Monday, March 30, 2009

வன்னியில் மனிதப்பேரவலம் காத்துக்கிடக்கிறது ....


வன்னியில் மனிதப்பேரவலம் நிகழக்கூடிய அபாயநிலைமை அனைத்துவிதமான சாத்தியக்கூறுகளுடனும் காத்துக்கிடப்பதாக மாற்றுக்கொள்கைக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கிசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
கேள்வி :
வன்னியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றிய அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக வினவியபோதே ?
பதில் ஐக்கியநாடுகள் தொண்டர் ஸ்தாபனங்களையும் ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களையும் வன்னியிலிருந்து அரசகட்டுப்பாட்டுப்பகுதிக்கு செல்லுமாறு உத்தரவிட்ட இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமானது மிகவும் வருந்தத்தக்கது ஐநா மற்றும் ஏனைய மனிதநேய பணியாளர்களின் பாதுகாப்பிற்கு தம்மால் உத்தரவாதம் வழங்கமுடியாது என்பதே இதற்கான அரசாங்கம் முன்வைத்த காரணமாகும் மூதூரில் நடைபெற்றதுபோன்ற இன்னுமொரு படுகொலை சம்பவம் இடம்பெறுவதைத்தவிர்ப்பதும இதற்கு காரணம் என அரசாங்கத்தரப்பில் இந்ததீர்மானத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது ஐக்கியநாடுகள் சபையுடனான உறவை எடுத்துநோக்குமிடத்து ஐநா பணியிலீடுபடும் அங்கத்துவநாடே அந்தநாட்டிலுள்ள ஐநா பணியாளருக்கான பாதுகாப்பை வழங்கியாகவேண்டும் தம்மால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என குறித்த நாடு கூறும் இடத்தில் ஐக்கியநாடுகள் சபைசெயற்பட்டு தமது பணியாளர்களை விலக்கிக்கொள்வதே நடைமுறையாகும் ஆனால் வன்னியில் இருந்து தமது அலுவலகத்தையும் பணியாளர்களையும் வேறிடத்திற்கு மாற்றிக்கொள்வதாகவே ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளதேதவிர வெளியேறுவதாக தெரிவிக்கவில்லை இந்த அனைத்து சம்பவங்களின் பின்னாலும் இருக்கின்ற முக்கியவிடயம் யாதெனில் இங்கு ஒரு மனிதப்பேரவலம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்துக்காரணிகளுடனும் காத்துக்கிடக்கிடக்கின்றது என்பதே இங்கு உண்மையானதும் குறிப்பிட்டுக்கூறவேண்டியதுமாகும்.
கேள்வி கடந்தவாரம் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தீர்கள் அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது இதன்போது நீங்கள் அறிந்துகொண்ட விடயங்கள் யாது?
பதில் நான் வவுனியாவிலிருந்தபோது என்னோடு பேசிய அனைவரும் ஒரு சாதாரணவிடயத்தை வலியுறுத்திச்சொல்லியிருந்தனர் வன்னிமக்கள் அந்தப்பிரதேசத்திற்குள்ளேயே இருக்கவேண்டும் என விடுதலைப்புலிகள் விரும்புகின்ற அதேவேளை அரசாங்கம் அவர்களை வெளியேற்றிவிடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றது மக்களைப்பொறுத்தவரையில் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறும் சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது ஏனெனில் விடுதலைப்புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்காமை இதற்காக அவர்களது அதிகாரத்தைப்பயன்படுத்துகின்றமை ஒருகாரணம் இதனைத்தவிர வன்னியிலுள்ள குடும்பங்களைச்சேர்ந்தவர்களில் ஆகக்குறைந்தது ஒருவரேனும் வலுக்கட்டாயமாகவோ அன்றேல் சுயவிருப்பின் பேரிலோ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றனர் இவர்கள் சிலர் தமிழ்த்தேசியவாதிகள் இவர்கள் அங்கிருந்து போராடவேண்டும் என்ற நோக்கத்தைக்கொண்டிருக்கலாம் ஆனால் மிகமிகமுக்கியமானவிடயம் யாதென்றால் வவுனியாவிலுள்ள அரசாங்க நலன்புரி முகாம்கள் எப்படியிருக்கும் என்கின்ற தகவல்கள் கிடைத்துள்ளதே அனேமானோர் வன்னியில் இருந்து அரசகட்டுப்பாட்டுபகுதிக்கு வருவதற்கு விரும்பாமைக்கான காரணமாகும் நலன்புரிநிலையங்கள் என்பது திறந்தவெளி தடுப்பு முகாம்கள் என்றே அவர்கள் அறிந்துவைத்திருக்கின்றார்கள் அன்றேல் அன்றேல் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் களிமோட்டை என்ன நடைபெறுகின்றது என்பதை நாம் அனைவருமே அறிந்துவைத்திருக்கின்றோம் அத்தியாசிய தேவைப்ப+ர்த்திசெய்வதற்கு அவசியமான வசதிகள் இன்மை மட்டுமன்றி அங்கு கடத்தல்கள் கொலைகள் காணமற்போதல்கள் என்பன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன கறுப்பு முகமூடி அணிந்த ஒருவர் முகாமினுள் கொண்டுவரப்படுவதுடன் யார் யார் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரர் அன்றேன் அனுதாபிகள் என இனங்காணப்பட்டுவது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அந்தவகையில் வன்னியிலுள்ளவர்களை எந்தவகையிலேனும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்திப்பார்க்கவிளையும் அது சூழ்நிலையில் முடியுமானதே வன்னியைச்சேர்ந்தோரில் அனேகமானோர் விடுதலைப்புலிகளின் பொதுமக்கள் தற்காப்பு பயிற்சியை எடுத்தவர்களாவர் என்றவகையில் தேவையேற்பட்டால் அவர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்திப்பார்க்கும் சாத்தியக்கூறுகள் அனேகமாகக்காணப்படுகின்றது இடம்பெயர்ந்துவருவோருக்கான தற்காலிக தரிப்பிடமாக வவுனியா இருக்குமிடத்து அங்குள்ள நிலைமையை தீவிரமாக ஆராயவேண்டியது அவசியமாகும் ஏனெனில் இலங்கையின் பிரதேசங்களை எடுத்துபார்க்கின்றபோது அதிகளவிலான ஆயுதந்தரித்த குழுக்கள் அமைப்புக்கள் உளள் பகுதிகளிலொன்றாக வவுனியா காணப்படுகின்றது ஏறத்தாழ அனைத்துதரப்பினருமே அங்கு காணப்படுகின்றனர் பாதுகாப்பு படையினர் விடுதலைப்புலிகள் ரிஎம்விபி புளொட் என யார் வேண்டுமானாலும் அங்கு காணப்படுகின்றனர் அங்கு கடத்தல்கள் அதிகரித்துள்ளது காணமல்போதல்கள் அதிகரித்துள்ளது நாம் அங்குள்ள வைத்தியர்கள் வழக்கறிஞர்கள் வர்த்தக சமூத்தினருடன் பேசியபொழுது அவர்கள் குறிப்பிட்ட விடயம் யாதென்றால் தொலைபேசி இணைப்பு இருக்குமிடத்து அவர்கள் உள்வரும் அழைப்புக்களுக்கு பதில் அளிப்பதில்லை எனத்தெரிவித்தார்கள் கப்பமாக பணம் கேட்டு அழைப்புவரும் என்ற அச்சமே இதற்குகாரணம் என அவர்கள் சுட்டிக்காட்டினர் துணை இரர்ணுவக்குழுக்கள் சட்டத்திற்கு அப்பால் தமக்குத்தேவையானவகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர் வன்னியில் உள்ளக இடப்பெயர்விற்குள்ளாகி உள்ள மக்கள் வந்தாலும் வராவிட்டாலும் வவுனியாவில் உள்ள சூழ்நிலையானது தற்போதையநிலையில் பொதுமக்கள் தங்குவதற்கு நிச்சயமாக ஏற்புடையதாகவில்லை என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி : அடுத்த என்ன நடக்கும் என்ற அச்சநிலை அனைவரையுமே ஆட்கொண்டிருக்கின்றது நீங்கள் நிலைமைகளை எங்கனம் நோக்குகின்றீர்கள் ?
பதில் தற்போதுள்ள மிகவும் கவலைக்கிடமான நிலைமையாதென்றால் அரசாங்க படையினர் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்பதில் தெளிவாகவுள்ளனர் மறுமுனையில் விடுதலைப்புலிகளோ பொதுமக்களை தம்மோடு வைத்துக்கொண்டு கேடயமாக்கப்பார்க்கின்றனர் இந்நிலையில் பொதுமக்கள் நகராதவிடத்துஇராணுவத்தினர் அந்தப்பகுதியை நோக்கி குண்டுத்தாக்குதலை மேற்கொள்ளப்போகின்றனரா என்பதே கேள்விக்குறியாகவுள்ளது ஏனெனில் மக்கள் அனைவரும் ஒருகுறித்தபகுதியினுள்ள இடம்பெயர்ந்தநிலையில் செறிவாக அடைக்கலம் பெற்றுள்ளனர் அப்படியான நிலையில் மக்கள் வெளியேற்றுவதற்காக இராணுவத்தினர் குண்டுத்தாக்குதலை நடத்துவார்களா தொடர்ந்சியான படைவலுவைப்பயன்படுத்துவார்களா என்ற அச்சநிலைகாணப்படுகின்றது அப்படிநிகழுமிடத்து அங்கு இழப்புக்கள் ஏற்படும் அப்படியான நிலைமை சாத்தியமற்ற பட்சத்தில் பழைமையான பட்டினிபோடும் உபாயத்தை அரசாங்கம் பயன்படுத்த போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது மக்களை வெளியே கொண்டுவருவதற்காக உணவையும் அடிப்படை விநியோகங்களையும் பணயமாக பயன்படுத்த உத்தேசம்கொண்டுள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது இந்த இரு சூழ்நிலையிலும் மக்களின் நலன்புரிவிடயத்தில் பெரிதும்கரிசனையற்ற இரு ஆயுதந்தரித்த தரப்பினர் மத்தியில் நிர்க்கதியற்ற பொதுமக்கள் சிக்கிக்கொண்டு பெரும் இன்னல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைமையே காணப்படுகின்றது .

அரசாங்கத்திடம் அபிவிருத்திக்கு பணம் இல்லை!

ஜி எஸ் பி பிளஸ் சலுகை தற்செயலாக நிறுத்தப்பட்டாலும் கூட நிச்சயமாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியான நிலைக்குத்தள்ளும் என்று எதிர்வு கூற முடியாது என அபிவிருத்திக்கான பருத்திதுறை ஆய்வகத்தின் பிரதான ஆய்வாளர் கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் தெரிவிக்கின்றார்

கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்

பேட்டிகண்டவர் ஆ அருண்
கேள்வி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை எப்படி இருக்கின்றது ?

புதில் : கடந்த இரண்டு வருடகாலமாகவே யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததுதொடக்கம் 2006 2007 இந்த 2008 கூட சற்று மந்தகதியில் தான் பொருளாதாரம் வளர்ச்சிகண்டுவருகின்றது சுனாமி மீள்கட்டுமானப்பணிகள் கூடுதலாக 2006ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டமையினால் அந்த ஆண்டில் ஒரளவு அதியுயர் வளர்ச்சியைக் வீதத்தைக்காணக்கூடியதாக இருந்தது 2005ம் ஆண்டில் உடனடி நிவாரண வேலைத்திட்டங்கள் தான் செயற்படுத்தப்பட்டன ஆனால் புனருத்தாபன புனரமைப்பு வேலைகள் உட்கட்டமைப்பு அபிவிருத்திவேலைகள் 2006ம் ஆண்டுதான் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டது இதன்காரணமாக யுத்தம் ஆரம்பித்திருந்தாலும் கூட 2006ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சிவீதம் அதியுச்சக்கட்டத்தை எய்தியிருந்தது 78ம் 79ம் ஆண்டுகளுக்கு பின்பாக அதியுச்ச வளர்ச்சி வீதத்தைக்கண்டிருந்தது ஆனால் 2007ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி குன்றியிருந்தது 2008ம் ஆண்டு முதல் ஆறுமாத காலப்பகுதியில் கூட பொருளாதார வளர்ச்சிவீதம் ஆறுசதவீதம் அதாவது கடந்தவருடத்தைவிட குன்றியதாகத்தான் காணப்படுகின்றது


கேள்வி: தற்போதைய நிலையில் இலங்கையின் பணவீக்கமானது ஆசியாக்கண்டத்தில் 2வது அதிகூடியதாக வியட்னாம் நாட்டிற்கு அடுத்த நிலையில் 24.9வீதமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைளை மத்தியவங்கி உரிய வகையில் செயற்படுத்துகின்றதா?


