Sunday, August 30, 2009

“இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டுவரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்துநிற்கின்றன”

(ஓய்வுபெற்ற) லெப்டினற் ஜெனரல் வீ ஆர் ராகவன்


(அருண் ஆரோக்கியநாதர் )
மகத்தான இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டுவரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்துநிற்கின்றன என இந்தியஇராணுவத்தின் துணைத்தளபதியாக முன்னர் பதவிவகித்தவரும் தற்போது சென்னையைத்தளமாகக்கொண்ட பாதுகாப்பு ஆய்வுகளுகான நிலையத்தின் தலைவராக திகழ்பவருமான ஒய்வுபெற்ற இராணுவ லெப்டினற் ஜெனரல் வீ ஆர் ராகவன் தெரிவித்தார் இராணுவத்தினர் ஈட்டியுள்ள மகத்தான வெற்றியிலிருந்து நீண்டகாலமாக நாடிநிற்கின்ற சமாதானத்தை கொண்டுவருவது நாட்டுத்தலைவர்களதும் பிரஜைகளதும் வகிபாகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்  

கொழும்பில் இன்று ஆரம்பமான “யுத்தத்தில் வெற்றியீட்டியதிலிருந்து சமாதானத்தை வெற்றிகொள்வது’ இலங்கைச்சமூகத்தை யுத்தத்திற்கு பின்னர் மீளக்கட்டியெழுப்புதல் “ என்ற தொனிப்பொருளிலான இருநாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆரம்ப உரையை ஆற்றியபோதே அவர் இந்தக்கருத்துக்களை தெரிவித்தார்  

இந்த கருத்தரங்கினை உபாயக் கற்கைகளுக்கான பிராந்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரதம அதிதியாக இந்தக்கருத்தரங்கில் இலங்கை மற்றும் இந்தியாவைச்சேர்ந்த இராணுவ ஆய்வாளர்கள் கல்விமான்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்  

ஒய்வுபெற்ற இராணுவ லெப்டினற் ஜெனரல் வீ ஆர் ராகவன் இலங்கையின் இராணுவ வெற்றிகுறித்து கருத்துவெளியிடுகையில்  

(ஆயுத மோதல்களின் நிறைவானது மனிதப்பாதுகாப்பை உறுதிசெய்யும் நீண்டபயணத்தினை ஆரம்பித்துவைத்துள்ளது இராணுவவெற்றியினால் நாடு பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம் உங்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக உணரலாம் உங்களது பிரஜைகளும் பாதுகாப்பாக இருப்பது இன்றியமையாதது புகழ்பெற்ற இராணுவசிந்தனையாளரான கார்ல் வொன் க்ளோஸ்விற்ஷ் யுத்தத்தின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பது குறித்து கருத்துவெளியிட்டிருக்கின்றார் மோதல்களின் நோக்கம் “வெற்றி” எனக்கூறுவோமானால் அது குறுகியபார்வைகொண்ட ஒரு கூற்றாகவே அமைந்துவிடும் மாறாக யுத்தங்களதும் மோதல்களதும் நோக்கமானது வெறுமனே வெற்றியை மாத்திரமன்றி சமாதானத்தைக்கொண்டுவருவதாக இருக்கவேண்டும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு எம்மத்தியில் பல உதாரணங்கள் உள்ளன மத்தியகிழக்கில் அரபு இஸ்ரேல் மற்றும் பல உதாரணங்கள் உள்ளன அங்கெல்லாம் சிறப்பான இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டன .ஆனால் அவை சமாதானத்தைக்கொண்டுவரவில்லை.சிறப்பான இராணுவநடவடிக்கையில் வெற்றியீட்டியதன் மூலமாக வரலாற்றில் இலங்கை நாடு வரலாற்றுமுக்கியத்துவமிக்க உச்சத்தருணத்தில் உள்ளது இலங்கை இராணுவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இருந்து நாம் மிகுந்த வியப்புணர்வுடன் அவதானித்துவந்தோம் 20வருடகாலப்பகுதியில் இராணுவத்தினர் எப்படியான நிலையில் இருந்து இன்றுள்ள நிலைக்குவந்துள்ளனர் எப்போதுமே போராடுவதற்கு தயாரான குணாம்சம்கொண்ட இளமையான நவீனகரமான இராணுவமாக மோதலில் வெற்றிபெறவேண்டும் என்ற வேட்கைகொண்ட இராணுவமாக அவர்கள் மாற்றம்பெற்றுள்ளனர் ஆயுதப்படையினர் சிறப்பான பணியைச்செய்து முடித்துள்ளனர் அந்த வெற்றியிலிருந்து நாம் அனைவருமே நீண்டகாலமாக நாடிநிற்கின்ற சமாதானத்தை கொண்டுவருவது நாட்டுத்தலைவர்களதும் பிரஜைகளதும் தற்போதைய வகிபாகமாக இருக்கவேண்டும் அதனை எவ்வாறு நாம் சாதிக்கப்போகின்றோம் என்பது எமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகவுள்ளது)







உச்சக்கட்டப்பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே

( உச்சக்கட்டப்பாதுகாப்பு என்பது நாட்டின் பிரஜைகளது பாதுகாப்பே! தற்போது இந்தியாவிலும் கூட தேர்தொன்றுக்கு முன்பாக பல்வேறு கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன அப்படியாக கருத்துக்கணிப்புக்களை நடத்துபவர்களிடம் மக்களுக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயங்கள் யாது அவர்கள் உள்ளடக்கும் பத்துவிடயங்களில் ஒன்றாக தேசியப்பாதுகாப்பு என்கிற விடயத்தையும் உள்ளடக்கும் படியாக நாம் கேட்டிருந்தோம் அப்படியாக கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தடவையிலும் இந்தியப்பிரஜைகள் தமது கரிசனைக்குரிய விடயங்களடங்கிய பட்டியலில் தேசியப்பாதுகாப்பு என்பதை மிகவும் கடைசி நிலையிலேயே குறிப்பிட்டுள்ளனர் இதற்கு அவர்கள் தேசியப்பாதுகாப்புத்தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்பது அர்த்தமாகாது அவர்கள் தேசியப்பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்தியா பலமிக்கதாகவுள்ளது எமதுநாட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாது எமது நாட்டின் பாகங்களை நாம் இழக்கப்போவதில்லை எம்மிடம் மிகச்சிறந்த ஆயுதப்படையினர் உள்ளனர் என்பது தொடர்பில் இந்தியப்பிரஜைகள் மிகவும் நம்பிக்கைகொண்டுள்ளனர் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது இராணுவபலமல்ல அவர்களைப்பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பது சட்டம் ஒழுங்கு ஊழல் மோசடியற்ற தன்மை கல்வி சுகாதாரம் அவர்களது சிறார்களின் எதிர்காலம் தொழில்வாய்ப்பு என்பவையே பாதுகாப்பு அவை இல்லையென்றால் தாம் பாதுகாப்பாக இல்லை என்பதே அவர்களது உணர்வாகவுள்ளது அது உங்களைப்பொறுத்தவரையிலும் பொருந்தக்கூடிய உண்மையாகும் என்னைப்பொறுத்தவரையும் உண்மையாகும் அதனால் தான் சமாதானம் என்பதன்;அர்த்தம் என்ன என்பதை நாம் பார்க்கவேண்டும் .இலங்கையில் இந்த மகத்தான வரலாற்றுமுக்கியத்துவமிக்க இராணுவவெற்றியைத் தொடர்ந்து நாங்கள் எப்படிப்பயணிக்கப்போகின்றோம் என்பதைசிந்தித்துப்பார்க்கவேண்டும் )


Tuesday, August 25, 2009

Sunday, August 23, 2009

சாம்பலிருந்து மீண்டும் உயிர்பெறும் பீனிக்ஸ் பறவை போன்று ……..

சாம்பலிருந்து மீண்டும் உயிர்பெறும் பீனிக்ஸ் பறவை போன்று என்ற உவமானத்தை நாம் பல தடவைகள் கேள்விப்பட்டதுண்டு ஆனால் சாம்பல்(ஆஷஷ் )டெஸ்ற்தொடரில் இங்கிலாந்து அணி இம்முறை ஈட்டிய வெற்றி இதற்கு பொருத்தமானதென்றே நான் காண்கின்றேன்.

2005ல் ஆஷஷ் தொடரை தாயகத்தில் கைப்பற்றிய இங்கிலாந்து இம்முறை தொடரில் அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்ளும் என அதிகமானோர் எதிர்ப்பார்த்திருக்கவில்லை இதற்கு பலகாரணங்கள் ஒன்று காயத்தால் தொடரின் முதல்போட்டியுடனேயே கெவின் பீற்றர்ஸன் விலகியமை இரண்டாவது அன்ட்ரு பிளின்டோவின் உடற்திடநிலை பற்றிய சந்தேகம் அடுத்ததாக நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி எளிதாக சுருண்டவிதம் இவையே இம்முறை ஆஷஷ் இங்கிலாந்துக்கு இல்லை என முடிவெடுக்க தோன்றியது


சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து பிளின்டோவ் ஐந்தாவது போட்டியில் விளையாடுகின்றார் என்ற செய்தி வந்ததுமே ஆஷஷ் இம்முறை இங்கிலாந்துக்குத்தான் என்ற எண்ணம் என்மனதிலும் ஏனையரசிகர்களைப்போன்றே மேலோங்கியது ஏனெனில் பிளின்டோவ் சாதாரணவீரர் அல்ல விரல்விட்டே எண்ணக்கூடிய ஆற்றல் படைத்த அற்புதவீரர் ஏன் தலைமுறைகளுக்கு அவர் போன்று ஒரிருவீரர்களே தோன்றக்கூடும் என சொல்லுவதற்கு பொருத்தமானவர் .;
பிறயன் லாராவின் ஓய்விற்கு பின்னர் என்னவோ எனக்கு கிரிக்கட் பற்றி எழுத்தப்பிடிக்கவில்லை என்பது தனிப்பட்டவிடயம் என்னைப்பொறுத்தவரையில் வெறுமனே விக்கட்சாய்ப்பாளர்களோ ரன்குவிப்பு மெஷின்களோவல்ல கிரிக்கட்டிற்கு அவசியமானவர்கள். மாறாக அசத்தல் லாவகம் நளினம் நடனம் அட்டகாசம் ஆக்ரோஷம் போன்ற இன்னோரன்ன குணாம்சங்களையும் தம் கிரிக்கட் ஆற்றலுடன் இணைந்து வெளிப்படுத்தும் அபரிமிதமான ஆற்றலைக்கொண்டவர்களே! கிரிக்கட்டின் வரலாறை என்னைக்கேட்டால் லாராவிற்கு முன் லாராவிற்கு பின் என்றுதான் எழுதுவேன் லாராவோடு எல்லாமே முடிந்துவிட்டது என இருந்த எனக்கு கிரிக்கட்டின் மீதான ஆர்வத்தையும் பிரியத்தையும் தக்கவைத்திடக்காரணமான வீரர்களில் பிளின்டோவ்வும் ஒருவராக விளங்கினார் ஐந்தாவது ஆஷஷ் போட்டி பிளின்டோவ் விளையாடும் கடைசி சர்வதேச டெஸ்ற் கிரிக்கட் போட்டி என்றதுமே ஒருபக்கம் கவலையும் மறுபக்கம் ஆர்வமும் பற்றிக்கொண்டது இந்த ஆர்வம் இங்கிலாந்து வீரர்களிடமும் தொற்றிக்கொண்டதோ என்பதைப்போலல்லவா அவர்களது ஆட்டம் அமைந்தது
இந்தத்தொடரின் இரண்டாவது மூன்றாவது போட்டிகளில் காண்பித்த அபரிமிதமான சகலதுறை ஆற்றல்வெளிப்பாட்டை பிளின்டோவ் இம்முறையும் காண்பிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களை பிளின்டோவ் ஏமாற்றவில்லை அதற்கு ரிக்கி பொன்டிங்கின் ஆட்டமிழப்பிற்கு காரணமான அவரது அபாரமான களத்தடுப்பு சான்றுபகர்ந்தது அதுவே அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இனிங்ஸை ஆட்டங்காணச்செய்த திருப்புமுனை நிகழ்வு அதன்பின்னரோ அவுஸ்திரேலிய அணியினர் நிச்சயமான தோல்வியை தாமதிக்கவே விளையாடினார்கள் என்று சொல்வதே பொருத்தம்

அவுஸ்திரேலிய அணியில் தனது ஸ்தானம் அண்மைய வீழ்ச்சியினால் கேள்விக்குறியான நிலையில் மைக்கல் ஹஸி மனது மறக்காத சதத்தை இரண்டாவது இனிங்ஸில் பெற்றதும் இங்கிலாந்து அணியின் வெற்றியை தாமதப்படுத்தியது ஆனால் இங்கிலாந்து தோற்கடிப்போவதில்லை என்பது அனைவருக்கும் சனிக்கிழமையன்றே தெரிந்திருந்தது காரணம் அறிமுக வீரர் ஜொனத்தன் ட்ரொட்டின் அனுபவசாலிகளையொத்த மேதாவிலாசத்துடுப்பாட்டத்தால் பெறப்பட்டசதமும் அதனால் இங்கிலாந்து நிர்ணயித்த மலைபோன்ற 546ஓட்ட இலக்கும் அமைந்திருந்தது என்றால் யாருமே இருவேறுகருத்துக்களை கூற முற்படமாட்டார்கள் .

ஆகமொத்தத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் தாயகமண்ணில் ஆஷஷ் தொடரை கைப்பற்றியிருக்கின்றது என்ற செய்தி அனைவருக்குமே மகிழ்ச்சி இந்த வெற்றி கிரிக்கட்டின் ஒட்டுமொத்த அடித்தளத்தையே நீண்டநாட்களின் பின்னர் மாற்றியமைக்கப்போகின்றது என்பது உண்மை. ஏறத்தாழ ஒன்றரைத்தசாப்தங்களாக முதல்நிலையில் கோலோச்சியிருந்த அவுஸ்திரேலிய அணி நான்காம் இடத்திற்கு தள்ளப்படபோகின்றது என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டியது அதுமட்டுமன்றி அவுஸ்திரேலிய அணியில் எத்தனை தலைகள் உருளப்போகின்றனவோ ? என்பதற்கப்பால் தென்னாபிரிக்க அணி முதற்தடவையாக டெஸ்ற் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற அவுஸ்திரேலிய அணியின் தோல்வி காரணமாகிவிட்டது போராடுவதற்கு பேர்போன அவுஸ்திரேலிய அணியினர் ஒருவேளை அடுத்த தொடரிலேயே இழந்த தோல்விகளுக்கு பழிதீர்த்துவிடக்கூடும் ஆனால் உலக கிரிக்கட் ஆற்றலும் பலமும் தரமும் தற்போது அவுஸ்திரேலியாவிடம் மட்டுமே நிறைந்து கிடக்கவில்லை இங்கிலாந்து உட்பட ஏனைய நாடுகளும் அவுஸ்திரேலியாவிற்கு சவால்விடுக்கும் அளவிற்கு வளர்ச்சிகண்டு விட்டுள்ளன என்ற உண்மை நிருபணமாகியிருக்கின்றது இறுதியாக அன்று பிளின்டோவ் டெஸ்ற் கிரிக்கட்டில் இருந்து நேற்றோடு விடைபெற்றமை இங்கிலாந்திற்கு மட்டுமல்ல முழு கிரிக்கட் உலகிற்குமே பெரும் இழப்பு இருந்து அவரது சுயவிருப்பு அதுவாக இருந்தால் யார் தான் என்ன செய்யமுடியும் அவர் இதுகால வரையில் தமது மகத்தான ஆற்றல்வெளிப்பாடுகளால் அளித்த எல்லையற்ற மகிழ்ச்சியை நினைவுகூர்ந்து நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதே சாலப்பொருத்தம் என்பது எனது கருத்து

வாழ்க் இங்கிலாந்து வாழ்க பிளின்டோவ் வாழ்க கிரிக்கட்

Friday, August 21, 2009

இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது என நாம் ஒருபோதும் வாதிட்டதில்லை

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து















நேர்காணல்: அருண் ஆரோக்கியநாதர்




இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது என நாம் ஒருபோதும் வாதிட்டதில்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிக்கின்றார்.



கேள்வி :கடந்த காலத்திலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்துள்ளபோதும் தற்போது வந்துள்ள அச்சுறுத்தல் கடிதம் தொடர்பாக எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில் :
(இம்முறை ஆங்கில மொழியில் நன்கு பரிச்சயமான ஒருவரால் இந்தக்கடிதம் எழுதப்பட்டுள்ளது அந்தகடிதத்தின் உள்ளீட்டின் படி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோலொல்னருக்கு இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைமீறல்கள் பற்றிய தகவல்களை வழங்கும் முதன்மைநபராக நான் செயற்படுவதாக என்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் வரும் ஒக்டோபரில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை இலங்கை பெறாதுதடுக்கும் வகையில் நான் பரி;ந்துபேசிவருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்காரணமாக அவர்கள் என்னைப்படுகொலைசெய்யப்போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது இம்முறை ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை பெறுவது பெரும் சாத்தியமற்றது எனவும் அந்தவகையில் எப்படியாவது படுகொலைசெய்யப்படுவேன் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது )

கேள்வி : ஜி எஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை பெறக்கூடாது என நீங்கள் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா?

பதில்: ஜி எஸ் பி பிளஸ் சலுகைகளானது சர்வதேச தொழிலாளர் தரநியமங்களின் 27மனிதஉரிமைசார் சரத்துக்களை நிறைவேற்றவேண்டும் என்ற நிபந்தனையை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்துள்ளது இலங்கையில் மனித உரிமைகளை வலுப்படுத்துகின்ற அதேவேளை ஜி எஸ் பி பிளஸ் சலுகை நீடிப்பை பெறும் வகையில் அனைத்துதரப்பினருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலை சாத்தியமானது என்பதே ஐp எஸ்பி பிளஸ் விடயத்தில் மாற்றுக்கொள்கைநிலையத்தின் நிலைப்பாடாக இருந்துவந்துள்ளது இதற்கு சில தேவைகள் ப+ர்த்திசெய்யப்படவேண்டியுள்ளது சட்டவரைவுகளை இயற்றுவது உட்பட சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது இதற்கு ஆதரவு வழங்கப்படும் என எதிர்கட்சியும் கூறியுள்ளது அந்த வகையில் அது தொடர்பில் எவ்வித பிரச்சனையும் கிடையாது என்றே நான் பார்க்கின்றேன் மனித உரிமைவிடயத்தில் நீதிக்கு மதிப்பளிக்கும் விடயத்தில் ஏதேனும் சட்டரீதியான கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அன்றேல் ; இடைவெளிகள் இருக்குமேயானால் அதனை நிவர்த்தித்து மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்குள்ள சந்தர்ப்பமாக இதைக்கொள்ளமுடியும் என்பதுடன் ஜி எஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பையும் பெற்றுக்கொள்ளமுடியும் இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது என நாம் ஒருபோதும் வாதிட்டதில்லை மாறாக நாம் ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளுடாக அனைத்துதரப்பினருக்கும் வெற்றி வெற்றி என்ற தீர்வு சாத்தியம் என்பதையே வலியுறுத்திவந்துள்ளோம்

கேள்வி: ஜி எஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை இலங்கை பெறுமா?

பதில்: நேர்மையாக கூறுவதென்றால் எனக்கு இதுவிடயத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது இந்த தீர்;மானம் ஐரோப்பிய ஒன்றியத்தாலேயே மேற்கொள்ளப்படவுள்ளது அவர்களது தீர்மானிக்கும் சிந்தனைப்போக்கு தொடர்பில் உள்ளார்ந்தமான அறிவேதும் எனக்குகிடையாது

கேள்வி: வெளிநாட்டிற்கு அரசியல் தஞ்சம் பெறுவதற்காகவும் விஸாக்களைப்பெறுவதற்காகவுமே நீங்களே உங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாடகமாடுவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கள் பற்றி?

பதில் : நான் விசாவை பெற்றுக்கொள்வதற்காக நாடகமாடுவதாக யாரேனும் கூறுவார்களேயானால் அவர்கள் முதலில் ஒருவிடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் நான் வேறெங்கும் செல்லப்போவதில்லை நான் எந்தநாட்டிலும் அரசியல்தஞ்சம் கோரப்போவதுமில்லை இதுகாலமட்டில் நான் எந்தெந்த நாடுகளுக்கு விஸாவிற்காக விண்ணப்பித்திருந்தேனோ அத்தனை நாடுகளிடமிருந்தும் அது எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அந்தவகையில் அடுத்துவரும் கணிசமான காலப்பகுதிக்கு அவர்கள் என்னை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

கேள்வி : இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைதொடர்பாக எப்படிப்பார்க்கின்றீர்கள் ?

