துகொள்வதற்கும் குறித்த விடயத்தில் உரிமைப்பாத்திரத்தை எடுத்துச்செயற்படுவதற்கும் வித்திடும். மத்திய அரசாங்கம் ஒரு விடயத்தை மாகாணங்கள் மீது திணிக்க முற்படும் போதே அவை அதிருப்திகொள்கின்றன.



கடந்த காலங்களிலும் அரசாங்கங்கள் புதிய அரசியல் யாப்பைக்கொண்டுவருவதற்கு முயற்சித்தன. இம்முறை  முயற்சி வெற்றியளிக்கும் என நினைக்கின்றீர்களா?

இம்முறை எனக்கு அதிகமான நம்பிக்கையுள்ளது.ஏனெனில் நாடாளுமன்றத்தில் ஐதேகவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோ சாதாரண பெரும்பான்மையோ கிடையாது. ஆனால் கூட்டாக அவர்களுக்கு தெளிவான பெரும்பான்மைப்பலமுள்ளது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவோடு அவர்கள் வரவுசெலவுத்திட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினர்.அந்தவகையில் சாத்தியமான ஏதுநிலை காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் நெகிழ்வுப் போக்கை கொண்டிருக்க வேண்டும். அனைவரும் நெகிழ்வுப் போக்குடன் நடந்துகொள்ளவேண்டும்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் அவர்கள் நெகிழ்வுப் போக்குடன் நடந்துகொண்டுள்ளார்கள். வடக்கிலும் புலம்பெயர்நாடுகளிலுமுள்ளவர்கள் நெகிழ்வுப்போக்கை கொண்டிருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஒருபோதும் நெகிழ்வுப்போக்கை கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தீர்வு கிட்டுவதை விரும்பவில்லை.  அதேபோன்று தெற்கிலுள்ள கடும்போக்காளர்களும் ஒருபோதும் நெகிழ்வுப்போக்கை கொண்டிருக்கப்போவதில்லை.  ஆனால் இடைநடுவிலுள்ள மக்கள் நெகிழ்வுப்போக்கை கொண்டிருக்க வேண்டும்.  அப்போது இதிலிருந்து உச்சபட்டமானதை எடுத்துக்கொள்ளமுடியும். 


உருவாகும் அரசியல் யாப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை.நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையே போதுமானதென சிலதரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?



புதிய அரசியல்யாப்பு எமக்கு தேவையென்றால் நாம் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதுவே தற்போதைய அரசியல்யாப்பிற்கு அமைவாக அவசியமானது. எந்தக்கட்டத்திலும் புதிய அரசியல்யாப்பென்று வரும்போது அது மக்களால்  அங்கீரிக்கப்படுவது சிறப்பானதாகும். அப்போதுதான் மக்களின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கிடைக்கும்.  அப்போது அதற்கு அதிகமான  சட்டஅங்கீகாரம்
​ (legitimacy)​
 இருக்கும். 


வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது என நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் சமஷ்டி போன்ற வார்த்தைகள் அரசியல் யாப்பில் இல்லாவிட்டால் நீதிபதிகள் எந்தக்கட்டத்திலும் மாகாணங்களுக்கு அதிகாரமில்லை
​ ​
இது ஒற்றையாட்சி கட்டமைப்பைக் கொண்டநாடு என அர்த்தம்தர முடியும் என அண்மையில் ஒரு வாதத்தை நான் செவிமடுத்திருந்தேன்.  இவ்வாறான பொருள் கோடல் ஏற்பாடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

அதிகாரப் பகிர்வை அளித்து அரசியல்யாப்பில் அதனை மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டுமிடத்து நீதிபதிகளால் அவ்விடயத்தில் பேய்க்காட்டமுடியாது. விடயங்களை மிகவும் தெளிவாக குறிப்பிடவேண்டும்.  விடயங்களில் தெளிவிருக்கவேண்டும் என்றே நான் கூறுகின்றேன். 13வது திருத்திலுள்ள சில சரத்துக்கள்  தெளிவாக இல்லை.  ஆகவே அவற்றை மிகவும் தெளிவாக குறிப்பிடவேண்டும். எமக்கு தேவையானது என்ன என்பதை நீதிபதிகளுக்கு தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக அரசியல்யாப்பில் குறிப்பிடப்பட்டால் இவ்வாறான நிலை ஏற்பாடாது. புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் போது நாம் அதனை தெளிவுபடுத்தவேண்டும். 

புதிய அரசியல் யாப்பு வரைவை உருவாக்கும் பணி இறுதிசெய்யப்பட்டுவிட்டதா?


எந்த வரைபும் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை.  இன்னமும் நாம் அரசியல்யாப்பை வரையும் பணியை ஆரம்பிக்ககூடவில்லை. ஏனெனில் பிரதானமான விடயங்களில் வழிகாட்டுதல் குழு தீர்மானங்களை எடுப்பதற்காக நாம் காத்திருக்கின்றோம்.