பதில் :இல்லை நிச்சயமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மத்திய வங்கிக்குத்தான் எந்தவொருநாட்டிலும் இருக்கின்றது இருந்தபோதிலும் இலங்கையை எடுத்துக்கொண்டால் குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மத்தியவங்கி ஒரு அரசியல் மயமாக்கப்பட்ட நிறுவனமாகத்தான் செயற்படுகின்றது இதன்காரணமாக அரசாங்க செலவீனங்கள் கட்டுப்படுத்தப்படாமல் வருவாய்க்கு அதிகமாக செலவிடப்பட்டுவருகின்றது இதைக்குறைப்பதற்கோ தணிப்பதற்கோ உரிய நடவடிக்கைகளை மத்தியவங்கி எடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன பொருளாதார வளர்ச்சிவீதத்தை அளவிற்கு மேல் குறைக்காமல் பார்த்துக்கொள்ளும் குறிக்கோளுடனேயே அவர்கள் கூடுதலாக செயற்படுகின்றனர் அதனால் வட்டிவீதத்தை அதிகரிக்காமல் கடந்த 18வருடங்களாக ஒரேநிலையிலேயே வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான காரணங்களினால் தான் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது ஆனாலும் கடந்த இருமாதங்களாக அதாவது ஜுலை ஒகஸ்ற் மாத பணவீக்க புள்ளிவிபரங்களை எடுத்துநோக்குமிடத்து பணவீக்கம் அதிகரிக்கும் வேகம் சற்று குறைந்துகொண்டுவருவதாக தென்படுகின்றது


கேள்வி: இலங்கையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி இடம்பெற்று வருவதாக அரசாங்கம் கூறிவருகின்றது பொருளாதார ஆய்வாளர் என்ற வகையில் இலங்கையில் உண்மையான அபிவிருத்தி இடம்பெறுகின்றதாக கருதுகின்றீர்களா?

பதில் : எது உண்மையான அபிவிருத்தி என்று வரைவிலக்கணம் செய்வதே கடினமானது இருந்தபோதிலும் அபிவிருத்தி என்ற பாரிய வரைவிலக்கணத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் கடந்த இரண்டுவருடமாக போருக்கே அரசாங்கத்தினால் முக்கியமான இடம்கொடுக்கப்பட்டுவருகின்றது அதற்காக பாரிய செலவீனங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது இதன்காரணமாக கல்வித்துறையிலோ சுகாதாரத்துறையிலோ மற்றும் வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித்துறைகளுக்கோ தேவையான பணவசதி அரசாங்கத்திடம் காணப்படவில்லை பொதுவாக இவ்வாறான உட்கட்டமைப்பு அபிவிருத்தி அல்லது சமூக அபிவிருத்தி துறைகளான கல்வி சுகாதாரங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெற்றுவருகின்றன அதிலும் நாட்டின் நிலைமைகாரணமாக மனித உரிமை நிலவரம் காரணமாக சற்றுக்குன்றியதாகவே காணப்படுகின்றது இந்தக்காரணங்களினால் கடந்த 2007ம் ஆண்டும குறிப்பாக 2008ம் ஆண்டும் மொத்த அடிப்படையில் அபிவிருத்தி சற்று தளர்ச்சியடைந்த நிலையில் தான் இடம்பெற்றுவருகின்றது அதற்காக முற்றாக அது நின்றுவிடவில்லை ஒரளவிற்கு சில சில உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் சீனா இந்தியாபோன்ற நாடுகளின் உதவிகளுடன் முன்னெடுக்கப்பட்டுத்தான் வருகின்றன இருந்தாலும் மேற்கத்திய நாடுகளின் உதவிகள் குன்றிவருவதால் சற்றுமந்தகதியில் தான் இவ்வாறான அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமையாக யுத்தமே இருக்கின்றது

கேள்வி: அபிவிருத்தியை காவுகொடுக்காது யுத்தத்தை முன்னெடுக்கும் கொள்கைக்கு ஏதேனும் வரையறைகள் உள்ளதா ? எந்தக்கட்டத்திலாவது இவை இரண்டையும் ஒருங்கே முன்னெடுத்துச்செல்லமுடியாத ஒருகட்டம் ஏற்படச்சாத்தியம் இருக்கின்றதா?

பதில் : அந்தச்சாத்தியக்கூறு இற்றைவரைக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் யுத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட நிலைமை 2000ம் ஆண்டு 2001ம் ஆண்டு போன்றொரு மோசமான நிலையை இற்றைவரைக்கும் அடையவில்லை என்றுதான் கூறவேண்டும் அதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன 2000ம் 2001ம் ஆண்டு பொருளாதார பிரச்சனைகளுக்கு மேலாக இராணுவரீதியாக அரசாங்க படைகள் குறிப்பாக வடக்கு போர்முனையில் பலபின்வாங்கல்களை கண்டிருந்தன அந்தொரு தருவாயில் பொருளாதார மீட்சி எட்டப்படமுடியாதொரு எதிர்வாக இருந்தது ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் இராணுவசெலவீனங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ள போதிலும் பொருளாதார அபிவிருத்தி சற்று மந்த கதியில் இடம்பெறுகின்றபோதிலும் யுத்தமுனையில் குறிப்பாக கிழக்குமாகாணத்தை பொறுத்தவரையில் ஒரளவு நிலைமை சுமுகமடைந்துவருகின்றது வடமாகாணத்திலும் யுத்தமுனையில் அரசாங்க படைகள் முன்னேறிச்செல்வதனால் ஒரு உளவியல் ஊந்துகோல் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப்படுகின்றது இது அண்மையில் இடம்பெற்ற மாகாணசபைத்தேர்தலிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது பொருளாதாரத்திற்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு முதலீட்டாளர்கள் எப்பொழுதும் ஏதாவது முதலீடு செய்யும் போது சற்று குறுகியநோக்கத்துடன் பார்ப்பதில்லை உள்ளுர்முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி நடுத்தரநீண்டகால நோக்கத்துடன் தமது முதலீடுகளை மேற்கொள்வார்கள் அந்தரீதியில் தொடர்ச்சியான இராணுவமுன்னேற்றங்கள் காரணமாக இற்றைவரைக்கும் ஒரு இக்கட்டான நிலை ஏற்படவில்லை இருந்தபொழுதிலும் இது பலவருடங்களுக்கு நீடிக்கும் நிலைகாணப்பட்டால் பொருளாதாரத்தை தக்கவைப்பது ஒருபிரச்சனைக்குரிய விடயமாகத்தான் இருக்கும்

கேள்வி இலங்கை அரசாங்கம் தனியார் நிதிநிறுவனங்களிடம் இருந்து அதிகவட்டியுடனான கடன்களை பெற்றுவருகின்றது இந்தநிலை இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்கருதுகின்றீர்கள் ?

பதில் இலங்கையை தற்பொழுது உலக ஸ்தாபனங்கள் ஒரு நடுத்தரவருமானமுள்ள நாடாகத்தான் கருதுகின்றன தலாவருமானத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கணித்துள்ளன அந்திய உதவிகள் இரண்டு வகையானவை ஒன்று சலுகை அடிப்படையான கடன்கள் மற்றையது நன்கொடைகள் அதை திருப்பிக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை இலங்கை ஒரு நடுத்தரநாடாக முன்னேற்றம் அடைந்துள்ளமை காரணமாக நன்கொடைகள் வருடாவருடம் குறைந்துகொண்டுதான் வருகின்றது எனவே உலக நாடுகள் சர்வதேச ஸ்தாபனங்கள் நடுத்தரவருமானமுள்ள நாடுகளுக்கு நன்கொடைகள் பெரிதாக கொடுப்பதில்லை இதன்காரணமாக முற்றுமுழுதாக பெரும்பாலும் வெளிநாட்டு கடன்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன வெளிநாட்டுக்கடன்களைப்பொறுத்தவரை சர்வதேச நிதி ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும் கடன்கள் அல்லது ஜப்பான் மேற்கத்தைய நாடுகள் போன்ற நாடுகள் மூலம் கிடைக்கும் கடன்கள் சலுகை அடிப்படையிலான வட்டி வீதத்தில் மிகக்குறைந்த வட்டிவீதத்தில் 2வீதத்திற்கும் குறைந்தவட்டிவீதத்தில் தான் பொதுவாக கடன்களை அளிப்பார்கள் ஆகவே அது சமாளிக்க கூடிய நிலையில்தான் இருந்தது ஆனால் இப்பொழுது கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் இராணுவ அரசியல் நிலவரம் காரணமாகவும் மனித உரிமை நிலைமை காரணமாகவும் அதைவிட பொருளாதார சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளாமை காரணமாகவும் சலுகை அடிப்படையிலான கடன்கள் குறைந்துகொண்டுதான் வருகின்றது இதன்காரணமாக மத்தியவங்கியும் அரசாங்கமும் கூடுதலாக சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து தனிப்பட்ட அடிப்படையில் கடன்களைப்பெற்றுவருகின்றார்கள் அதுமிகவும் அதிகமாக எட்டுவீதம் ஏழுவீதம் வட்டிவீதத்தில் வெளிநாட்டு பணத்தை கடன்பெற்றுவருகின்றார்கள் இதுபொருளாதாரத்தின் மீது பாரிய சுமையை ஏற்படுத்தியிருக்கின்றது இதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன தலா வருமானத்தில் அடிப்படையில் மட்டுமல்ல முன்புகூறியது போல பொருளாதார சீர்திருத்தமின்மை மற்றும் போர்முனைப்புக்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் இவ்வாறான பல்வேறு காரணங்களினால் தான் இந்தவொருநிலை ஏற்பட்டுள்ளது


கேள்வி உலக சந்தையை எடுத்துநோக்கினால் கடந்தசிலமாதங்களாக மசகு எண்ணெய்யின் விலைகளில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் கடந்த சில வாரங்களாக வீழ்ச்சி காணப்படுகின்றது ஆனாலும் இலங்கையில் அண்மையில் கூட எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இதற்கு என்ன காரணம் ?

பதில் சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும் உடனடியாக உள்ளுர் விலைகளை குறைக்கமுடியாத நிலவரம் இருக்கலாம் ஏனெனில் உதாரணத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை எடுத்துக்கொண்டால் மாதாமாதம் பெற்றோலியப்பொருட்களை இறக்குமதி செய்வதில்லை சிலவேளைகளில் இரண்டுமாதத்திற்கு ஒருமுறை மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்வதுண்டு ஆகவே பழைய இருப்புக்கள் இருந்தால் அதைவிற்கும் வரை நடைமுறையில் குறைக்கமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கும் இரண்டாவதாக பெற்றோலியக்கூட்டுத்தாபனம் கடந்த பல வருடங்களாக மில்லியன் கணக்கான நஷ்டத்தில் இருக்கின்றது ஆகவே அரசாங்கத்தினால் அதனை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளமுடியாத நிலை உள்ளது ஆகவே கடந்த பத்துபதினைந்து இருபது வருடங்களாக ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் முகமாக உலகசந்தையில் விலைகுறைந்தாலும் சிலவருடங்களுக்கு அல்லது சில காலங்களுக்கு உலகசந்தையில் விலை குறைந்தாலும் இங்கு குறைக்க முடியாத ஒரு நிலைமையில் தான் அரசாங்கம் இருக்கின்றது

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஜி எஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் இம்முறை புதுப்பிக்கப்படுவது தொடர்பில் நிச்சயமற்ற நிலைகாணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஒருவேளை புதுப்பிக்கப்படாதுபோனால் இலங்கையின் பொருளாதாரத்தில் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் ?