பதில் : அந்தமக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன் இந்தமக்கள் விடுதலைப்புலிகளின் பிடியிலும் பாதிக்கப்பட்டனர் யுத்த காலத்தின் போதும் இந்தமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர் இருதரப்பினரதும் சூட்டிற்கு இலக்காகினர் இப்படியாக பாதிப்பிற்குள்ளாகிய மக்கள் தற்போதோ தடுப்புமுகாமில் உள்ளதைப்போன்றே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அந்தமக்கள் வெள்ளப்பெருக்கு உட்பட பலவகையான பிரச்சனைகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது இவர்கள் இலங்கையின் பிரஜைகளாவர். எமது அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதற்கமைவாக அனைத்து இலங்கை மக்களுக்கும் இருப்பதைப்போன்ற அடிப்படை உரிமைகளை இந்தமக்களும் அனுபவிக்க இடமளிக்கப்படவேண்டியது அவசியமாகும் உச்சநீதிமன்றத்திற்கு நாம் சமர்பித்த மனுவும் அடிப்படையில் இதைச்சார்ந்ததாகவே உள்ளது இந்தமக்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு செல்லமுடியாதவிடத்து அவர்களை இருகரம்நீட்டி வரவேற்பதற்கு அவர்களது உறவினர்களும் நண்பர்களும் தயாராகவே உள்ளனர் அவர்களது நடமாடும் சுதந்திரத்திற்கு தடைபோடக்கூடாது

கேள்வி: அரசியல் நல்லிணக்கத்தை காணும் விடயத்தில் அரசாங்கம் எதிர்பார்த்தவகையில் செயற்படத்தவறும் நிலையில் சர்வதேச ஆதரவை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்க உதவிராஜங்க செயலர் ரொபட் பிளேக் குறிப்பிட்டுள்ளார் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து என்ன கருதுகின்றீர்கள் ?

பதில்: இதுவிடயத்தில தற்போதையதருணத்தில் ஏதேனும் ஆக்கப+ர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நான் கருதவில்லை இனியாவது இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயற்படும் என நான் நம்புகின்றேன் அரசியல் தீர்வைக்காணும் விடயமாக இருப்பினும் இடம்பெயர்ந்த மக்கள் விவகாரமாக இருப்பினும் ஏனைய விடயங்களிலும் ஆக்கப+ர்வமான முன்னேற்றத்தை காண்பிப்பது முக்கியமென்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும் ஆனால் துரதிஸ்டவசமாக தற்போதைய நிலையில் நான் இதுவிடயத்தில் எவ்வித ஆக்கப+ர்வமான சமிக்ஞைகளையும் காணவில்லை

கேள்வி வடகீழ் பருவமழை தீவிரமடையும் காலப்பகுதியை நாம் எதிர்நோக்கியிருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் என்ன?
பதில் : பருவமழைக்காலப்பகுதியானது மிகவும் துர்ப்பாக்கியமானதாகவும் மோசமானதாகவும் அமையப்போகின்றது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உள்ளதால் அந்த முகாம்களின் சனத்தொகை அடர்த்தியைக்குறைப்பது அவசியமாகும் மக்கள் அந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படவேண்டிய தேவையுள்ளது அனைத்தின் முடிவிலும் தனது பிரஜைகளின் நலன்கள் சார்ந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கே முதன்மைப்பொறுப்பு உள்ளது இந்த பொறுப்பை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமா என்பதே எமக்கு முன்பாக உள்ள கேள்வியாகும் இன்றையநிலையில் இலங்கைத்தமிழர்களில் ஒரிடத்தில் அதிகூடிய எண்ணிக்கையில் இருப்பது தடுப்பு முகாம்களிலேயே என்கின்ற ஒரு விடயத்தை நாம் மறந்துவிடக்கூடாது



Wednesday, August 19, 2009

இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதன் மூலம் உண்மையான மனிதநேயத்தை வெளிப்படுத்த முடியும்



இன்று உலக மனித நேய தினம்

அருண் ஆரோக்கியநாதர்

“மனித மலத்தில் நீந்தும் இடம்பெயர்ந்த மக்கள்” என்ற தலைப்புச்செய்தியை வாரஇறுதி ஆங்கிலப்பத்திரிகையில் பார்த்ததுமே மனித நேயம் உள்ளவர்களுக்கு இதயத்தில் நிச்சயமாக வலியெடுத்திருக்கும் எம்சக மக்களின் அவலவாழ்விற்கு என்றுதான் முற்றுப்புள்ளிவரும் என்ற அங்கலாய்ப்பு ஆட்கொண்டிருக்கும்.

மனிதநேயத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகெங்கிலும் விசேடவிதமாக இலங்கையிலும் உணரப்படும் நிலையிலே உலக மனிதநேய தினம் இன்று முதன்முறையாக கொண்டாடப்படுகின்றது .
.
மனித நேயதினத்தை எவ்வாறு கொண்டாட முடியும் மாறாக மனித நேயதினம் அனுசரிக்கப்படுகின்றது என எழுதினால் தானே சரியாக இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளே எழுந்துகொண்டாலும் எதற்கெதற்காகவோ தகுதியில்லாதவற்றுக்காக விழாவெடுத்துக்கொண்டாடும் உலகில் மிகவும் தேவையாக இருக்கின்ற மனிதநேயத்தை கொண்டாடுவது பொருத்தமே எனக்கண்டேன் .

மனித நேயம் என்ற வார்த்தையை அண்மைக்காலத்தில் நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கின்றோம் பல்வேறுதரப்பினரால் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு இடங்களில் பகரப்பட்ட இந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்னவாகவிருக்கும் என்ற ஆர்வம் பலரைப்போன்று எனக்குள்ளும் இருந்தகொண்டிருக்கவே இணையத்தளதேடலில் அந்த வார்த்தைக்கான வரைவிலக்கணத்தை தேடிப்பார்த்தேன்.


மனித நேயம் என்பதற்கு எண்ணற்ற வரைவிலக்கணங்கள் அதிலே தரப்பட்டிருந்தன அனைத்து மனிதர்களுக்கும் இரக்கத்தன்மை நல்லெண்ணம் அனுதாபம் போன்ற உயரியமனித குணாம்சங்கள் பாகுபாடின்றி உலகில் எப்பகுதியிலும் வியாபித்துக்கிடக்கவேண்டியதொன்றே மனித நேயம் என்றும் மனித நேயம் என்பது வரலாற்றில் வளர்ச்சி கண்டுவருகின்றதொன்று எனவும் ஒரு வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்படுகின்றது.

மனிதநேயர் எனப்படுவோர் மனித நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தம்மை அர்ப்பணிப்போர் என மற்றுமொரு வரைவிலக்கம் இருக்க இன்னுமொரு வரைவிலக்கணமோ மனித வாழ்வியல் மேம்பாடு மற்றும் மனிதர்களின் துன்பங்களைக் குறைத்தல் ஆகிய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்களே மனித நேயர்கள் என சுட்டிக்காட்டுகின்றது எனினும் “மனிதத்தின் மீது இதயத்தில் அக்கறை கொண்டதன்மையே மனித நேயம் எனவும் மனிதத்தின் மீது இதயத்தில்அக்கறைகொண்டோரே மனித நேயர் என்றும் தரப்பட்டிருந்த எளிமையான வரைவிலக்கணமே என் இதயத்தில் தங்கியது

மனித நேயத்திற்கு உலகளவில் ஓர்தினத்தை ஒதுக்கி அதனைக்கொண்டாட வேண்டிய அவசியம் நீண்டகாலமாக உணரப்பட்டுவந்த போதிலும் கடந்தாண்டிலேயே அது கைகூடியது ஒவ்வொருவருடமும் ஓகஸ்ட் மாதம் 19ம்திகதியை உலக மனித நேயதினமாக கடைப்பிடிப்பதென்ற வரலாற்றுமுக்கியத்துவமிகு தீர்மானம் கடந்தாண்டு(2008) டிசம்பர் 11ம்திகதி சுவீடனால் முன்வைக்கப்பட்ட “ஐக்கியநாடுகள் சபையின் அவசர மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைத்தல் நடவடிக்கைகளை பலப்படுத்தல்” பற்றிய கூட்டுப்பிரேரணையை பிரேரணையை ஐக்கியநாடுகள் பொதுச்சபை ஏற்றுக்கொண்டதன் மூலமே இவ்வருடமுதல் சாத்தியமாகியுள்ளது அந்தவகையில் இந்தவருடமே முதன்முறையாக உலக மனித நேய தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

உலக மனிதநேயதினமான இன்றையதினத்தில் மனிதநேயநோக்கத்திற்காகவும் அதன்வளர்ச்சிக்காகவும் பணியாற்றுபவர்களை கௌரவிப்பது மட்டுமன்றி தமது கடமைகளை முன்னெடுக்கையில் உயிரிழந்த மனிதாபிமான பணியாளர்கள் ஐநா மற்றும் அதனுடன் தொடர்புடையபணியாளர்கள் அனைவரையும் கௌரவிக்கின்ற உயரிய நோக்கம் உள்ளமை போற்றப்படவேண்டியதொன்றேயாகும் .தன்சகமனிதனின் நல்வாழ்விற்காக உயிரையே கொடுப்பதென்பது எத்தகைய உன்னதமான செயல் என்பதை நன்மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் .

இந்த வரலாற்றுமுக்கியத்துவமிக்க தீர்மானமானது அனைத்து அங்கத்துவநாடுகளையும் ஐநா கட்டமைப்பையும் சர்வதேச ஸ்தாபனங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களையும் வருடாந்தம் உரிய முறையில் உலக மனிதநேயதினத்தை கடைப்பிடிக்குமாறு அழைப்புவிடுக்கின்றது .

மனிதநேயதிற்காக உலக கலெண்டரில் ஒருநாள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளமையானது ஒரு மனிதநேய உலகிற்கும் மனிதநேய ஆர்வலர்களுக்கும் பிரதானமான வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளதுடன் ஆயுதமோதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்த பெரும்பேறாகவும் என சேர்ஜியோ வியரா டி மெல்லோ மன்றம் அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது

அமெரிக்க ஈராக் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நாட்களில் ஈராக்கிற்கான தனது விசேட பிரதிநிதியாக அப்போதைய ஐநா பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்த ஐநா பணியாளரே சேர்ஜியோ வியரா டி மெல்லோ ஐநாவின் ஈராக்கிற்கான தலைமைப்பணிமனையின் மீது குண்டுநிரப்பிய வாகனம் மோதியமைகாரணமாக 2003ம் ஆண்டு ஒகஸ்ற் 19ம்திகதி சேர்ஜியோவும் அவரது மனிதநேய பணியாளர்கள் 21பேரும் கொல்லப்பட்டிருந்தனர் .இந்த மரணத்தினால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருந்த சேர்ஜியோவின் குடும்பத்தினர் மேற்கொண்ட முன்முயற்சிகளின் பயனாகவும் ஐநா எடுத்துக்கொண்ட விரிவான நடவடிக்கைகளின் பலனாகவுமே ஒகஸ்ற் 19ம்திகதியை உலக மனித நேயதினமாக அங்கீகரிக்கும் சரித்திரமுக்கியத்துவமிக்க மைல்கல் சாத்தியமாகியுள்ளது.
உலகின் மிகவும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் உதவிகள்மிகவும் அத்தியாவசியமாக தேவைப்பட்டவர்களுக்காக உதவிகளைச்செய்ய முனைந்தவேளையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 700ற்கு மேற்பட்ட மனித நேயப்பணியாளர்கள் தமது இன்னுயிர்களை தியாகம்செய்யநேரிட்டுள்ளதாக மனிதநேயநடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கியநாடுகள் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது .

இலங்கையிலும் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்த பல மனித நேயப்பணியாளர்கள் தமது விலைமதிப்பற்ற உயிர்களைத்தியாகம் செய்துள்ளனர் தாம் மட்டும் வாழ்ந்துவிட்டால் போதும் என்ற மனநிலை மேலோங்கிவரும் உலகில் மிகவும் அவசியமான நெருக்கடியான சூழலிலும் தமது உயிரைப்பற்றி கவலைகொள்ளாமல் மக்களுடன் மக்களாக நின்று மூதூரில் மரித்துப்போன ஏசிஎவ் பணியாளர்கள் 17பேரினதும் நினைவுகள் என்றென்றுமே மக்களின் மனங்களிலிருந்து நீங்கிவிடாது அதேபோன்றே இன்னும் பலரது உன்னத தியாகங்களும் வாழும் காலமெல்லாம் நெஞ்சத்தில் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை . போர் நிறைவிற்கு வந்த பின்னரும் தொடருகின்ற இன்றையநெருக்கடி மிக்க சூழலில் பணியாற்றுகின்ற மனித நேயப்பணியாளர்களையும் இன்றையதினத்தில் நாம் எம்நினைவுகளில் ஏந்தி உரிய கௌரவத்தை வழங்குவதே மிகவும்பொருத்தமானது வாழும் போது மனிதரைத் தூற்றுமட்டும் தூற்றிவிட்டு மரணத்தை தழுவியபின்னர் அதே மனிதரைப்புகழும் இந்த சமூகக்கட்டமைப்பில் இருந்து நாம் விடுபட்டு வாழும் போதே கௌரவத்திற்கு பாத்திரமானவர்களை கௌரவிக்கும் உயரிய குணத்தை நாம் எம் உள்ளங்களில் நிறைத்துவிடவேண்டும் .

உலகம் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான சவால்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக “இடப்பெயர்வு” தொடர்ந்துமே காணப்படுவதாக ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார் . ஐநா மதிப்பீட்டுத் தரவுகளின் படி உலகின் ஒட்டுமொத்த சனத்தொகையான 6.7 பில்லியன் மக்களில் ஏறக்குறைய ஒரு வீதமானவர்கள் தத்தமது சொந்த நாடுகளுக்குள்ளேயே இடப்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஆயுதமோதல்கள் வன்முறைகள் அபிவிருத்திநடவடிக்கைகள் மற்றும் இயற்கை அனர்தங்கள் காரணமாக இடப்பெயர்விற்கு உள்ளானவர்கள் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இனப்பிரச்சனைகாரணமாக இலங்கையில் இருந்து மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்களைவிடுத்து இலங்கையில் சுமார் ஆறுலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் இருப்பதாக ஐநா தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்களில் அதிகம் பேசப்படுவதாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் உள்ளவர்கள் இருந்தபோதிலும் புத்தளத்தில் ஏறத்தாழ இருதசாப்த காலமாக வாழ்கின்ற ஒருலட்சம் வரையான முஸ்லிம் மக்களும் இந்த இடம்பெயர்ந்தோர் பட்டியலில் உள்ளவர்களேயாவர் பாதுகாப்புதேடி தமதுசொந்த நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றவர்களையே அகதிகள் என்று அழைக்கின்றோம் .


இந்த அகதிகளின் நிலைமையை விடவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஐநா சுட்டிக்காட்டுகின்றது அகதிகளைப்போன்று சர்வதேச அகதிகள் சட்டத்தின் கீழ் உள்நாட்டில் இடம்பெயர்விற்கு உள்ளானவர்கள் பாதுகாக்கப்படுவதில்லை அந்த வகையில் அகதிகளிலும் பார்க்க சில சந்தர்ப்பங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது உள்ளக இடம்பெயர்வுகளுக்கு உள்ளானவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது சொந்த நாடுகளிலேயே விசாரணைகளுக்கு உள்ளாக நேர்வதுடன் துஷ்பிரயோகத்திற்கும் பாராபட்சத்திற்கும் புறக்கணிப்புக்களுக்கும் உள்ளாக வேண்டியநிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐநா அதன் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது இதற்கு இலங்கையின் வடக்கே வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களில் வாழவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கமும் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக எதிhக்கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களும் குறிப்பிடும் சுமார் மூன்றுலட்சம் வன்னிமக்களின் நிலையே சான்றுபகர்கின்றது

அண்மையில் நடந்து முடிந்த மூன்று நிகழ்வுகள் இந்த மக்களின் மீதான பார்வையை மீண்டுமாக இலங்கை வாழ்மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்து உணர்த்திநிற்கின்றது
யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத்தேர்தல்இ மடுமாதா ஆவணித்திருவிழா மற்றும் வவுனியாவில் மழைவீழ்ச்சி ஆகியனவே அந்த மூன்று நிகழ்வுகளாகும் .


வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள முகாம்களில் தமது மூன்றுலட்சம் உறவுகள் தொடர்ந்துமே விருப்பிற்கு மாறாக வைக்கப்பட்டுள்ளநிலையில் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பது இலகுவான காரியமாக அமைந்துவிடாது என்பதையே தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தேர்தல் தொடர்பான தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார் .
இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினரை விடுவிப்பதற்கு இன்னுமொரு தேர்தல் வரை காத்திராது விரைவில் அவர்களை விடுதலை செய்ய காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார் மடுத்திருவிழா திருப்பலியில் தமது பிரசங்கங்களில் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் யாழ் ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் ஆகியோரும் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர் .

முகாம்களில் உள்ள மக்கள் சிறைக்கைதிகளைப்போன்று தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறிய யாழ் ஆயரின் கருத்துக்கள் மட்டுமன்றி பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த பேராயர் மல்கம் ரஞ்சித்தினது கருத்துக்களும் நிச்சயமாக செவிமடுக்கப்படவேண்டியவை வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்த மழைவீழ்ச்சி ஏற்கனவே சொல்லோணா வேதனைகளுக்கு மத்தியில் வாழும் மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கவே வழிகோலிவிட்டுள்ளது .
இந்த மக்களை விடுவிக்க வழிசெய்யவேண்டும் என எதிர்கட்சித்தலைவர் விடுத்து கோரிக்கைக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புச்செயலாளரோ முகாம்களில் பொதுமக்களின் போர்வையில் மறைந்துவாழும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே இதுவெனக்குறிப்பிட்டதுடன் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணிந்து உடனடியாக மக்களை விடுதலை செய்துவிடமுடியாது எனக்கூறியுள்ளார் .

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சனையை அரசாங்கம் பாதுகாப்பு கோணத்திலேயே தொடர்ந்தும் நோக்கிவருவதாகவும் வெறுமனே பாதுகாப்பு கோணத்தில் மட்டுமே பார்க்காது மனித நேய கோணத்திலும் பார்க்க வேண்டும் என தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா குறிப்பிடுகின்றார் . தமது சொந்த வீடுகளில் தோட்டந்துறவுகளுடன் வாழ்ந்த வன்னிமக்களில் ஒருபகுதியினர் அண்மையில் பெய்த கனமழைகாரணமாக ஏற்பட்டவெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர் என்பதற்கு மேலாக மலங்கலந்த தண்ணீருக்குள் அகப்பட்டுக்கொள்ள நேர்ந்ததாக வார இறுதி ஆங்கிலப்பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன் இது மனித கௌரவத்தையே கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துவிட்டுள்ளது மழையால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மழைவற்றியதும் தற்காலிகத்தீர்வைக் கண்டுவிடமுடியும் ஆனால் இந்த மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு அவர்களை இயன்றவிரைவில் மீளக்குடியேற்றுவதே இந்த மனிதாபிமானப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியும் என அண்மையில் வன்னி கலாசார மன்றம் என்ற அமைப்பின் தலைவர் புதியாகம சந்திரரத்ன தேரர் சுட்டிக்காட்டியிருந்ததையும் மீள பதிவுசெய்தல் இத்தருணத்தில் பொருத்தமாகவிருக்கும் .

மனிதநேய தலையீடு என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை விரைவாக மீளக்கட்டியெழுப்புவதுடன் அவர்களது கௌரவத்தை துரிதமாக நிலைநிறுவத்துவதன் மூலமாகவே வெற்றியளிக்கும் என மனித நேய ஒன்றியங்களின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜீவன் தியாகராஜா கூறிய கூற்றை எம்சிந்தனைக்கு நிறுத்தி எமக்கு முன் பெரும் மனிதநேயப்பிரச்சனையாக பரிணாமித்து நிற்கின்ற வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு அனைத்துதரப்பினரும் முன்வருவதன் மூலமாகவே உண்மையான மனித நேயத்தை வெளிகாட்டிடமுடியும்.

Friday, August 14, 2009

70வயதிலும் கல்வி :வாங்க படிக்கலாம் !!!!!!!!!!


எம்மவர்களில் பலருக்கோ நாற்பது வயதுகளிலேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது அதற்கு மேல் வாழ்க்கையில் எதுவித பிடிப்புமே இல்லாமல் ஏதோ பிறந்தோம் என இறக்கும்வரைக்கும் வாழ்ந்து தொலைப்போம் என்பதே அவர்களது நினைப்பாக இருக்கின்றது அதிலும் கல்வியை எடுத்துக்கொண்டால் சாதாரணதரப்பரீட்சை அன்றேல் உயர்தரப்பரீட்சை முடிந்தவுடனேயே அனைத்திற்கும் மூட்டைகட்டி விட்டு அறிவுத்தேடலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுகின்றனர் அனேகர்.



இன்னும் பலருக்கு திருமணத்துடன் அவர்களது இலட்சியப்பயணமும் முடிந்துவிடுகின்றது இப்படியான நிலையில் 70வயதிலும் அளவில்லா ஆர்வத்துடன் கல்வி பயிலும் என் சக “மாணவி” திருமதி திருப்பதியின் கதை எடுத்துக்காட்டாகவும் ஆச்சரியமாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை !!!