பதில் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன உண்மையில் ஜி எஸ்பி பிளஸ் திட்டத்தின் மூலம் இலங்கை கடந்த மூன்று வருடங்களாக பலனடைந்துவந்துள்ளது அதற்கு முன்னர் சாதாரண ஜி எஸ் பி திட்டத்தின் கீழ் கூட 2003ம் ஆண்டிலிருந்து பலனடைந்துகொண்டுவருகின்றது ஆடை உற்பத்தியை எடுத்துக்கொண்டால் அமெரிக்காதான் எமது பிரதான சந்தையாக இருந்தது அதற்கு அடுத்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இருந்தது இந்த ஜி எஸ்பி மற்றும் ஜிஎஸ்பி பிளஸ் திட்டங்களின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி அதிகரித்துக்கொண்டுவந்துள்ளது அதேநேரம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் குறைந்து கொண்டுவந்திருக்கின்றது இருந்தாலும் மொத்தத்தில் எடுத்துக்கொண்டால் ஜி எஸ் பி பிளஸ் சலுகை தற்செயலாக நிறுத்தப்பட்டாலும் கூட நிச்சயமாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியான நிலைக்குத்தள்ளும் என்று எதிர்வு கூற முடியாது ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் இதனால் சற்றுக்குறையலாம் இருந்தாலும் மாற்று சந்தைகள் குறிப்பாக அமெரிக்கா போன்ற சந்தைகளில் அதை ஈடுசெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன இருந்தபோதிலும் இந்தவருடம் சிலவேளை அடுத்த வருடம் அமெரிக்க பொருளாதாரம் தளர்ச்சியடைந்துகொண்டுவருகின்றது இந்ததறுவாயில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளை அதிகரிப்பது அரிதாகத்தான் இருக்கின்றன இவ்வாறான பல்வேறு காரணங்களினால் தற்செயலாக இந்தவருட இறுதியில் ஜி எஸ்பி பிளஸ் சலுகை நிறுத்தப்பட்டால் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகள் சற்று கடினமாகத்தான் இருக்கும் அதைக்கூடதற்போதையநிலையில் உறுதியாகக் கூறமுடியாது அமெரிக்காவில் இவ்வருட இறுதியில் ஜனாதிபதித்தேர்தல் இடம்பெறுகின்றது இதன்மூலம் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன ஆகவே தற்போதைய நிலையில் இது தொடர்பாக உறுதியாகக்கூறமுடியாது

மக்களைக் கொல்வதா மனிதநேய நடவடிக்கை ?




சார்க் அபிவிருத்தியை நோக்கி .....


யுத்த செயலகமா?


Saturday, March 28, 2009

இனப்பிரச்சனைத்தீர்விற்கு இந்தியா தலைமைத்துவத்தை வழங்குவதே இந்த தருணத்தில் முக்கியமானது


இந்தியாவின் எக்தா பரிசத் அமைப்பின் தலைவரும் காந்தி மன்றத்தின் உபதலைவருமான பி.வி ராஜகோபால்
பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடு என்றவகையில் இந்தியா அதன் தனிப்பட்ட நலனைமாத்திரம் கருத்திற்கொண்டு காய்களை நகர்த்தாது பொதுநலனைக்கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என இந்தியாவின் எக்தா பரிசத் அமைப்பின் தலைவரும் காந்தி மன்றத்தின் உபதலைவருமான பி.வி ராஜகோபால் தெரிவிக்கின்றார் தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்துவைக்கும் வகையில் இலங்கை வந்திருந்தவர் “கேசரி” க்காக வழங்கிய நேர்காணல்
( பேட்டிகண்டவர் ஆ.அருண்)

தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது ?

எரிக்சோல்மைக்கூப்பிட்டு அவர் இங்கு வந்துசெயற்படும் போது இங்குள்ள நிலைமை கலாசாரரீதியில் அவர்களால் புரிந்துகொள்ளப்படமுடியாதது நோர்வேநாட்டவர்களுக்கு இந்தப்பிரச்சனையை புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டமான விடயம்தான் ஏனென்றால் அவர்கள் வேறபாஷை வேற கலாசாரம் ஆனால் தெற்காசியாவில் ஒரேகலாசாரம் தான் பாகிஸ்தான் ஆனாலும் பங்களாதேஷ் ஆனாலும் இந்தியாவானாலும் ஸ்ரீலங்காவானாலும் ஒரே கலாசாரம் தான் அப்ப இந்த கலாசார அடித்தளத்திலிருந்து ஒரு ஐந்து பத்துபேர் வெளியவந்து பாராபட்டமற்றவகையில் சமரச முயற்சிகளில் ஈடுபடவேண்டும் அது கஷ்மீராக இருந்தாலும் சமரசம் செய்யவேண்டும் ஸ்ரீலங்காவாக இருந்தாலும் சமரசம் செய்யவேண்டும் தெற்காசியசமாதான கூட்டமைப்பு அதைத்தான் நினைக்கின்றது பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான ஆற்றலை இயலுமையை வளர்த்தெடுப்பது அவசியமானதாகும் யுத்தம் புரிகிறதற்கு எவ்வளவு ஆற்றல் இருக்கின்றதோ அது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இல்லை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எப்படி ஆற்றலை அதிகரிக்கமுடியும் தெற்காசியாவிலிருந்து ஒரு பத்துபேரை எப்படிச்சேர்த்து அதனை அமைப்பாக உருவாக்கி எங்கெங்க பதற்றநிலை காணப்படுகின்றதோ அங்கு சென்று அதைப்பார்த்து தீர்வுக்கு வழியேற்படுத்துவது தெற்காசியாவில் அனுபவமிக்கவர்களை ஒன்றுசேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி இங்கேயே சமரசம் செய்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதுஅதற்காக தான் இலங்கையில் சந்திக்க முடிவுசெய்தோம் பாகிஸ்தானில் என்ன பண்ண முடியும் இலங்கையில் என்ன பண்ண முடியும் பங்களாதேஷில் என்ன பண்ண முடியும் நேபாளத்தில் என்ன பண்ண முடியும். நேபாளத்தில் எவ்வளவோ பிரச்சனை இருந்தது தற்போது தேர்தல் நிறைவுற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தரப்பினரே ஆட்சி அமைத்துள்ளனர் பூட்டானிலும் ஜனநாயகம் மலரத்தொடங்கியுள்ளது பாகிஸ்தானில் எவ்வளோ பிரச்சனைகள் இருந்தன. அங்கு தேர்தல் நடந்து ஜனநாயகம் மலரத்தொடங்கியுள்ளதால் பிரச்சனைகள் குறைவடைந்துள்ளன பெரும்பான்மையான மக்கள் சமாதானத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர் அவர்கள் ஆயுதமோதல்களை விரும்பவில்லை அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையே தேவையாகவுள்ளது அதற்காகவே தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்
இந்தியாவில் உங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் யாது?

பலவருடங்களுக்கு முன்பாக இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் சம்பல்காடு என்ற இடத்தில் நிறைய கொள்ளைக்காரர்கள் இருந்தாங்க அங்கு தான் எனது பணியை ஆரம்பித்தேன் அவங்க கூட போய் பேசி முடிவுபண்ணி ஒரு ஆயிரம் கொள்ளைக்காரர்கள் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு முன்பாக தங்களுடடைய ஆயுதங்களை ஏந்திவந்து சரணடைந்தாங்க இரண்டுவருடகாலம் இந்தவழி சரியானதா அந்தவழிசரியானதா என சமரச முயற்சிகளில் ஈடுபட்டதனாலேயே அதுசாத்தியமாகியது அவர்களுக்குள் சண்டையிருந்தது சுரண்டல் இருந்தது வசதிவாய்ப்புக்கள் அற்ற நிலைகாணப்பட்டது இதனால் தான் அவங்க காட்டிலபோய் கொள்ளைக்காரர்களாக மாறியிருந்தாங்க ஆனாலும் பலதடவைகள் சமரசமுயற்சிகளில் ஈடுபட்டதன் வாயிலாக அவர்களுக்கே புரிந்தது இந்த வழியே சரியானதென்று நிம்மதியா வாழணும் காட்டில அலைஞ்சு அலைஞ்சு வாழ்றது சரியில்ல குடும்பத்திற்கும் பிரச்சனையாக இருக்கிறது ஆனால் நாங்க வெளிய வந்து குடும்பத்தோடு உட்கார்ந்து நிம்மதியா வாழலாம் அதற்கு ஒருவழிகிடைச்சா நல்லாயிருக்கும் என்று அவங்களே நினைச்சாங்க அதனால் தான் ஆயிரம் பேர் சரணடைந்து அதற்கப்புறம் பத்துப்பதினைந்து வருடங்கள் சிறையில் இருந்தாங்க அதன்பின்னர் அவங்களுக்கு கல்விபுகட்டி புனர்வாழ்வளிக்க வகைசெய்தேன் அதற்கப்புறம் நான் என்ன நினைச்சேன் என்றா வன்முறையில் இருவகையுண்டு யாரவது அடித்து உதைப்பதும் ஒருவகையில் வன்முறைதான் ஆனால் நிறையப்பேர் ஏழையாக இருக்கிறாங்க அவங்களுக்கு சாப்பாடு கூட இல்லாம கஷ்டமான நிலை உள்ளது அப்ப அவரைப்பற்றி நினைக்கவேண்டும் ஏழைகளாக இருந்தா கஷ்டமாக இருந்தா அவர்களுக்குள்ள வன்முறை ஒருநாள் வெளியே வந்துவிடும் சாப்பாடு இல்லாம கஷ்டமாக இருந்தா குற்றச்செயல்கள் நடக்கும் நம்ம சமூதாயத்தில் சமத்துவம் இல்ல அதனால் தான் நிறைய வன்முறைவெடிக்கின்றது என எனக்கு விளங்கியது சமத்துவம் இல்லை என்றா வன்முறையை முடிவுகட்டமுடியாது நீதியும் வேண்டும் சமத்துவமும் வேண்டும் இவை இரண்டும் இல்லாமலிருந்தா வன்முறை வந்திரும் அதனால் தான் கிராமங்கிராமமாக இளைஞர் குழுக்களைக்கூட்டி அவர்களுக்கு பயிற்சியளித்து திரும்பி சென்று சமூகத்தை ஒழுங்கமைத்து கிராமத்தில் சமத்துவம் எப்படி வரமுடியும் கிராமத்தில் நீதியை எப்படிக்கொண்டுவரமுடியும் அதைப்பற்றி பயிற்சியளித்து பெரிய அமைப்பாக அதனை மாற்றிவிட்டேன் எக்தா பரிசத் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் பெரிய அமைப்பாக மாற்றிவிட்டேன் இந்தியாவில் எட்டுமாநிலங்களில் நிறைய பணியாற்றுகின்றோம் கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாம்திகதி 25000பேர் குவாலிய+ரிலிருந்து டெல்லிக்கு 340கிலோமீற்றர்கள் பாதயாத்திரை சென்றோம் 25ஆயிரம் பேர் கால்நடையாக சென்று அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக்கொடுத்து காணிச்சீர்திருத்தத்தைக கொண்டுவரநிர்ப்பந்தித்தோம் காணிச்சீர்த்திருத்தத்தில் ஏழைமக்களுக்கு நிலங்களை பகிர்ந்தளிப்பதே இந்தியாவில் முக்கியமானது கிராமத்தில் நிறையப்பேர் ஏழைகள் அவர்கள் கையில் நிலம் இல்லை என்றால் சாப்பாடு கிடையாது இன்றைக்கு வேலைகிடைச்சா இன்றைக்கு சாப்பாடு இல்லாவிட்டால் டெல்லி பம்பாய் சென்று அங்குள்ள சேரிகளில் இருந்து சாப்பாட்டிற்கு வழிதேடவேண்டியதுதான் விவசாயிகள் இல்லாதவர்கள் கையில நிலம் விவசாயிகள் கையில் நிலமில்லை என்ற நிலைதான் அதனால் விவசாயிகளுக்கு நிலம் கொடுக்க வேண்டும் யார் வேலைசெய்கிறார்களோ அவர்கள் கையில நிலம் இருக்க வேண்டும் அதற்காக போராடணும் அந்தப்போராட்டம் ரொம்ப வன்முறைகளற்ற போரட்டம் எல்லாரையும் ஒழுங்கமைத்து ஒருமாதகாலம் தேசிய நெடுஞ்சாலையில் அங்கேயே படுத்துறங்கி அங்கேயே சாப்பிட்டு ஒருமாதம் நடத்ததற்கு அப்புறம் 11பேரை இழந்துட்டோம் இதில் மூவர் விபத்தில் உயிரிழந்தாங்க ஏனையோர் பலவீனமான நிலையில் இருந்ததால் உயிரிழந்தாங்க வன்முறையற்ற அஹிம்ஸை முறையில் போராடவேண்டும் என்றா யாருவேணும் என்றாலும் போராடமுடியும் வன்முறைகளடங்கிய ஹிம்ஸா முறையிலான போராட்டமென்றால் கொஞ்சம்பேரால் தான் பண்ணமுடியும் நிறையப்பேரால் முடியாது காந்தியும் கூட சாதாரணமக்களின் ஆயுதமாக அஹிம்ஸையைத்தான் கூறியிருந்தார் எமது போராட்டத்தில் வெற்றிகிடைத்தது அதற்கு காரணம் வன்முறைகளற்ற அஹிம்ஸை போராட்டமே வன்முறையற்றமுறையில் அரசாங்கத்தின்மீது எவ்வாறு அழுத்தங்களைப்பிரயோகிக்கமுடியும் அதைப்பற்றித்தான் நான் நிறைய பயிற்சியளித்திருக்கின்றேன் அஹிம்ஸை முறையில் எப்படி போராடமுடியும் எப்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கமுடியும் மாபெரும் வன்முறையற்ற சக்தி இருக்க வேண்டும் அது அரசாங்கத்தை எதிர்கொள்ளவேண்டும் அரசாங்கங்கள் பொறுப்புணர்வுடன் நடக்கவேண்டும் இப்ப அரசாங்கங்கள் பொறுப்பற்ற வகையில் நடக்கின்றன பெரிய பெரிய நிறுவனங்களுக்கு நிலங்களை அரசாங்கங்கள் தாரைவார்க்கின்றன அவை ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களென அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கவில்லை அதனால் தான் சமூகத்தில் பிரச்சனை அதனால்தான் வன்முறை வருகின்றது வாழ்வாதார வளங்கள் என்பவற்றை ஏழைகளுக்கு கொடுத்தே ஆகவேண்டும் வன்முறையற்ற வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதென்றால் நிறைய கிராமங்களில் இளைஞர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவேண்டும் வன்முறையற்ற இளைஞர் படையணியை உருவாக்குவதே தற்போது முக்கியமான பணியாகும் அது இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாமுழுவதிலும் செயற்படுத்தப்படவேண்டும் .