மூன்றுவாரங்களுக்கு முன்னர் தான் தனது 70வயதைப்ப+ர்த்திசெய்த திருமதி திருப்பதி நாவலயில் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான இளமானி பட்டப்படிப்பினை மேற்கொள்வது மட்டுமன்றி இறுதியாண்டு மாணவியாகவும் திகழ்கின்றார் என்றால் சிலர் நக்கலாக சிரிக்க முனையக் கூடும் ஆனால் இது உண்மையில் எம்மை சிந்திக்கத்தூண்டவேண்டும் .


கல்வி அறிவுத்தேடல் சாதாரணதரத்துடனோ அன்றேல் உயர்தரப்பரீட்சையுடனோ முடிந்துவிடும் ஒருவிடயமல்ல அன்றேல் திருமணத்துடன் முற்றுப்பெறும் விடயமல்ல அதற்கு மேலும் வாழ்க்கை இருக்கின்றது என்பதற்கு இது நல்ல உதாரணமல்லவா ?

திருமதி திருப்பதி பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி ஆனால் தமிழரொருவரை திருமணமுடித்ததாலேயே இந்தப்பெயருக்கு சொந்தக்காரர் .
ஆரம்பத்தில் இலங்கை வங்கியில் பணிபுரிந்தபோது அவர் காதலித்து திருமணம்செய்ததாக உரையாடலில் அறிந்துகொண்டேன் பின்னர் 1963ம் ஆண்டில் ஓரே குழந்தையை பெற்றெடுத்ததும் வேலைக்கு ஓய்வுகொடுத்த அவர் தனது பிள்ளை வளர்த்தெடுப்பதற்காக வேலைக்கு சுமார் 10வருடங்கள் வேலைக்கு போகவில்லை பின்னர் பிள்ளை ஓரளவு வளர்ந்தபின்னர் பணியில் இணைந்துகொண்ட அவர் அமைச்சர் காமினி திஸாநாயக்கவுடனும் பணியாற்றியதாக கூறினார் இதன்பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்களிலும் அவர் பணியாற்றி ஓய்வுபெற்றநிலையில் கணவரும் இறந்துவிட தனது மகளுடன் வாழ்;க்கை பயணம் தொடர்ந்தது ஆனால் மகள் திருமணம் முடிக்கவே தனித்துவாழவேண்டிய சூழல் ஏதோ வாழ்ந்துவிட்டுப்போவோம் என்றில்லாமல் சாதித்துக்காட்டவேண்டும் என்ற அவா இந்நிலையில் தான் குடும்ப நண்பர் ஒருவர் திறந்த பல்கலைக்கழக பட்டப்படிப்பை பற்றி கூறியிருக்கின்றார் தன்னிடம் உயர்தர பரீட்டை தகுதி இல்லை என்பதால் முதலில் யோசித்த போதும் பின்னர் தனது அனுபவம் மற்றும் முன்னமே செய்திருந்த டிப்ளோமா தகுதி என்பவற்றுடன் பட்டப்படிப்பை தொடர அனுமதி பெற்றிருக்கின்றார் திருமதி திருப்பதி

2006ம் ஆண்டில் திறந்த பல்கலைக்கழக பட்டநெறியில் தனது மகளுடன் திருமதி திருப்பதி இணைந்துகொண்ட மகளோ இந்தப்பாடநெறி சலிப்பாக இருப்பதாக கூறி சில நாட்களிலேயே நின்று விட்டபோதும் திருமதி திருப்பதி பாடத்தை தொடர்ந்தார் வகுப்புக்களில் அவர் இளைஞர் யுவதிகளுக்கு சரிக்கு சமனாக இல்லை இல்லை அதினிலும் ஆர்வமாக பங்கேற்பதும் கேள்விகளைத்தொடுப்பதும் ஏனையோருக்கு ஊந்துசக்தி பல மேற்கத்தேய நாடுகளில் முதியோர்கல்வி பற்றியெல்லாம் கேள்விப்பட்;டிருக்கின்றோம் ஆனால் அது எமதுநாட்டிலும் இருக்கவே செய்கின்றது ஆனால் அதில் உச்சப்பயனைப்பெறுவோர் தாம் மிகவும் சொற்பமாக உள்ளனர் உலகில் இதுகால வரையில் தோன்றிய விஞ்ஞானிகளிலேயே மிகச்சிறந்தவராக போற்றப்படும் அல்பேர்ட் ஐன்ஸ்ர்Pன் கூறிய ஒரு கூற்றை நான் அடிக்கடி அசைபோடுவதுண்டு அதுதான் “ Education is the progressive realisation of our ignorance" தமிழில் அந்தக்கூற்றை மொழிபெயர்ப்பதானால் எமது அறிவீனத்தை உணர்ந்துகொண்டு முற்போக்காக முன்னேறிச்செல்லுகின்ற முயற்சியே கல்வி என எடுத்துக்கொள்ளலாம் ஆகவே நண்பர்களே எமது வாழ்க்கையின் தேடல்கள் ஒருகுறித்த வயதுடனோ அன்றேல் பரீட்சையுடனோ இல்லை திருமணத்துடனோ நின்றுவிடக்கூடாது அது சாகும்வரைக்குமே தொடரவேண்டும் அதற்கு கல்வியறிவு இன்றியமையாதாது

பாராம்பரிய கல்வி நிறுவனங்களான பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் இவற்றில் மட்டுமே கல்வி கிடைக்கும் என்று எண்ணுவோம் ஆனால் அது தவறானது மாறாக இலங்கை திறந்தபல்கலைக்கழகம் தொழில் நுட்ப கல்லூரிகள் போன்றவற்றிலும் கல்விநடவடிக்கையை மேற்கொள்ளமுடியும் இந்த நிறுவனங்களில் கல்வி கற்பதற்கு வயது ஒரு வரம்புகிடையாது என்பது மட்டுமன்றி சாதாரணதரப்பரீட்சை தகுதியோ உயர்தரப்பரீட்சைத்தகுதியோ தேவையில்லை என்பது தான் விசேட அம்சம்
ஆகவே வீதியில் கூடி அரட்டை அடிப்படைவிட்டுவிட்டு தொலைக்காட்சி தொடர்நாடகங்களில் அழுதுதொலைப்பதைவிட்டுவிட்டு அடுப்படியில் அடங்கிக்கிடப்பதை விட்டுவிட்டு அகிலத்தை அளக்கும் அறிவுத்தேடலில் ஈடுபடுங்கள்


குறிப்பு :திறந்தபல்கலைக்கழக இணைய முகவரி :http://www.ou.ac.lk/ தொழில்நுட்ப கல்லாரி இணையமுகவரி : http://www.nipunatha.gov.lk/Diplomas.jpg

Thursday, August 13, 2009

சொந்த இடங்களில் வாழ வழிசெய்தாலே உண்மையான சந்தோசத்தை உணரமுடியும்


-சங்கைக்குரிய புதியாகம தேரர்
















கேள்வி:

வவுனியா முகாம்களுக்கு விஜயம் செய்ததாக குறிப்பிட்டீர்கள் அங்குள்ள நிலைமை எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்:
(வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் மிகந்த இன்னல்களுக்குள்ளாகியுள்ளனர் அரசாங்கம் கவனிக்கின்றதென்றாலும் அந்தமக்களிற்கு ஏற்பட்டுள்ள உளநிலைபாதிப்பு மற்றும் அதிவேதனையுணர்வை அவர்களைப்பார்க்கின்றபோது அவர்களின் உருவங்களிலிருந்தே புலனாகின்றது இயன்றவரைவிரைவாக தம்தம் சொந்தப்பிரதேங்களுக்குச் சென்று குடியேறி வாழுகின்ற சுதந்திரத்தை அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் அரசாங்கம் இந்த மக்களுக்கு உதவிகளைச்செய்கின்றது என்பது என்னவோ உண்மைதான் ஆனால் அது அவர்களுக்கு போதியதாக காணப்படவில்லை உணவுபானம் அவர்களுக்கு கிடைத்தாலும் அவர்கள் சந்தோசமாக வாழ்வதற்கு தத்தம் சொந்த இடங்களுக்கு சென்றுவாழவேண்டும் அதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுப்பின் நன்று என்பதே எனது கருத்தாகும் )




கேள்வி : இதற்கும் மேலாக உங்கள் பயணத்தின் பின்னர் நீங்கள் உணர்ந்துகொண்ட விடயங்கள் யாது ?



பதில்:



இனப்பிரச்சனை தொடர்பாகவும் மீண்டும் யுத்தநிலை ஏற்படாதிருக்கவும் சமயத்தலைவர்கள் ஆற்றவேண்டியபங்குகொன்றுள்ளது இதற்கு அரசாங்கம் ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்கி சமயத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அரசியல்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தினூடாகவேனும் அதிகாரத்தைப்பகிர்வதன் மூலமாக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்படாமல் முகாம்களிலுள்ள நிலை தொடர அனுமதிக்கப்பட்டால் மீண்டும் விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புக்கள் தலைதூக்க அது வாய்ப்பாகிவிடும் எனவே இதனை உணர்ந்துசெயற்படவேண்டும் எதிர்காலத்தில் இப்படியாக நடைபெறாமல் இருப்பதற்கு இதற்குள்ள தீர்வுயாதென்றால் அதிகாரத்தை பகிர்ந்து அந்த மக்களுக்க அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து தீர்வுகாணவேண்டும் இதற்கு தீர்வுகாணக்கூடியவராக நான் தற்போதைய ஜனாதிபதியைப் பார்க்கின்றேன் .ஜனாதிபதி ஒரு சட்டத்தரணி சட்டம் தொடர்பான அறிவுடையவர் இந்தியா ஈரான் போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன் தொடர்புகளைப்பேணிவருபவர் அந்த நாடுகளில் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்ட முறைமை என்பவற்றை உள்வாங்கி இந்தப்பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் இந்தப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு அதிகாரங்களைப் பகிர்;ந்துகொள்வதே என்பதே எனது தனிப்பட்ட கருத்து )

கேள்வி : யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் அனைத்துபிரச்சனைகளும் முடிந்துவிட்டதென்ற நிலைபாடு பெரும்பான்மைமக்கள் மத்தியில் இருக்கின்றதா?