இலங்கையில் ஆரம்பக்கட்டமாக உங்கள் அமைப்பினால் என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள் உங்கள் எதிர்காலத்திட்டங்கள் என்ன ?

இலங்கையில் என்ன பண்ணலாம் என்றா பாருங்கள் இங்கு நிறையபேர் தமிழா இருந்தாலும் சரி சிங்களமாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் வசிக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளிலும் வடஅமெரிக்காவில் கணிசமான அளவில் இவர்கள் வாழ்கிறார்கள் இங்கே யுத்தம் முடிந்ததும் திரும்பிவரலாம் என்ற நினைப்பே அவர்களிடம் காணப்படுகின்றது யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு கொஞ்சம் முன்முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் கூறுகின்றோம் நீங்கள் முன்முயற்சி எடுக்காவிடின் யுத்தம் நிறைவிற்கு வரமாட்டாது சிங்கள சமூகம் தமிழ் சமூகத்தின்மத்தியிலும் தமிழ் சமூகம் சிங்கள சமூகத்தின் மத்தியிலும் பேசவேண்டும் அதற்கு சிங்கள சமூகம் சிங்க சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும் தமிழ் சமூகம் தமிழ் சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும் சிங்கள சமூகம் தமிழ் சமூகத்துடன் நிறையபேசவேண்டும் நிறையபேசவேண்டும் அப்பதான் ஏதாவது முடிவுபண்ணமுடியும் வெளிநாடுகளுக்கு சென்று யார்யார் நன்குவாழ்கிறார்கள் சம்பாதிக்கின்றார்களோ அவர்கள் இந்த பிரச்சனை தமக்கல்ல என்ற நினைப்பைக்களைய வேண்டும் ஏன்யுத்தம் நடக்கவேண்டும் எத்தனைநாள் யுத்தம் நடக்கவேண்டும் இந்த நாகரீக உலகிலே பேசியே முடிவுபண்ணமுடியவில்லை அதபேசுறதற்கு எப்படி ஊக்குவிக்கமுடியும் பௌத்த சமூகத்தை எப்படி ஊக்குவிக்கமுடியும் அதைப்பற்றி நினைக்கவேண்டும் யுத்தம் முடியட்டும் அப்ப திரும்பிப்போகலாம் என்று நினைக்காமல் நாம் முன்முயற்சியெடுத்து எப்படி யுத்தத்தை முடிக்க முடியும் அரசாங்கத்தின் மீது எப்படி அழுத்தம் கொடுக்கமுடியும் சிங்கள தமிழ் சமூகங்கள் மீது எப்படி அழுத்தம் கொடுக்கமுடியும் முஸ்லிம் சமூகத்தை எப்படி ஊக்குவிக்கமுடியும் என்று நாம் நினைக்கவேண்டும் யுத்தம் முடியட்டும் அப்ப திரும்பச்செல்லலாம் என்றுநினைக்காமல் நாம் முன்முயற்சியெடுத்து எப்படி யுத்தத்தை முடிக்க முடியும் அரசாங்கம் மீது எப்படி அழுத்தம் கொடுக்க முடியும் சிங்கள தமிழ் சமூகங்கள் மீது எப்படி அழுத்தம் கொடுக்கமுடியும் அதைப்பற்றி நினைக்கவேண்டும் வெளிநாடுகளில் வாழும் தாயகத்தவர்களை எப்படி இதுதொடர்பில் ஊக்குவிக்க முடியும் என்பதை ஆராயவேண்டும் உணர்வ+ட்டவேண்டியது எமது பணிகளில் ஒன்று அப்புறம் கிராமம் கிராமத்தில பயிற்சிகளை எப்படியளிக்கமுடியும் கோபம்வந்த அடி இடி என்று சொல்லாம கோபம் வந்தா எப்படிப்பேசி முடிவுபண்ணிறதென்று இதென்ன கோபம்தான் இல்லையா தமிழ் சமூகமும் சிங்கள சமூகமும் கோபந்தான் ஒருவரையொருவருக்கு பிடிக்காது ஆனால் கோபம் வந்தாலும் வீட்டில கணவன் மனைவிக்கிடையில கோபம் வந்தா அவங்க துப்பாக்கியை எடுத்துசுடுவதில்லை மாறாக பேசித்தான் முடிவுபண்ணணும் இலங்கை என்பது ஒரு குடும்பம் தான் அந்தக்குடும்பத்தில் பேசிச்சண்டையை முடிக்கின்ற கலாசாரம் வரவேண்டும் அந்தக்கலாசாரத்தை எப்படி வளர்த்தெடுக்கமுடியும் அதற்கு இளைஞர் பயிற்சியே முக்கியமானது இப்ப நடைபெறுவது இளைஞர் பயிற்சிதான் பாகிஸ்தான் நேபாளம் இந்தியா பங்களாதேஷ் போன்ற இடங்களில் இருந்து பயிற்சியளிக்கின்றனர் சண்டைவந்தா எப்படிபேசி அதை முடிவுபண்ணமுடியும் வெளிநாட்டில் வாழும்தாயகத்தவர்களிடம் பேசி அவர்களை இந்தபிரச்சனைத்தீர்வில் ஈடுபடுத்தவேண்டியது ஒருவிடயமாகும் இரண்டாவது ஆசியாவில் பிரச்சனையை முடிப்பதற்கு அனுபவமிக்க ஆசியகுழுவைத்தயார்பண்ணுவது மூன்றாவது கிராமத்தில கஷ்டம்வந்தா சண்டைவந்தா பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதற்காக ஒரு கலாசாரத்தை உருவாக்குவது அப்ப ஒருவேலை இளைஞருக்கு பயிற்சியளிப்பது அவர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் ஆற்றலைவளர்த்தெடுப்பது மற்றையவேலை ஆசியாவில் ஒரு குழுவை தயார்செய்து அவர்களை அனுப்பி காஷ்மீரில் என்றாலும் இலங்கையில் என்றாலும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது மூன்றாவதாக சர்வதேசரீதியில் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவாழ்பவர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பிரச்சனையைத்தீர்ப்பது தொடர்பான பொறுப்புணர்வை அதிகரிப்பது கிராமமட்டத்தில் அடுத்துவரும் ஐந்துவருடகாலப்பகுதியில் பத்தாயிரம் பேருக்கு பயிற்சியளிக்க வேண்டும் தெற்காசியவைப்பார்த்தால் அங்குள்ள நாடுகளில் 970 மாவட்டங்கள் உள்ளன ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருபத்துபேருக்கு சமாதானம் மற்றும் நீதிவிடயங்களில் பயிற்சிகளையளித்து நீதிக்காக சமாதானரீதியில் எப்படிப்போராடமுடியும் வன்முறையற்ற ரீதியில் எப்படிப்போராட அதைப்பற்றி அடுத்த ஐந்து வருடத்தில் பத்தாயிரம் பேருக்கு பயிற்சியளிப்பது முக்கியமானவேலை இரண்டாவது முக்கியமான வேலையாதென்றால் ஒரு சமாதான அமைப்பை ஏற்படுத்தி சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கத்துடன் பேசுவதற்கும் யார் யார் போராடுகின்றனரோ அவர்களுடன் பேசவேண்டும் பிரச்சனையின் தீர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எப்படியொரு குழுவைத்தயார்படுத்தமுடியும் அந்தக்குழு ரொம்ப நம்பகத்தன்மைமிக்கதாக இருக்கவேண்டும் யாரையாவது அனுப்பினா யாரும் பேசமாட்டாங்க நல்ல நம்பிக்கையுள்ள ஒரு பத்துபேர் இருந்தா அவர்கள் அனுபவமும் ஆற்றலும்மிக்கவர்களாக இருந்தா அவர்களின் பேச்சைகேட்கவேண்டும் அப்படியொருநிலைமை வந்தா தான் பேச்சுநடக்கமுடியும் இல்லாவிட்டால் பேச்சுநடக்கமுடியாது தெற்காசியாவில் நம்பகத்தன்மைமிக்கவர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்குவதே இரண்டாவதாக பிரதானமானது அடிப்படை மட்டத்தில் இளைஞர் பயிற்சி நடுத்தர மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நம்பத்தகுந்த குழுவை உருவாக்குதல் மூன்றாவது புலம்பெயர்ந்து வாழும் தாயகத்தவர்கள் பிரச்சனை தொடர்பாக அக்கறை எடுத்து அதில் தலையீடுகளைப்புரிவதற்காக இயலுமையை வளர்ப்பது இப்படி மூன்று கட்டங்களில் பணிகள் நடக்கப்போகுது அதற்கூடாக தெற்காசியாவின் ஒருநாட்டில் 25பேர் என்ற வகையில் ஆறுநாடுகளில் இருந்து 150பேரைச்சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி அவர்கள் உதாரணத்திற்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து சென்னை சென்னையிலிருந்து கொல்கொத்தா கொல்கொத்தாவிலிருந்து டாக்கா டாக்காவிலிருந்து காத்மண்டு காத்மண்டுவிலிருந்து டெல்லி டெல்லியிருந்து லாஹ{ர் அப்படியொரு பாதையில் ஒரு 150பேர் தெற்காசிய குடும்பமாக இரண்டுமாதங்கள் அவர்கள் யாத்திரைசெல்லவேண்டும் அது ஏன் பண்ணவேண்டும் என்றா ஒன்று நாம் எல்லாரும் சேர்ந்து எப்படி அமைதிக்காக பணியாற்றமுடியும் தெற்காசியாவில அமைதிவேண்டும் தெற்காசியாவில் நிறைய ஏழைகள் இருக்கின்றனர் தெற்காசியாவில் ப+கோளமயமாக்கல் என்றபோர்வையில் நிறைய தனியார் நிறுவனங்கள் வருகின்றன அவங்க நிலங்களையும் வளங்களையும் எடுக்கின்றனர் தெற்காசியாவில் அபிவிருத்தி எப்படிவரவேண்டும் என்பதை நாம் மீளவரையறைசெய்யவேண்டும் அபிவிருத்தி என்பது கொஞ்சப்பேர் நிறைய சம்பாதிப்பதாக இருக்ககூடாது கொஞ்சபேர் நிறைய சம்பாதிக்கின்ற அபிவிருத்தியையல்ல நாம் வேண்டுவது டாட்டா பில்லா ஜித்தல் மிட்டல் அல்ல நிறையபேர் ஏழைகளாக சேரிகளிலும் கிராமங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் மகாத்மா காந்தி என்ன சொன்னார் என்றால் அபிவிருத்தி என்ற அனைவருக்கும் வேலைகிடைக்கவேண்டும் எல்லாரும் நிம்மதியா சந்தோஷமா வாழவேண்டும் அதுதான் அபிவிருத்தி எல்லாரும் நிம்மதியாக சந்தோஷமா இருந்தால் தான் அதனை அபிவிருத்தி என்று கூறமுடியும் அபிவிருத்தியை மீள்வரையறைசெய்வதற்கே இந்த யாத்திரை அப்ப ஒரு 150பேர் போய் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களைச்சந்தித்து இதைப்பற்றிபேசவேண்டும் ஒரு நல்ல தெற்காசியாவை எப்படி அபிவிருத்திசெய்யமுடியும் அதைப்பற்றி அரசாங்கத்துடன் உட்கார்ந்து எப்படி பேசமுடியும் கிராமத்திலிருந்து மேல்மட்டம்வரை நிறைய பணிகள் இருக்கு அதற்காக தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் இலங்கையர்கள் இலங்கைப்பற்றியும் பாகிஸ்தான் இந்திய நாட்டவர்கள் அவரவர் நாடுகளைப்பற்றியும் நினைப்பதற்குமேல எல்லாரும் சேர்ந்து தெற்காசியாவைப்பற்றி நினைப்போம் இந்தியாவில இருந்து இலங்கைக்கு வருவதோ பாகிஸ்தானில் இருந்து இந்தியாவருவதோ தெற்காசியநாடுகளிலிருந்து சக நாடுகளுக்கு செல்லது கடினமாக இருக்கின்றது தெற்காசியா ஒரே கலாசாரத்தைக்கொண்டது கிட்டத்தட்ட ஒரே வரலாற்றைக்கொண்டது இதற்கிடையே நிறைய நகர்வுகள் இடம்பெறவேண்டும் பெரியவர்கள் கழுத்துப்பட்டி அணிந்தவர்கள் மட்டுமல்ல ஏழை எளியவர்கள் கூட போக்குவரத்துநகர்வுகளை மேற்கொள்ளத்தக்க நிலைவரவேண்டும் ஐரோப்பாவில் அதுதான் நடக்குது இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாகி ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தன இதனால் பிரஞ்சுகாரர்கள் இத்தாலிபோறாங்க ஜேர்மனியில் உள்ளவங்க இங்கிலாந்துபோகலாம் அப்படி நாடுகளுக்கிடையே நகர்வுகள் எளிதாகிற்று கட்டுப்பாடுகள் நீங்கிப்போயிற்று ப+கோளமயமாக்கலின் விளைவாக உலகமெல்லாம் ஒன்றாக வரும் என்று சொல்லுறாங்க அப்படி இருக்கையில் தெற்காசியாவிலேனும் மக்கள் சுதந்திரமாக நகர்வுகளை மேற்கொள்ளமுடியவில்லை என்ற அது ரொம்ப கஸ்டமானது விஸா கிடைக்கிறத்திற்கு இரண்டு மாதம் அப்ப எப்படிப்போக முடியும் நாடுகளிடையே அதிக நடமாட்டம் வரவேண்டுமானால் அதற்கான சூழ்நிலை ஏற்படவேண்டும் சந்தேகம் குறைந்தால் தான் மக்கள் நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் சந்தேகம் இல்லாமல் மதிப்பும் அன்பும் வந்தால் தான் தெற்காசியா நல்ல தெற்காசியாவாக மாறமுடியும் அது தான் தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பின் விரும்பம் ஒருநிம்மதியும் வேணும் நீதியும் வேணும் அதற்கு எப்படி வேலைபண்ணமுடியும் அதில நிறையப்பேரைசேர்க்க வேண்டியிருக்கு அந்தவேலையில டொக்டர்கள் வேணும் ஊடகவியலாளர்கள் வேணும் வழக்கறிஞர்கள் வேணும் எல்லாரும் சேர்ந்து எப்படி நல்ல தெற்காசியாவை உருவாக்க முடியும் இதுவே தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பின் முக்கியமான நோக்கமாகும்.



இலங்கைப்பிரச்சனையில் இந்தியாவின் பங்கு எத்தகையதாக இருக்கவேண்டும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் ?

பிராந்தியத்தில் பலம்வாயந்த நாடு என்றவகையில் இநதியா அதன் தனிப்பட்ட நலனைமாத்திரம் கருத்திற்கொண்டு காய்களை நகர்த்தாது பொதுநலனைக்கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் பொருளாதார நலனைமாத்திரமே கருத்திற்கொண்டு இழைத்த தவறுகளின் விளைவை இந்தியா அனுபவித்துள்ளது ராஜீவ் காந்தியின் மரணம் கூட இந்தியா இழைத்த தவறுகளின் விளைவுதானே போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு உதவியளித்த இந்தியா அதனை முடித்துவைக்கவும் உதவியளிக்கவேண்டும் இந்த யுத்தங்கள் எல்லாம் ஆயுதவியாபாரிகளின் தேவைகளுக்காகவே நீடித்து செல்லப்படுகின்றது இந்தியா இலங்கையில் என்னநடக்கின்றது என்பதை உண்மையில் புரிந்துகொண்டுள்ளதா என்பது எனக்கு விளங்கவில்லை நாடுகள் பிளவுபட்டு சிறிய நாடுகள் உதயமாவதனூடாக உதாரணத்திற்கு இலங்கை இருநாடாகவோ அன்றேல் இந்தியா 20நாடுகளாகவோ பிளவுபடுவதனூடாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியாது இறுதியாக கிராமங்களுக்கு அதிகபட்ட அதிகாரங்களை அதாவது வளப்பங்கீடு மற்றும் தீர்;மானமெடுத்தலுகான அதிகாரங்கள் வழங்கப்படுவதே நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்;வாக அமையமுடியும் இந்தியாவின் பஞ்சாயத் ராஜ் முறைமையும் இதை அடியொற்றியதே ஆனால் அதன் உண்மையான எதிர்பார்ப்புக்கள் எட்டப்பட்டதா என்பது கேள்விக்குரியதே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுமாக இருந்தால் அதனால் பயன் இருக்கமுடியாது மாறாக கிராமங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் கிராமங்களில் வேலைவாய்ப்பை ஏற்படு;த்த விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கலை கலாசாரத்தை வளர்ப்பதற்கு அதிகாரங்கள் இருக்கவேண்டும் காஷ்மீரில் பிரச்சனை இருக்கையில் எப்படி இலங்கையில் தலையிடமுடியும் என்ற தர்மசங்கடம் இந்தியாவிற்கு இருக்கமுடியும் உங்கள் நாட்டிலேயே பிரச்சனையை வைத்துக்கொண்டு இங்கு ஏன் மூக்கைநுழைக்கின்றீர்கள் என இலங்கை அரசாங்கம் கேள்விஎழுப்புக்கூடும் என இந்தியா எண்ணக்கூடும் காஷ்மீர் பிரச்சனையைத்தீர்த்து வைத்து தலைமைத்துவத்தை இந்தியா வழங்கக்கூடும் தலைமைத்துவத்தை வழங்குவதே இந்த தருணத்தில் முக்கியமானது யுத்தத்தைச்செய்வதற்கன்றி சமாதானத்தைக்காண்பதற்கே தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும் மகாத்மா காந்தியை ஏன் வரலாறு போற்றிப்புகழ்ந்து நினைவுகொள்கின்றது ஹிட்லரை ஏன் அவ்வாறு நினைவுகொள்ளவில்லை எதிரியுடன் சமாதான வழியில் செல்பவரையே வரலாறு நினைவுகொள்ளும் இந்தியா செய்யவேண்டியதெல்லாம் தலைமைத்துவத்தை வழங்குவதே தமது பிரச்சனைகளைத்தீர்த்து தலைமைத்துவம் கொடுக்கவேண்டும் இந்தியா சாதகமான பங்களிப்பை வழங்குகின்ற விடயத்தில் அதன் ஊடகங்கள் ஆக்கப+ர்வமான பங்களிப்பை வழங்கமுடியும் காஷ்மீர்பிரச்சனையாக இருக்கட்டும் இலங்கைப்பிரச்சனையாக இருக்கட்டும் அங்கு தீர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் சாதகமான பங்கை வகிக்கத்தக்கவகையில் இந்தியாவின் புத்திஜீவிகள் சமூகமானது அழுத்தங்களைக்கொடுக்கவேண்டும் முதலில் கருத்துருவாக்கம் வரவேண்டும் அப்படி வரும்போதே அரசாங்கம் ஏதேனும் பண்ணும் அந்த கருத்துருவாக்கத்தை கட்டியெழுப்புவதே எமது வேலை சார்க் அமைப்பு வெறுமனே வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக மாத்திரம் அதன் பணிகளை மட்டுப்படுத்தக்கூடாது அப்படி வர்த்தகநலனைகளே நோக்காக இருந்தால் அது பொறுப்பு வாய்ந்த சார்க் அமைப்பாக இருக்கமுடியாது யுத்தங்களை முடிவிற்கு கொண்டுவந்து சமாதானத்தைகாண்பதிலும் சார்க் அதன் பங்கை ஆற்றவேண்டும் யுத்தம் இல்லாமல் சமாதானம் நிலவினால் அனைத்திற்கும் அது நன்மைபயக்கும் வர்த்தகத்திற்கும் அது துணைசெய்யும் சமாதானம் நிலவினால் யுத்தற்காக செலவிடும் பெருந்தொகைப்பணத்தை அபிவிருத்திப்பணிகளில் முதலிடமுடியும் அப்படி அபிவிருத்தி நிகழுமிடத்து அதிலீடுபடும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அது நல்லதுதானே அவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறமுடியும் அந்தவகையில் தனிப்பட்ட நலன்களுக்கும் இது நல்லது தெற்காசியப்பிராந்தியத்தில் சமாதானம் நிலவினால் பொருளாதாரவளர்ச்சிக்கும் வர்த்தக முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் அது நன்மை பயக்கும் யுத்தம் என்பது அனேகநேரங்களில் அதனால் பணம்பண்ணும் தரப்பினரின் தேவைக்காகவே நடத்தப்படுகின்றது யுத்தமே ஒரு வர்த்தகம் தான் நிறையப்பேர் இதனால் சம்பாதிக்கின்றனர் யுத்தம் முடிந்தால் வர்த்தகமும் முடிந்துவிடும் என்றபடியால் அவர்கள் அதனைத்;தொடர்ந்தும் முன்னெடுக்கவே வழிசெய்கின்றனர் தற்போது யுத்தம் தீவரமடைந்துள்ள நிலையில் யதார்த்த ரீதியில் சமாதானத்தை கொண்டுவரமுடியுமா? நாங்கள் நினைக்கிறது யதார்த்தமானது தான் நான் பலவருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் சம்பல்காட்டில் பணியாற்றச்சென்றபோது என்னதம்பி சின்ன வயசுல இதெல்லாம் பண்ண முடியுமா என்றும் இது நடக்காத காரியம் சும்மா நேரத்தை வீணடிக்காதே என்று கூறினாங்க எனினும் இரண்டு மூன்று வருடம் பணியாற்றியபின்னர் சுமார் ஆயிரம் கொள்ளைக்காரங்க தமது ஆயுதங்கள் சகிதமாக காந்தியின் படத்திற்கு முன்னால் போட்டபோது தான் உன்னால பண்ணமுடியும் என்று ஒத்துக்கொண்டாங்க செய்தா எதுவும் முடியும் யுத்தம் மனிதனின் மனதில் தான் உதயமாகிறது என்று ஆங்கில பொன்மொழியுண்டு அந்த வகையில் மனிதனின் மனதிலேயே யுத்தம் முடிவிற்கு வருகின்றது யுத்தம் தொடங்கிறதும் மனதில் தான் முடியுறதும் மனதில் தான் மனிதில் மாறுதல் வந்தால் அனைத்து மாற்றமும் வரமுடியும் அதற்கு மனதில் புதிய கனவு வரவேண்டும் நிறையபேருக்கு நீதிக்காக போராடவேண்டும் என்ற கனவிருக்கு போராடி நீதியைப்பெறவேண்டும் என்று நினைக்கின்றார்கள் காந்தி பண்ணின மாதிரி நிறையபேருக்கு வன்முறையற்ற விதத்தில் போராடும் நுட்பங்கள் தெரியுமிடத்து பிரித்தானியர்களுக்கு எதிராக போராடவேண்டும் அதை வன்முறையற்றவகையில் போராடவேண்டும் என்று காந்தி