பதில்:



தமிழ் மக்களுக்கு இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் தனிநாடு தனிநிர்வாகம் அதாவது தமிழீழத்தினைப்பெறுவதற்காக 30வருடகாலமாக இந்த ஆயுதப்போராட்டம் இடம்பெற்றிருக்கின்றது ஈழத்தை நோக்கிய பயணத்திற்கு மக்களை அணிதிரட்டுவதற்காக விடுதலைப்புலிகள் என பெயரிட்டு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தனர் எனினும் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்றதனால் அந்தப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது எனினும் யுத்தவெற்றியின் பின்னர் ஆயுதப்போராட்டம் அழிந்துவிட்டதென கருதி மக்களின் பிரச்சனைகளைப் புறக்கணித்து விடமுடியாது அவர்களது பிரச்சனைகள் அவ்வாறே உள்ளது அவர்களுக்கு அரசியல்ரீரியாக பொருளாதார ரீதியாக இன்னமும் பல பிரச்சனைகள் உள்ளது தற்போதுள்ள அரசாங்கம் இதனை விளங்கிக்கொண்டுள்ளதென்றே நான் நினைக்கின்றேன் இதனை அசட்டை செய்துவிடமுடியாது உதாரணமாக தென்பகுதியிலுள்ள மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகிய ஜேவிபி 1970களில் வளர்ச்சிகண்டு பின்னர் அழிவடைந்தது எனினும் மீண்டுமாக அது 1980களின் பிற்பகுதியில் ஜேவிபி அரசியல் கட்சியாக வந்து தற்போது தேர்தல்களிலும் போட்டியிடுகின்றது எதிர்காலத்திலேனும் இந்தப்பிரச்சனையின் அடிப்படையைப்புரிந்துகொண்டு ஒரே நாட்டிற்குள் அதிகாரங்களைப்பகிர்ந்துகொண்டு 13வது திருத்தத்தினூடாவோ அன்றேல் அதற்கப்பாலோ சென்று அரசியல்திருத்தங்களுடாக அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும்

கேள்வி: இலங்கை அரசியலில் பௌத்த மதத்தலைவர்களின் வகிபாகமானது இனப்பிரச்சனைத்தீர்விற்கு பாதகமாக இருப்பதாக சிலர் கூறுவது பற்றி என்ன கருதுகின்றீர்கள் ?



பதில்:

பௌத்தர்கள் வரலாற்றில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கநேர்ந்தது ஏகாதிபத்தியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் பௌத்தமதம் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டது அதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டிய அவசியமுமம் அப்போது இருந்தது போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயருடைய காலனித்துவ ஆக்கிரமிப்பின் அனுபவங்கள் அச்சங்களுடாக பயணித்த பௌத்த மதத்தலைவர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பொம்மைதாம் விடுதலைப்புலிகள் என்றோ இந்த வல்லாதிக்க நாடுகளின் சதியால் தாம் இந்தப்பிரச்சனை ஏற்பட்டதென்றோ எண்ணத்தை தம்முள்கொண்டிருக்கின்றனர் இவர்களது சந்தேகங்கள் அச்சங்களெல்லாம் வரலாற்று அனுபவங்களுடாகவே ஏறபட்;டிருக்கின்றது பௌத்தமதத்தலைவர்களை அரசியல்வாதிகள் தம் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்தியிருக்கின்றார்கள் பௌத்த மதத்தலைவர்கள் அறிந்தோ அறியாமலோ இவ்வாறு அரசியல்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.ஆனால் நானோ இதனை ஒரு உள்நாட்டுப்பிரச்சனையாக பார்க்கின்றேன் இதற்கு உரிய அதிகாரப்பகிர்வின மூலமாகவே தீர்வுகாணமுடியும் எனக்கருதுகின்றேன்

Wednesday, August 5, 2009

இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களைப்பார்வையிட அரசாங்கம் உடனடியாக எங்களை அனுமதிக்கவேண்டும்




































தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திருகோணமலைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்




-பேட்டிகண்டவர் அருண் ஆரோக்கியநாதர்-


கேள்வி : அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்திற்குமான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்ததன் பின்னணியிலுள்ள காரணங்கள் யாது ?
பதில் :
ஜனாதிபதியவர்கள் அபிவிருத்திக்கும் சமாதானத்திற்குமான சர்வகட்சி மாநாட்டிற்கு மிகக்குறுகிய கால அழைப்பிதழை அனுப்பியிருந்தார்கள் அதாவது கூட்டத்திற்கு முதல்நாள் ஐந்துமணியளவில் எனக்கு அந்த அழைப்புக்கிடைத்தது அப்போது எங்களுடைய கட்சியின் தலைவர் திருகோணமலையிலும் செயலாளர் நாயகம் தேர்தல் சம்பந்தமாக யாழ்ப்பாணத்திலும் இருந்தனர் எங்களுடைய கூட்டுக்கட்சியின் தலைவர்களும் நாட்டில் இருக்கவில்லை இப்படியான ஒருசூழ்நிலையில் தான் இந்த அழைப்பு எங்களுக்கு வந்தது நான் கொழும்பிலுள்ள எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம் அப்போது அவர்களுடைய மனநிலை இந்தக்கூட்டத்தை தவிர்த்து கட்சித்தலைமை வந்த பின்னர் பிரத்தியேகமாக ஒருதினத்தில் ஜனாதிபதியைச்சந்திப்பது என்ற அபிப்பிராயம் இருந்தது ஆனால் அன்று மாலை ஐந்தரைக்கு பிற்பாடு எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கும் ஒரு அழைப்பிதழ் எனது பக்ஸிற்கு அனுப்பப்பட்டிருந்தது நான் அதனை அவருக்கு திருகோணமலைக்கு அனுப்பி அவரிடத்திலே ஆலோசனைகளைக்கேட்டபோது அந்த அழைப்பை சாதகமாக ஏற்றுக்கொண்டு மாவட்டரீதியிலே ஒரு சிறிய தூதுக்குழுவாக சென்று பங்குபற்றுமாறு கூறினார் நீண்டகாலமாக அரசாங்கம் ஒருகுறையை எமது கட்சியிலே போட்டுவருகின்றது அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை நாங்கள் வைக்கவேண்டும் முக்கியமாக எங்களுடைய மக்களின் அவலம் இடம்பெயர்ந்து வாழும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் அவலங்களை அரசதலைமைக்கு எடுத்துக்கூறவேண்டிய பொறுப்பும் இருக்கின்றது ஆனபடியால் நீங்கள் இதிலே கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை எங்களுக்கு வழங்கியிருந்தார் அதன்பேரிலே நாங்கள் மிகக்குறுகிய அழைப்பிதழ் என்றாலும் அதனைநாம் ஏற்று அடுத்தநாள் சந்திப்பிலே கலந்துகொண்டோம்
கேள்வி:
கடந்தகாலங்களிலும் இதுபோன்ற அழைப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டிருந்தபோது அவற்றை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது அந்த அழைப்புக்களை ஏற்று பேச்சுக்களில் பங்கேற்றிருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக்காப்பாற்றியிருக்கமுடியும் என தமிழத்த்தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றதே


பதில்
அப்பொழுது விடுதலைப்புலிகள் இராணுவப்பலத்தோடு இருந்த ஒரு காரணத்தினால் தான் அரசாங்கம் பேச்சுவார்த்தையொன்றைத் தொடங்கவேண்டிய நிலை ஏற்பட்டது இதையாரும் மறுப்பதற்கில்லை ஏனென்றால் நீண்டகாலமாக நடந்த போராட்டங்களிலே இங்கிருந்த அரச தலைமைகள் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ்த்தலைமைகளை அன்றேல் சிறுபான்மைத்தலைமைகளை அழைத்து ஒருகாத்திரமான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வை எட்டுவதற்கு முயற்சிக்கவில்லை இந்தநிலையிலேதான் ஒரு ஆயுதப்போராட்டம் இங்கு தலையெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது அந்தப்போராட்டத்தை தமிழ் மக்களில் பெரும்பான்மையோரும் ஆதரித்திருந்தனர் அந்தப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் ஏனெனில் தமிழ்த்தலைமைகளால் முப்பது வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்ட்ட சாத்வீக ரீதியான போராட்டத்தினால் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்றநிலைப்பாட்டிலே தமிழ் மக்களும் பெரும்பான்மையாக இதனை ஆதரித்தார்கள் இந்தநிலையிலே அரசாங்கம் சர்வதேசத்தின் உதவிகளைப்பெற்று ஒரு அரசியல் தீர்வைப்பெறுவதற்காக விடுதலைப்புலிகளுடன் பேசிக்கொண்டிருந்த காலம் எங்களோடு அரசியல் தீர்வுபற்றிப்பேசுவதற்கு ஒருகாத்திரமான நிகழ்ச்சித்திட்டத்திலே எங்களுக்கு அழைப்பிதழ் வரவில்லை விடுதலைப்புலிகளுடன் பேசிக்கொண்டிருந்தகாலம் அந்தக்காலத்திலே நாங்கள் போய் அதற்குள் சம்பந்தப்பட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது பொருத்தமற்றதாக எங்களுக்கு பட்டது எனவே அரசியல்தீர்வைப்பற்றி விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் பேசவிரும்புகின்றது சர்வதேசம் அதிலே மும்முனைப்பாக இருக்கின்றது அந்தவகையில் பேச்சுவார்த்தை மூலம் ஒருதீர்வை எட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம்


கேள்வி :
எனினும் யுத்தம் தீவிரம்பெற்றிருந்த மேமாத காலப்பகுதியில் கூட தமிழ்த்தேசியக்கூட்டமை பேச்சுக்கு வருமாறு விடுத்த அழைப்பையும் நீங்கள் நிராகரித்திருந்தீர்களல்லவா ? ஏன் அப்படி நடக்கநேர்ந்தது ?