கூறினார் பிரித்தானியருக்கெதிராக வன்முறையற்ற ரீதியில் போராடுவதாக இருந்தால் அவர்களிடம் எம்மைவிட அதிகமான ஆயுதங்கள் இருந்தன அந்த வகையில் நாம் வன்முறையற்ற அஹிம்ஸை போராட்டத்தை முன்னெடுத்ததாலே அவர்கள வெற்றிகொள்ளமுடிந்தது அதேமாதிரி நான் என்ன நினைக்கின்றேன் என்றா தெற்காசியாவில் வன்முறையற்ற அஹிம்ஸைக்கலாசாரம் வந்தால் தான் நின்று நிலைக்ககூடிய சமாதானம் வரும் நான் நினைக்கிறன் முடியும் நிறையப்பேரை பயிற்றுவித்து இளைஞர்படையணியைத்தயார்ப்படுத்த வேண்டும் ஆம் வன்முறையற்ற இளைஞர் படையணியை அதாவது சமாதான படையணியைத்தயார் பண்ணவேண்டும் தெற்காசியாவில் வன்முறையற்ற படையணியை தயார் பண்ணினால்தான் இதுமுடியும் இப்ப கஷ்டம் இருக்கலாம் விரக்தியிருக்கலாம் ஆனால் நிறையப்பேர் முன்வந்து முயற்சியெடுத்தால் சாத்தியமாகும் தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பு ஆரம்பித்தமைக்கும் இதுவேகாரணமாகும்
அஹிம்ஸை என்பது ஒரு ஆயுதமே அதனைக்கையாளத்தெரியாதவர்களே வன்முறை வழியில் செல்கின்றனர் வன்முறையற்ற போராட்டம் அதாவது அஹிம்ஸைப்போராட்டம் தற்போதைய காலகட்டத்திற்கு சாத்தியமானதா ? அதிலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு வன்முறையற்ற தீர்வு சாத்தியமாகும் என நம்பிக்கை கொண்டுள்ளீர்களா ?
பிரச்சனையை அமர்ந்து பேசி தீர்வுகானமுடியாதநிலையிலேயே
ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது நீண்ட நாள் ஆயுதப்போராட்டத்திற்கு பின்னர் அரசாங்கமும் களைத்துப்போய்விட்டது விடுதலைப்புலிகளும் களைத்துப்போய்விட்டனர் என்று நான் நினைக்கின்றேன் எவ்வளவுபோராடமுடியும் எவ்வளவு வருடம் போராடமுடியும் இதற்கு நிறையப்பணம் வேண்டும் நிறையவளங்கள் வேண்டும் நிறையப்பேர் உயிர்களைத்தியாகம் செய்யவேண்டும் இந்த தியாகங்களெல்லாம் இறுதியில் எதற்காக நிம்மதியாக வாழ்கின்றதற்காகத்தான் சுகமாக வாழ்கின்றதற்காகத்தான் எல்லாத்தியாகங்களையும் புரிகின்றனர் அடுத்தசந்ததியினர் சந்தோஷமாக வாழணும் என்பதற்காகவே உயிரையே தியாகம் செய்கின்றனர் நீண்டகாலம் போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அமர்ந்து பேசவேண்டும் நாங்கள் பேசமாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுக்ககூடாது போராட்டம் என்பது பேச்சுவார்த்தைக்கு இட்டுச்செல்வதற்காகவே ஏனெனில் இறுதியாக பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்கப்படமுடியும் போராட்டம் மூலம் அழுத்தங்களைக்கொடுக்கவேண்டும் பின்னர் அமர்ந்து பேச வேண்டும் அப்புறம் அழுத்தம் கொடுக்கவேண்டும் அமர்ந்து பேச வேண்டும் பேசமாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தால் தியாகம் தியாகம் தியாகம் இப்படி நிறையப்பேரைத்தியாகம் செய்யவேண்டியேற்படும் அந்த நிலையில் வாழ்வதற்கு நேரம் இல்லாமல் போகும் அல்லவா அதனால் தான் போராட்டத்தின் இறுதியில் உட்கார்ந்துபேசி தீர்வுகாணவேண்டும் எனநான் நினைக்கின்றேன் போராட்டத்திற்கு பின்னர் அமர்ந்து பேச்சுவர்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வுகண்ட நிறைய உதாரணங்கள் உள்ளன வன்முறையான போராட்டமானாலும் வன்முறையற்ற போராட்டமானாலும் ஈற்றில் எமக்கு எது தேவையென்றால் எமது எதிர்கால சந்ததியினருக்காக நிம்மதியான வாழ்க்கையேயாகும் அநீதிகளுக்கு எதிராக போராடுகின்றதற்கு மட்டுமல்ல அந்த போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்டு அடுத்த தலைமுறைக்கு நிம்மதியாக வாழ்க்கையைக்கொடுக்கின்ற பொறுப்பும் போராடுபவர்களுக்கு உள்ளது இருதரப்பினரும் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கான காலம் தற்போது கனிந்துள்ளதென நான் நினைக்கின்றேன்

+

Friday, March 27, 2009

இலங்கையில் போரை இந்தியா எந்தவிதத்திலும் ஆதரிக்கவில்லை

பேராசிரியர் பி சகாதேவன்



1)இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை பரந்துபட்டரீதியில் பார்க்கவேண்டும்

2)தேர்தல்கள் ஜனநாயத்தின் அடிப்படை என்கிறபோது இந்தியா எவ்வாறு அதற்கு தடங்கலாக இருக்கமுடியும்

3)13வது திருத்தச்சட்டம் தீர்வுவிடயத்தில் முடிவாக இருக்குமானால் அது சந்தோசமான விடயமில்லை
4) இலங்கை இராணுவத்திற்கு நாசகார ஆயுதங்களை இந்தியாவழங்கவில்லை

5) மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையில் நிகழ்வதை இந்தியா அங்கீகரிக்கவில்லை


இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைமீறல்கள் விடயத்தில் இந்தியா பகிரங்க அறிக்கைகளை விடுத்து உலகத்திற்கு தெரியப்படுத்தாவிடினும் இராஜதந்திர ரீதியில் அதன் கரிசனைகளை வெளிப்படுத்திவருகின்றது என புதுடில்லி ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தெற்கு மத்தி தென்கிழக்காசியா மற்றும் தென்மேற்கு பசுபிக் கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவருமான பேராசிரியர் பி சகாதேவன் தெரிவித்துள்ளார்

தெற்காசியாவில் பன்மைவாதம் தொடர்பான பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்புவந்திருந்த நிலையில் பேராசிரியர் எமக்களித்த பிரத்தியேக நேர்காணலின் போது அவர் அளித்த பதில்கள்










கேள்வி : இந்தியா தற்போது இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது?

பதில் : இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்றால் அதை வெளிப்படையாகவே சொல்லலாம் அதுவந்து இந்தியா எந்தவிதத்திலும் சரி போரை விரும்பவில்லை இதை இங்குள்ள அரசாங்கத்திற்கு பலதடவை சொல்லியிருக்கின்றது சொல்லியும் பிரயோஜனம் இல்லாமல் ஆகிவிட்டது அதைவைத்து பார்க்கபோனால் இந்தியாவினுடைய ஒருமுக்கிய குறிக்கோள் என்னவென்றால் சமாதானபேச்சுவார்த்தையின் மூலம் ஒரு அமைதிதிரும்பவேண்டும் அமைதிதிரும்பவேண்டும் என்றால் அதற்கு ஒரு உடன்படிக்கை வரவேண்டும் அப்படிப்பட்ட ஒருபயனுள்ள ஒருவிளைவைத்தான் இந்தியாவிரும்புகின்றது அப்படிப்பட்ட ஒருமுடிவைத்தான் இந்தியாவிரும்புகின்றது போரை எந்த விதத்திலும் இந்தியா ஆதரிக்கவில்லை


கேள்வி: ஆனபோதிலும் இலங்கை இராணுவத்தளபதி அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக செய்திகள் இலங்கையின் உள்ளுர் ஊடகங்களில் தகவல்வெளியாகியிருந்தன இதனை எப்படிப்பார்க்கின்றீர்கள்

பதில் :