பதில்
அந்த அழைப்பை பொறுத்தவரையிலே அந்த அழைப்பு எங்களை மானசீகமாக அரசாங்கம் எங்களை அழைத்து அந்தபேச்சுவார்த்தை சம்பந்தமாக கதைப்பதற்காக அழைத்த அழைப்பாக நாங்கள் கருத முடியாது காரணம் என்றவென்றால் அரசாங்கத்திற்கு ஒரு சர்வதேச அழுத்தம் இருந்தது நியாயமான அழுத்தம் இருந்தது அந்த அழுத்தத்தை அரசாங்கம் கையாளுவதற்காக நாங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் அழைக்கின்றோம் அவர்களோடு பேசுகின்றோம் நாங்கள் மிகவிரைவிலே ஒருதீர்வைக்காணப்போகின்றோம் என்ற ஒரு நிலைப்பாட்டோடு எங்களுடைய பிரச்சனையை இன்னமும் காலம்தாழ்த்துவதற்காக சர்வதேசத்தினுடைய அனுசரணையை பெற்றுக்கொள்வதற்கான அழைப்பாகவே நாங்கள் அதனைப்பார்கின்றோம்


கேள்வி
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துவந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள அரசாங்கம் இத்தனை பெரும்தொகையான மக்கள் குறுகிய காலப்பகுதிக்குள் வந்துசேரும் போது குறைகள் ஏற்படுவது இயல்பானது அவர்களின் குறைபாடுகளைக் களைந்து வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துவருகின்றது தற்போது அந்த மக்களின் நிலைமையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இந்த மக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது ?
பதில் :
வன்னி மக்களுக்கு இந்த அவலங்கள் உண்மையாக ஏற்பட்டிருக்க கூடாது இந்தப்பிரச்சனையைப்பொறுத்தவரையில் அரசாங்கம் மிகவும் சாதுரியமாக மனித அழிவுகளை உடமை இழப்புக்களைத் தவிர்த்து இதனைக்கையாண்டிருக்கலாம் என்பது எனது கருத்து; ஒருபோர்நிறுத்தத்திற்கு வந்து பேச்சுவார்த்தையை இந்த நேரத்தில் தொடங்கினால் எமது தரப்பாலும் விடுதலைப்புலிகளுக்கு ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்வோம் என நாங்கள் அந்தப்போர் தொடங்கிய காலப்பகுதிதொடக்கம் அரசாங்கத்திடம் மிகவும் வினயமாக நாங்கள் கேட்டிருந்தோம் ஆனால் அதை அரசாங்கம் கேட்கவில்லை அந்த யுத்தம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தம் என்று கூறிக்கொண்டாலும் கூட அதிலே பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக அப்பாவிப்பொதுமக்களேயாவர் வன்னி நிலப்பரப்பிலே இருந்த ஏறக்குறைய நான்கு லட்சத்திற்கு மேற்பட்டமக்கள் தங்களுடைய உடமைகளை உறவுகளை முதுசங்களை இழந்து இன்று மிகவுமொரு துன்பகரமான வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் வன்னிப்பிரதேசத்தைப்பொறுத்தவரையிலே அவர்கள் எப்போதுமே கடுமையான உழைப்பாளிகளாக இருந்துவந்துள்ளனர் வறுமையையே காணாதவர்கள் வளமான நிலம் வயல்நிலங்கள் தோட்டநிலங்கள் இதே போன்று கடல்வளம் இந்த வளங்களை அவர்கள் முழுமையாக பிரயோசனப்படுத்தி செழிப்போடு வாழ்ந்தமக்கள் என்றே அவர்களை நான் கூறுவேன் பயங்கரவாதம் என்று கூறிக்கொண்டு அந்தப்பகுதியில் அரசாங்கம் போதியளவு அபிவிருத்தியைச் செய்யாவிட்டாலும் கூட அந்த மக்கள் தங்களுடைய முயற்சியிலே பல வசதி வளங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் இந்த மக்களை இன்று இராணுவ நடவடிக்கையினாலே அவர்களுடைய வீடு வாசல் உடமைகளை முற்றாக இழக்கவைத்து அவர்களுடைய உறவுகளை இழக்கவைத்து இன்று அகதிமுகாமிலே அவர்களை வாழவைத்துள்ளனர் இதனை மிகவுமொரு துன்பகரமான நிகழ்வாகவே நாங்கள் பார்க்கின்றோம் அரசாங்கம் இந்த யுத்தத்தைத் தொடங்கும் போது அவர்களை மிகவும் கண்ணியமாக அழைத்திருந்தது இந்த யுத்தம் உங்களுடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற யுத்தம் உங்களுடைய விடுதலைக்காக செய்யப்படுகின்ற யுத்தம் உங்களுடைய விமோசனத்திற்காக செய்யப்படுகின்ற யுத்தம் என்று கூறிக்கொண்டாலும் கூட மனித நேய யுத்தம் என்று கூறி யுத்தத்தை நடத்திய அரசாங்கம் மனித நேயத்தை ஏற்படுத்தவில்லையென்றுதான் நாங்கள் கூறுவோம் பொதுவாக அரச ஊடகங்களிலே அந்த முகாம்களைப்பற்றி கூறும் போது அவர்கள் வளமாக இருக்கின்றனர் சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றது சுகாதார வசதியிருக்கின்றது கல்வி வசதியிருக்கின்றது ஏனைய வசதிகள் யாவும் இருக்கின்றது மக்கள் அங்கு வசதியாக வாழ்கின்றார்கள் என்று கூறினாலும் கூட ஆனால் உண்மையான நிலைமைகள் அங்கு அவ்வாறில்லை வன்னிப்பிரதேசத்து தமிழ் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை;போய் பார்க்கமுடியாத சூழ்நிலைதான் இன்றும் தொடர்கின்றது அங்கு ஒர் நல்ல சூழ்நிலையிருப்பின் எங்களையும் சர்வதேச தொண்டுநிறுவனங்களையும் விடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தைக் கேட்க வேண்டியிருக்கின்றது  


கேள்வி : விடுதலைப்புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் தமிழர்தரப்பில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக நிலவும் கருத்துக்கள் தொடர்பாக நீங்கள் என்ன கூற விளைகின்றீர்கள் ?

பதில் :அப்படியாக தமிழ்த்தலைமையில்லை என்று கூறுவதற்கில்லை ஏனென்றால் எங்களுடைய கட்சியைப்பொறுத்தவரையில் தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து எங்களுடைய சிறுபான்மை மக்களுடைய பிரச்சனைக்காக போராடிவந்ததொரு பாரம்பரியமான கட்சி அந்தக்கட்சி பரம்பரையாக தலைமைத்துவங்களைக் கொண்டுவருகின்றது விடுதலைப்புலிகளையோ அதன் தலைமைத்துவத்தையோ உருவாக்கியதற்கான பொறுப்பை நாங்கள் அரசாங்கத்திடம்தான் சொல்லவேண்டும் ஏனென்றால் ஜனநாயக வழியிலே இயங்கிய தலைவர்கள் தங்களுடைய ஜனநாயக செயற்பாடுகளைச்செய்ய முடியாத ஒரு காலகட்டம் இருந்தது அந்த நிலைமைக்கு அரசாங்கம் தான் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும் தற்போது தமிழ்த்தலைமைத்துவம் இல்லையென்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எங்களுடைய கட்சி மிகவும் காத்திரமாக தந்தை செல்வாவின் வழியைப்பின்பற்றி எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம் இப்போது எங்களுக்கு மேலே சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்புக்களை நாங்கள் நன்றாக உணர்கின்றோம் ஏனென்றால் இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பேச்சுவார்த்தைகளிலே ஈடுபட்டு ஒருதீர்வைக்காண்பார்கள் என்ற எண்ணத்தோடு நாங்கள் இருந்த ஒரு காலகட்டம் இருந்தது அதேநேரத்தில் எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய நிலைப்பாடுகளை நாங்கள் சர்வதேசச் சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மிகத்தெளிவாக கூறிவந்திருக்கின்றோம் ஆனால் இப்போது ஒரு புதுவித சூழல் ஏற்பட்டிருக்கின்றது இ;ந்தச் சூழ்நிலையிலே எங்களுடைய கட்சி மிகவும் செயற்திட்டங்களை வகுத்து அந்த அடிப்படையிலே நாங்கள் காத்திரமாக செயற்படுவதற்கு நாங்கள் முடிவெடுத்துள்ளோம் .  


கேள்வி: யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களிலே பங்கேற்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்;மானித்துள்ளது இதனை எப்படி பார்க்கின்றீர்கள் ?இந்தத் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியிலே உண்மையான ஆர்வம் காணப்படுகின்றதா?  


பதில் :யாழ் மாநகர சபைத்தேர்தலைப் பொறுத்தளவிலும் வவுனியா நகரசபைத் தேர்தலைப்பொறுத்தளவிலும் இந்தத் தேர்தல்கள் எங்களுடைய மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட தேர்தலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் ஏனென்றால் இந்தத்தேர்தலை மக்கள் அறவே விரும்பவில்லை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் இந்தத்தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை இடம்பெயர்ந்து வாழுகின்ற மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துங்கள் என அரசாங்கத்திடம் நாங்கள் பிரதானமாக அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு அவர்கள் ஒரு இயல்பு வாழ்க்கைநிலைக்கு திரும்பிய பின்னர் இந்த தேர்தலை நடத்துவதுதான் மிகப்பொருத்தமானதென்று கூறியிருந்தோம் யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையான மக்கள் வன்னிப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்திருந்தவர்கள் பிரச்சனையான காலப்பகுதியிலே யாழ்ப்பாணத்திலிருந்த கெடுபிடிகள் காரணமாக வன்னிப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் வன்னியிலுள்ள வாக்காளர் தொகையிலே நாற்பது வீதத்திற்கு மேலானவர்கள் . அதேபோன்று வவுனியாவிலிருந்தும் வன்னிப்பிரதேசத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர் இவர்களெல்லாம் எங்கிருக்கின்றார்கள் அங்கு எத்தனைபேர் இருக்கின்றார்கள் எத்தனைபேர் இல்லை அவர்கள் எப்படியாக வாழ்கின்றார்கள் என்ற நிலைமையைச் சரியாக அறி;ந்து கொள்ளமுடியாத நிலையிலே மக்கள் ஒரு சிறைக்குள் அகப்பட்டது போல மிகவும் துன்ப துயரங்களுடன் வாழும் போது இப்பொழுது அந்த மக்களுக்கு தேiவானது ஒரு தேர்தலல்ல முதலாவது தேவையாகவுள்ளது அவர்களது மீள் குடியேற்றம் அவர்கள் உடல்ரீதியாக உளரீதியாக பொருளாதார ரீதியாக அவர்களுடைய வாழ்க்கை ரீதியாக அவர்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் தற்போது வவுனியா முகாம்களில் தற்கொலைகள் கூட நடைபெறுகின்றது படித்த சமூகத்தில் ஆசிரியர்கள் கூட தற்கொலைசெய்கின்றனர் எத்தனையோ வயோதிபர்கள் நாளாந்தம் 15 முதல் இருபது பேர்வரை இறந்துகொண்டிருக்கின்றனர் தாய் தந்தையில்லாத ஆயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றனர் இப்படியாக வேதனை துன்பங்களுடன் அந்த மக்கள் இருக்கின்றபோது அவர்கள் மீது இந்த நேரத்தில் கொண்டுபோய் தேர்தலைச்சுமத்தியிருப்பது பொருத்தமற்றதொன்றாகவே நாங்கள் கருதுகின்றோம் இருந்தபோதும் எங்கள் மக்கள் மீது இந்த தேர்தல் சுமத்தப்பட்ட காரணத்தினால் நாங்கள் இந்தத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் இந்த தேர்தல் மூலமாக அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களுடைய கட்டுக்கோப்பை உறுதியை தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை மேலும் வலியுறுத்த வேண்டும் அது எங்கள் கடமை என்ற ரீதியில்தான் இந்தத்தேர்தலில் நாங்கள் பங்குபற்றியிருக்கின்றோம்  


கேள்வி: ஆறுமாதங்களில் மீள்குடியேற்றம் 180நாள் செயற்திட்டம் மீள்குடியேற்றத்;திற்கு இந்தியா உதவியளிக்கும் போன்ற கருத்துக்கள் அரசதரப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது மீள்குடியேற்றம் ஆறுமாத காலப்பகுதியில் இடம்பெறும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் இருக்கின்றதா? அரசாங்கம் இந்த விடயத்தில் காண்பிக்கும் முன்னெடுப்புக்கள் தொடர்பில் நீங்கள் எங்கனம் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் ?