உண்மையாகவே இலங்கையின் இராணுவத்தளபதி இந்தியாவந்த போது எத்தனைசெய்தித்தாள்களில் அவருடைய விஜயத்தைப்பற்றி எழுதினார்கள் அந்தச்செய்திகள் வெளிவந்தது என்று பார்க்கப்போனால் எந்தப்பேப்பரிலும் அதிகமாக வர்ல்ல ரொம்ப சின்ன சின்ன ஒன்றோ இரண்டோ பெரிய முக்கியம் இல்லாத செய்தித்தாள்களில் அவருடைய விசயங்கள் வந்தது அதுவும் ரொம்ப விபரமாக இல்ல அது ஒருபக்கம் இரண்டாவதாக இவருடைய விஜயத்தை வந்து இராணுவ அடிப்படையில் பார்க்கவேண்டும் இரண்டு நாடுகளுடைய இராணுவங்கள் இருக்கின்றதென்றால் இரண்டு நாடுகளின் இராணுவத்தளபதிகளுக்கிடையில் சில உறவுகளுண்டு அந்த உறவுகளைவைத்துவந்து இந்தியாவின் இராணுவத்தளபதி அண்டைநாடுகளுடைய இராணுவத்தளபதியோ இல்ல மற்ற வேறுநாடுகளுடைய இராணுவத்தளபதியைக் கூப்பிடுகின்றது சகஜமானது இது ஒரு பெரிய காரியம் கிடையாது ஆனால் இலங்iயைப்பொறுத்தவரை இலங்கை தளபதி வரும் போது அதற்கு பெரிய அரசியல் முக்கியத்துவம் இந்த நாட்டில் இருக்கின்றது ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் இந்தியாவைப்பொறுத்தவரையில் இவர் வந்தார் இவர் வந்தபோது காஷ்மீருக்கு கொண்டு போனார்கள் அந்த நிலைமைகளை காண்பித்தனர் மிசோரம் போனாங்க இதெல்லாம் இந்தியாவிற்கு ஒரு பெரிய விடயம் கிடையாது ஆம் இலங்கையை எடுத்துக்கொண்டால் இதுஒரு பெரிய விடயம் ஏனென்றால் இப்பொழுதைய நிலைவந்து அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை உண்டுபண்ணியுள்ளது இங்கே நடக்கின்ற சம்பவங்கள் வந்து ஒரு முக்கியத்துவத்தை உண்டு பண்ணியிருக்கின்றது அரசாங்கத்தரப்பிலேயோ அரசியல் ரீதியான தரப்பிலேயோ பார்க்கபோனால் இந்த விஜயத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் இந்திய அரசாங்கத்தைப்பொறுத்தவரை ஏதேனும் ஒரு நடவடிக்கை ஏதேனும் ஒரு தீர்மானம் கொண்டுவரவேண்டுமேயானால் அது ஒரு அரசியல் தலைவர்கள் எடுக்கின்ற ஒன்றாக இருக்குமே ஒழிய இராணுரீதியாக எடுக்கின்ற ஒரு தீர்மானம் கிடையாது ஆக மொத்தத்தில் என்னைப்பொறுத்தவரையில் நான் அவருடைய விஜயத்தை எப்படிப்பார்க்கின்றேன் என்றால் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க அவசியமில்லை

செய்தி : இலங்கை அரசாங்கத்தினால் அனைத்துக்கட்சி குழுவினூடாக தீர்வு திட்டமாக சமர்பிக்கப்பட்டுள்ள தீர் 13வது அரசியல்யாப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தீர்வை தமிழ்மக்களின் அபிலாஷைகளை ப+ர்த்தி செய்யப்போதுமான ஒரு தீர்வுத்திட்டமாக இந்தியா கருதுகின்றதா ?

பதில் :
இந்தியாவின் நிலைமை ஒரு இக்கட்டான நிலைமை இலங்கையில் ஒரு பக்கம் பார்த்தால் போர் நடக்கின்றது மறுபக்கம் பார்த்தால் அரசியல் ரீதியான முன்னெடுப்பப்புக்கள் இடம்பெறுகின்றன அரசியல் ரீதியான செயற்பாடுகள் அனைத்து சமயங்களிலும் நல்லதாக முடியும் எனக்கூறிவிடவும் முடியாது போர் ஒருபுறம் அரசியல் முன்னெடுப்புக்கள் மறுபுறம் என்றிருக்க இரண்டுக்கும் இடையே இந்தியாவின் எண்ணோட்டம் எவ்வாறு இருக்கின்றதென்றால் ஏதாவது ஒரு செயல் நடக்கட்டும் இங்கவுள்ள அரசாங்கம் வந்து இந்தவொரு சூழ்நிலையில் வந்து இந்த மாதிரியான ஒரு செயல்பாட்டை தொடங்குமேயானால் 13வது அரசியல்யாப்பு திருத்தத்தைக்கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தலாம் அப்படி ஒரு யோசனையை வைக்கின்றார்களேயானால் இந்தியா இதனைவேண்டாம் என்று சொன்னால் ரொம்ப அசிங்கமான விடயம் இரண்டாவது விடயம் இந்த 13வது திருத்தச்சட்டம் இலங்கை தமிழ்மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்யப்போகின்றதா இல்லை அவர்களின் அபிலாஷைகளை குறைவாகவே தீர்க்கப்போகின்றதா அப்படி ஒரு விவாதம் வரும் போது அதில் ரொம்ப வித்தியாசமான கருத்துநிலைகள் வரலாம் ஆனால் அரசாங்கத்தைப்பொறுத்தவரையில் எதுவும் நடக்காத நிலையில் இப்படியொன்று நடக்கின்றது என்றால் ஒரு முயற்சியை தொடங்குவதற்காக அது ஒரு ஆரம்பமாக இருக்க முடியும் மற்றுமொரு கட்டத்தில் வேறு பெரிதாக அமையலாம் என்பதே இந்தியாவின் எண்ணோட்டமாக இருக்கின்றது அதனால் தான் இந்திய அரசாங்கம் இதனை வரவேற்றிருக்கின்றது என்னைப்பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் 13வது அரசியல்யாப்பு திருத்தச்சட்டம் இருபது வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவம் அந்த இருபது வருடங்களில் ஏகப்பட்ட ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன ஆனால் இப்பொழுது 13வது திருத்தச்சட்டம் வந்து மாகாணசபை முறைமை அதிகாரப்பரவலாக்கம் என்பன நல்ல முறையில் நடக்கவில்லை அதனை நல்ல முறையில் இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை அந்த ஒரு தருணத்தில் வந்து என்னுடைய அபிப்பராயம் என்னவென்றால் முன்னேற்றகரமான அதிகாரப்பகிர்வு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும் கடந்தகாலத்தில் நடைமுறையில் செயற்படுத்தமுடியாது போன திட்டத்தை செய்கின்றது என்பது வந்து சங்கடமான ஒரு விடயம் தான் ஆனால் இதனை ஒரு முடிவாகவன்றி ஒரு ஆரம்பமாக இருந்து இதற்கு பின்னால் நல்ல விடயங்கள் திட்டங்கள் வருமேயென்றால் பரவாயில்லை வரவேற்கலாம் அப்படி வரவேண்டும் வரவில்லை என்றால் 13வது திருத்தச்சட்டத்துடனேயே நிறுத்திவிடுவோம் இதற்கு மேல் ஒன்றும் நடக்காது இதுதான் இறுதியானது என்று சொல்லிவிட்டால் அதுவந்து ரொம்ப சந்தோசமான விடயமில்லை ஏனென்றால் 13வது அரசியல் அமைப்பு திருத்தம் என்ன கொடுக்கின்றதென்றால் இதற்கு முன்னாடியிருந்த அரசாங்கங்கள் என்ன கொடுக்க தயாராக இருந்தனவோ அதைவிட குறைவாகக்கொடுக்கின்றது அதனால் தான் பிரச்சனை இந்திய அரசாங்கத்தின் நிலை வேறாக இருந்தாலும் சரி நம்புடைய கல்வியில் கருத்தென்று வருகின்றபோது மற்றப்பார்வையில் நாம் பார்க்கலாம் ஆக மொத்தம் இந்தியா ஏன் வரவேற்கின்றதென்றால் வேறு எதுவும் நடக்கவில்லை இங்கே இதாவது நடக்கட்டுமே என்பதற்கேயாகும்


கேள்வி: இந்தியா ஆயுதவன்முறைகளை விரும்பாத நாடு எனினும் கிழக்கிலே நடைபெற்ற தேர்தல்களில் ஆயுதங்களை இன்னமுமே கையளிக்காத குழுவினர் பங்கேற்ற தேர்தல்களை இந்தியா எப்படிப்பார்க்கின்றது?

தேர்தல் என்று வரும் போது அது ஒரு ஜனநாயக செயற்பாடு அதனை ஜனநாயக முன்னெடுப்பின் அங்கமாகவே பார்க்கவேண்டும் பிள்ளையான் குழு கருணா குழு இவர்களை இந்தியா எந்தநிலையிலும் அங்கீகரித்ததாகவில்லை அங்கீகரிக்கவுமில்லை அங்கீகரிக்கவும் மாட்டாது ஆனால் தேர்தல் என்பது ஒரு அரசியல் நடைமுறையின் ஒர் அங்கம் அப்படியென்று வரும் போது கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலை இந்தியா ஏன் எதிர்க்க வேண்டும் அதனால் தான் வரவேற்கின்றது அதை ஒரு சாதகமான பக்கமாகவே நாம் எடுக்கவேண்டும் எந்த நாட்டிலேயும் எந்த பகுதிலேயும் ஒரு தேர்தல் நடக்கின்றதென்றால் அது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் அப்படித்தான் இந்தியா பார்க்கின்றது அதனால் தான் இந்தியா வரவேற்கின்றது ஆனால் அப்படி வரவேற்கின்ற நிலையில் வந்து இந்த குழுவையோ அந்த குழுவையோ இந்தியா அங்கீகரிக்கின்றது அதை எதிர்க்கின்றது இதை எதிர்க்கின்றது எனப்பார்ப்பது பாதகமான முறையில் பார்ப்பதாக அமையும் அந்தவகையில் இந்தியா இவர்களையெல்லாம் நிச்சயமாக இந்தியா அங்கீகரிப்பதாக அமையாது

கேள்வி: கிழக்கிலே மாகாணசபைத்தேர்தல்களை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது ஆனால் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைந்த வடக்குகிழக்கு மாகாணங்கள் என்பது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது தற்போது அது பிரிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கிழக்குமாகாணத்திற்கு மட்டும் தனியே தேர்தல்கள் நடத்தப்படுவதை இந்தியா எப்படிப்பார்க்கின்றது ?

இதுவரைக்கும் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று எனக்கு தெரியவில்லை ஆனால் அடிப்படைப்பிரச்சனை என்னவென்றால் அது மாகாணங்கள் பிரிக்கப்பட்டவிடயமாகும் அதில்தான் நாம் பார்க்கவேண்டும் தேர்தல் நடக்கப்போகிறதை அடிப்படையாக வைத்துநாம் பார்க்கமுடியாது இந்தியாவின் நிலை எப்படியிருக்க வேண்டும் என்றால் இந்தியாவந்து மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை விரும்புகின்றதா இல்லையா என்பதையே இதில் கருத்தில்கொள்ளவேண்டும் அதைவைத்துபார்க்கபோனால் இந்தியா மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை இந்தியா எதிர்க்கவில்லை ஏனென்றால் இந்திய அரசாங்கத்தின் நிலை என்னவென்றால் இது ஒரு நீதிமன்ற தீர்ப்பு நீதிமன்ற ஒரு தீர்ப்பை வழங்கியது அதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன அதைத்தவிர்க்க அரசியல் ரீதியான ஒரு நடவடிக்கையை இங்குள்ள அரசாங்கம் எடுக்கவில்லை அதைசெயல்படுத்த இந்தியா ஒரு அழுத்தம் கொடுக்கவில்லை அப்படியொரு முடிவிற்கு நாம் வரவேண்டும் ஏனென்றால் இந்தியா இலங்கை ஒப்பந்தம் படி மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டபோதும் நிரந்தரமான இணைப்பு நடைபெறவேண்டுமேயானால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் பல்வேறு காரணங்களினால் அதைச்செய்யமுடியவில்லை ஆகமொத்தத்தில் கிழக்கு மாகாணசபைத்தேர்தல் நடக்கப்போகின்றது அதை இந்தியா எப்படிப்பார்க்கும் என்பதைவிட மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை இந்தியா விரும்புகின்றதா அதற்கு இந்தியா என்னசெய்யப்பபோகின்றது என்றுதான் நாம் பார்க்கவேண்டும் அதைவைத்து பார்க்கபோனால் இந்தியாவின் நிலை இலங்கை அரசாங்கத்தினுடைய நிலையை ஒத்ததாகவுள்ளது ஏனென்றால் இது ஒரு நீதிமன்ற தீர்ப்பு அயல்நாடுவந்து இங்கு வழங்கப்படும் நீதிமன்றத்தீர்;ப்பை விமர்சிக்குமேயானால் சில பாதகமான விளைவுகள் வரலாம் அதனைவைத்துதான் இந்திய அரசாங்கத்தின் நிலை தற்போதுள்ளது

கேள்வி : கிழக்கு மாகாணசபைத்தேர்தல்களை இரத்துச்செய்வதற்கு இந்தியா செயற்படவேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் இதற்கு இந்தியா எவ்வாறான பிரதிபலிப்பை காண்பிக்கும் நீங்கள் எங்ஙனம் பார்க்கின்றீர்கள் ?