பதில் நாங்கள் கடைசியாக நடைபெற்ற நல்லிணக்கம் அபிவிருத்தியென்ற மாநாட்டிலே கலந்துகொண்டபோது அதில் ஒன்றைநான் நன்கு அவதானித்தேன் எமது சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் அதிலே சமூகமளித்திருந்தார்கள் அவர்கள் அத்தனைபேரும் மீள்குடியேற்றத்தைப்பற்றியும் அந்த மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பற்றியும் மிகவும் வலியுறுத்திக்கேட்டிருந்தார்கள் மிகவிரைவாக மக்களை மீளக்குடியேற்றி அவர்களுக்கு இயல்புவாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் அத்தோடு நீண்டகாலமாக கிட்டத்தட்ட 60வருடங்களுக்கு மேலாக இந்தநாட்டிலேயுள்ள இனப்பிரச்சனைக்கு இந்த அரசாங்கம் இன்னும் காலத்தைக்கடத்தாமல் தீர்வைக்காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது பொதுவாக எல்லாக்கட்சிகளும் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லாமல் அங்கிருந்த சிறுபான்மைக்கட்சிகள் எல்லாமே அந்தக்கருத்தைக் கூறியிருந்தன அரசியல்தீர்வுக்கு எதிரான சில கருத்துக்களைச்சொல்லுகின்ற ஜாதிக்க ஹெல உறுமய ஜேஎன்பி போன்ற கட்சிகள் கூட அதற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிக்கவில்லை அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாகவும் அவற்றை அகற்றவேண்டும் அவற்றை அகற்றியதன் பின்னர் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டது குடியேற்றம் செய்யலாம் என சான்றிதழ் பெறவேண்டும் இதன் பின்னரே குடியேற்றத்தைச்செய்யலாம் என்ற ஒரு கருத்தை அதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் ஆனால் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெயர்ந்துவந்து இரண்டுமாதங்களுக்கு மேலாகியும் காத்திரமானமுறையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை இப்பொழுது இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலே தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களையும் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்க்கலாம் இப்படிச்சேர்ப்பதன் மூலம் கஷ்டங்கள் இருக்கும் போது உதவிகள் தேவைப்படும் போது எங்களுடைய உதவி ஒத்தாசைகளையும் சிறப்பாக வன்னிப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவி ஒத்தாசைகளையும் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் அதனைப்பெற்றுக்கொள்வதற்கு எந்தவிதமான ஆர்வமும் காண்பிக்கப்படவி;ல்லை மீள்குடியேற்றம் சம்பந்தமான ஒரு செயற்குழுவிற்கு கிட்டத்தட்ட 19 உத்தியோகஸ்தர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் இதிலே 18 உத்தியோகஸ்தர்கள் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளர்களோ தமிழ்மக்கள் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தெரிவுசெய்யப்பட்ட குழுவிலுள்ள 18பேர் சிங்கள சகோதரர்கள் ஒருவர் எங்களுடைய மீள்குடியேற்ற அமைச்சரின் செயலாளர் 19பேரைக்கொண்ட இந்தக்குழுவில் ஒரு தமிழ்ப்பிரதிநிதி கூட இடம்பெறவில்லை 


இப்படியான செயற்பாடுகள் மேலும் கசப்பையும் வெறுப்பையும் வளர்ப்பதற்கு ஒரு காரணமாக இருக்கும் இதைப்பொறுத்தவரையில் இன்று நாம் எந்தவித பேதமும் காட்டாமல் அரச தரப்பு எதிர்த்தரப்பு என்றில்லாமல் நாம் அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து இந்தப்பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் எனக்கூறும் ஜனாதிபதி இப்படியான மாற்றங்களை பேச்சளவில் மட்டுமல்லாது செயலிலும் செயற்படுத்த வேண்டும் அப்படியாக செயலளவில் எத்தனிப்புக்களைச் செய்கின்றபோதுதான் காலங்காலமாக ஏமாற்றப்பட்டுவந்த இந்த தமிழினம் இந்த அரசியற் தலைமைகளிலே ஓரளவு நம்பிக்கைக்கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்படும் அதனைக் கட்டாயம் ஏற்படுத்தவேண்டும் இப்போதுள்ள அரசியல் தலைமைகள் ஒரு நல்ல தீர்வைக்கண்டு இந்த நாட்டை நல்லிணக்கம் ஒருமைப்பாடு என்ற ரீதியில் கட்டி வளர்க்க வேண்டுமாக இருந்தால் இதனை செயலளவிலே மெல்லமெல்லமாக காண்பிக்க வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான அபிப்பிராயமாகும் கேள்வி:யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலும் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியிலும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக பல்வேறு அமைப்புக்கள் மட்டுமல்லாது உங்களது கட்சியும் குற்றச்சாட்டுக்களைத்தெரிவித்துவந்திருந்தது தற்போது உங்களது கட்சி அரசாங்கத்தால் கூட்டப்பட்ட நல்லிணக்கம் அபிவிருத்தி மாநாட்டில் பங்கேற்றிருப்பதன் மூலம் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உரம் மழுங்கடிக்க படக்கூடிய வாய்ப்புக்ள் உள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பாக என்ன கூறவிரும்புகின்றீர்கள் ? பதில் : நாங்கள் அந்தக்கூட்டத்திலே கலந்து கொள்வதற்கு சர்வதேசரீதியிலே சில பிரச்சனைகள் இருந்தாலும் கூட இந்தச்சந்திப்பிலே கலந்துகொள்ளவேண்டிய ஒருதேவை எங்களுக்கு இருந்தது நான் முக்கியமாக ஆரம்பத்திலே குறிப்பிட்டபடி குறிப்பாக மக்கள் எங்களுடைய மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் அவர்களுடைய வேதனைகளில் இருந்து அவர்களை மீட்டு நாங்கள் அவர்களுக்கு ஒரளவு நிவாரணம் கொடுக்க வேண்டும் அதற்கு நாங்களும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடுதான் நாங்கள் அதிலே கலந்துகொண்டோம் இதற்காக அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்காக நாங்கள் இந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டோம் என்று கருதுவது பிழையானது அரசாங்கத்தால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலே நியாயமான விசாரணை செய்யப்படவேண்டும் அதிலே எங்களுக்கு மாறுபட்ட கருத்துகிடையாது ஏனென்றால் எங்கள் மக்களிடமிருந்த வருகின்ற தகவல்களிலிருந்து மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது தற்போது கூட முகாம்களிலேயிருந்து பலவிதமான விரும்பத்தகாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது ஏனென்றால் அங்குள்ள இளம்யுவதிகள் விசாரணை என்ற போர்வையில் ஏமம்சாமம் என்றில்லாமல் கூப்பிடப்பட்டு விசாரணைசெய்யப்படுகின்றார்கள் என்ற அச்சம் இளம்பெண்கள் மத்தியிலே இருக்கின்றது கணவனை இழந்தபெண்கள் மத்தியிலேயும் சில அச்சம் இருக்கின்றது புல்மோட்டை முகாமிலே சில சம்பவங்கள் இடம்பெற்றதாக பத்திரிகைளிலும் சில கதைகளை பார்க்ககூடியதாக இருந்தது அதிலே உண்மையில்லை என நாங்கள் சொல்வதற்கில்லை அப்படியான உண்மைகள் இருப்பதாகத்தான் அங்கு மக்கள் பேசிக்கொள்கிறார்கள் இது இன்னும் வீணான கசப்புக்களை ஏற்படுத்துவதற்கு சாதகமாக அமையக்கூடும் ஆனபடியால் இடம்பெயர்ந்த மக்கள் விடயத்திலே அரசாங்கம் மிகவும் அக்கறையுடன் நடந்துகொள்ளவேண்டும் அவர்கள் கௌரவமாகவும் தன்மானத்துடனும் சீவித்த மக்கள் அவர்களை ஒரு மனிதராக கணித்து இந்த நாட்டின் பிரஜைகளாக கணித்து அவர்களுக்குரிய மனிதாபிமான பிரச்சனைகளை நன்கறிந்து அவர்கள் இப்படியான சில கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் உதவவேண்டும் அத்தோடு நாங்களும் இந்த முகாம்களைப்போய்பார்க்கவேண்டும் மக்களிடத்தில் இருந்து இப்படியான குறைகள் வரும் போது இதிலே உண்மையிருக்கின்றதா இல்லையா என்ற தகவலை நாங்கள் வெளியிலே சொல்ல முடியாத சூழ்நிலைதான் இன்று தொடர்கின்றது இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக நாங்கள் சென்று பார்க்கவேண்டும் அவர்களுடைய பிரதிநிதிகள் நாங்கள் ஆனபடியால் எங்களை அங்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் அவர்களுடன் நாங்கள் கதைக்கவேண்டும் அத்தோடு நாங்கள் கலந்து அரசாங்கத்துடன் சேர்ந்து இதற்கு என்னசெய்யலாம் என்று கூட்டிணைந்து ஜனாதிபதி விரும்புகின்றபடி ஒரு செயற்திட்டத்தை நாங்கள் விரைவாக எடுக்க முடியும் 180நாள் வேலைத்திட்டம் என்பது செய்யமுடியாததல்ல அரசாங்கம் முழுமுயற்சியுடன் செய்தால் 180நாட்களுக்கு முன்பாக அந்த மீள் குடியேற்றத்தைச்செய்யலாம் நாங்களும் அதற்கு ப+ரணமான ஒத்துழைப்பை வழங்குவோம் எங்களிடத்தில் என்னென்ன உதவிகள் தேவை நீங்கள் இதைச்செய்யவேண்டும் என்றால் நாங்கள் போய் அந்த உதவிகளைச்செய்து மக்களை 180நாட்களுக்கு உள்ளே குடியேற்ற முடியுமாக இருந்தால் அரசாங்கத்திற்கும் நல்லது எங்களுக்கும் நல்லது நாங்கள் அதைத்தான் விரும்புகின்றோம்