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளை இந்தியா அனுசரிக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும் ஏனென்றால் தேர்தல் என்று வரும் போது இந்தியா அதற்கு ஒரு தடங்கலாக இருக்காது ஏனெனில் ஜனநாயகத்தின் அடிப்படையாக தேர்தலே அமைந்துள்ளது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளில் நியாயம் இருப்பினும் இல்லாவிட்டாலும் இந்தியா எப்படிப்பார்க்கின்றதென்றால் குறித்த ஒருபகுதியில் ஜனநாயகமயமாக்கல் நடைபெறவேண்டுமேயானால் தேர்தல் தேவையானது என்றே பார்க்கின்றது

கேள்வி : இந்தியா மீண்டும் வரலாற்றுத்தவறை மேற்கொள்வதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதுவிடயத்தில் இந்தியாவின் பதில் நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது ? பதில் :

எந்த நாடாக இருந்தாலும் அவை தத்தம் வரலாற்றை தெரிந்துவைத்துக்கொண்டுதான் செயற்பாடுகளை முன்னெடுப்பதுண்டு ஆனால் ஒன்று மட்டும் தற்பேர்து மிகவும் தெளிவாக கூறவேண்டும் இந்தியாவினுடைய இராணுவ உதவிகள் என்று வரும் போது எந்தவகையிலும் சரி இலங்கை இராணுவத்திற்கு எந்த இராணுவ உதவியும் செய்யவில்லை பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை அன்றி
நாசகாரமற்ற ஆயத (ழேn டுநவாயட) உதவிகளையே வழங்கிவருகின்றது ரேடார் கொடுக்கின்றது புலனாய்வுதகவல் பரிமாற்றம் போன்றவற்றையே மேற்கொள்கின்றது இந்தநிலையில் நாம் சிலவிடயங்களை திரிவுபடுத்திச்சொல்லக்கூடாது இராணுவரீதியில் எந்தவகையிலும் உதவிகளை இந்தியாசெய்யவில்லை அதைவைத்துப்பார்க்கபோனால் விடுதலைப்புலிகள் அறிக்கையானது இலங்கை இராணுவத்தளபதி இந்தியாசென்றிருந்ததை வைத்தே உருவாக்கப்பட்டது சில விசயங்களை ரொம்ப மிதமாகவே பார்க்கவேண்டும் என்பதே எனது உணர்வாகும்

கேள்வி: இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கைகளில் மாற்றம் தேவை என்று இந்திய கம்யுனிஸ்ற் கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா அண்மையில் கூறியிருந்தார் இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கைகளில் மாற்றம் செய்யப்படும் சாத்தியமுள்ளதா ?

இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையில் என்ன மாற்றம் வருகின்றதென்று எனக்குதெரியவில்லை ஆனால் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒருபிரச்சனையை வைத்துக்கொண்டு கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன ஆனால் இலங்கை விடயத்தில் இந்தியாவிற்கு ஒரு தர்மசங்கடமான நிலையில் தான் இந்தியா இருக்கின்றது அதைநாம் சிந்தித்துபார்க்கவேண்டும் சும்மா அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என்று கூறிவிட்டு ஒன்றும் நடக்காமல் போவதைவிட மிகவும் அவதானமிக்கதான நிலைப்பாட்டை எடுத்து இந்தியா பதிலளிக்க வேண்டும் என்று தான் இந்தியா இருக்கின்றது ஏனென்றால் இந்தியா எதையும் சிந்திக்காமல் எதேனும் தீர்மானத்தை எடுத்துவிட்டால் இங்கே இந்தியாவிற்கு எதிரான போக்குகள் அதிகரிக்கும் இந்தமாதிரியான நிலைகளை இந்தியா தவிர்த்துவருகின்றது அதுமிகவும் நியாயமான நிலைப்பாடுதானே ஒருகட்டத்தில் இலங்கைமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் அரசியல் தீர்வுவரவேண்டும் அது ஒரு அரசியல் செயற்பாடுமூலம் வரவேண்டும் போரென்பது இதற்கு ஒருதீர்வாக இருக்காது என்றே இந்தியா கருதுகின்றது இதற்கு அப்பாலே நேரடியாக அதைச்செய்ய இதைச்செய்ய வந்து கடைசியாக எல்லாமே குழப்பமாகும் நிலையை இந்தியா விரும்பவில்லை தற்போதைய நிலையில் இந்த விடயம் மிகவும் கடினமானதொன்றாகும் இலங்கையில் எதிர்க்கட்சிகள் உள்ளன இந்தியாவின் கரிசனைகள் நிறைய இருக்கின்றன இந்தியாவந்து எதேனும் பண்ணமுடியுமா என்ற கருத்துக்கள் உள்ளன இவை அனைத்தையுமே நீங்கள் அலசிப்பார்க்கவேண்டும் அதைவிட்டுவிட்டு இந்தியா வரவில்லை அதைச்செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் நாம் எந்தக்கட்டத்தையும் அடையமுடியாமற்போய்விடும்

கேள்வி : தீபேத் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற ஆதங்கங்கள் சில தரப்பில் இருக்கின்றன பர்மிய போராட்டங்களின் போதும் இந்தியாவின் பங்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை என்ற கருத்துக்கள் உள்ளன இதுபோன்றே மேற்சொன்ன நாடுகளை விட நெருங்கிய உறவைக்கொண்டுள்ள இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பிலும் இந்தியா ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை என்றும் இது தொடர்பாக அறிக்கையைத்தானும் விடுவதில்லை என்ற ஆதங்கங்கள் கணிசமான தரப்பினரால் வெளியிடப்பட்டிருக்கின்றன மனித உரிமை என்கிறபோது இந்தியாவின் நிலைப்பாடு எப்படியாக உள்ளது ?


பதில் : இதி;ல் இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம் ஒன்று வெளிப்படையாக அறிக்கைகளை விட்டு அது உலகத்திற்கு தெரிகின்ற மாதிரி பண்ணுவது இன்னொன்று இராஜதந்திர வழிகளுடாக விசயங்களைச்சொல்வதாகும் இது எங்களுக்கு பிடிக்கும் இது நல்லதல்;ல இது கெட்டதில்ல அப்படியென்று இரண்டுவிதமாக எடுத்துக்கொள்ளலாம் இந்தியாவின் அணுகுமுறை என்னவென்றால் அது இரண்டாவதாக சொன்ன அணுகுமுறையாகும் இராஜதந்திர ரீதியாக இந்தியா சில விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றது ஆனால் வெளிப்படையாக உங்களுக்கு எல்லாம் தெரியும்படியாக அறிக்கைகளை விடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்ததென்றால் கடைசியாக என்ன தேவையென்றால் இவற்றின் ஊடாக பயன்ஏதும் இருக்கின்றதா இப்படிச்செய்கின்றதனால என்ன பயன் இருக்கின்றது வெளிப்படையாகவே அறிக்கைகளை விட்டு இறுதியாக இங்கேவந்து இந்தியாவின் வகிபாகத்தையே ஏற்புடையதற்றதாகுமிடத்து அது யாருக்குமே நன்மைதராது அதனால் தான் நிறைய விசயங்களை இராஜதந்திர வழிகளுடாக இந்தியா செய்துவருகின்றது அப்படியிருக்கையில் இந்தியா மனித உரிமைமீறல்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறுவார்களே அது சரியா தவறா என எனக்கு தெரியவில்லை இதனை நாம் பரந்த பார்வையில் பார்க்க வேண்டும் என்றே நான் கருதுகின்றேன் இந்தமாதிரியான சம்பவங்களை இந்தியா அங்கீகரிக்கவில்லை அதற்கு உறுதுணையாக இருக்கவில்லை என்றே நான் கூறுகின்றேன் சில விடயங்களை சொல்கின்ற முறை முக்கியமானது அதை இந்தியாசெய்துகொண்டு இருக்கின்றது அண்டைநாட்டில் ஒரு மனித உரிமைமீறல் நடக்கின்றது என்றால் எந்த நாடுமே ஒரு ஜனநாயக நாடுமே அதை ஏற்றுக்கொள்ளமாட்டாது இந்தியா ஒரு ஜனநாயக நாடுஎன்ற வகையில் இங்கு நடக்கின்றவிடயங்களை அது அங்கீகரிக்கின்றதென நான் கருதவில்லை அதுவும் குறிப்பாக மனித உரிமை மீறல் விடயத்தில் அங்கீகரிக்கவில்லை

வாழ்க்கைத் தடம் இப்படி மாறுமென....


வாழ்க்கைத் தடம் இப்படி மாறுமென நான் கனவில் கூட நினைத்தும் பார்த்ததில்லை ஆனால் திரும்பிப்பார்க்கும் போது நான் கடந்து வந்த பாதை மிகவும் புதிரானது மட்டுமல்ல சுவாரசியமானதாகவிருக்கின்றது .
பாடசாலைக்காலத்தில் எத்தனையெத்தனையோ மாணவர்கள் என்னிலும் மிகுந்த அறிவுபடைத்தவர்களாய் தமிழ் மொழியில் சிறந்துவிளங்கினர் பலரை நான் பார்த்து வியந்திருக்கின்றேன் அவர்களோடு பேசவேண்டும் என்று ஆவல்கொண்டிருக்கின்றேன் அவர்களோடு பழக வேண்டும் என ஏங்கியிருக்கின்றேன்.

ஆனால் கால ஓட்டத்தில் பலர் இருந்த இடம்தெரியாமல் அடையாளத்தை தொலைத்துவிட்டதை கண்டு உண்மையாய் கவலை கொண்டிருக்கின்றேன் மேலும் சிலர் பொருளாதார சுகங்களுக்காக தமது திறமைகளே அடகுவைத்து துறைகளை மாற்றிக்கொண்டதையும் அவதானித்திருக்கின்றேன் .

தமிழ் என்றும் மக்களென்றும் பாடசாலைகளில் பறைதட்டியவர்கள் மக்களுக்கு சேவையாற்ற மிகவும் தேவைமிக்க காலகட்டத்தில் பசுமை வேண்டி வெளிநாடுகளில் புகலிடம் தேடிக்கொண்டதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் ( உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்தோரை இங்கே சுட்டிக்காட்டவில்லை ).

ஒரு காலகட்டத்தில் வெளிநாட்டுக்கு சென்றே ஆகவேண்டும் என வெறியாயிருந்த என் வாழ்வோ எப்படி மாறிப்போனதென நினைக்கும் போது இறைவனின் சித்தம் என்பது இதுதானோ என எண்ணத்தோன்றுகின்றது .

மாபெரும் ஆற்றல் படைத்தவர்களெல்லாம் மாற்றுத்துறைகளை நாடிச்சென்றுவிட்டநிலையில் பாமரனான என்னை இறைவன் தமிழ் மக்கள் தம் வரலாற்றில் மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் காலகட்டத்தில் தனித்துவமான ஊடகத்துறை பணியாற்ற தேர்ந்தெடுத்தமையை எண்ணி இறைவனுக்கு நன்றி நவில்கின்றேன் .
தனித்துவம் என்கின்ற போது நான் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு மேலானவன் என்று அர்த்தம் கொண்டு கூறவில்லை மாறாக மிகவும் நெருக்கடியான இந்தக்காலப்பகுதியில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் ஏககாலத்தில் தொலைக்காட்சி செய்தியாளனாகவும் பத்திரிகை எழுத்தாளராகவும் பணியாற்றுகின்ற பாக்கியத்தையே தனித்துவமான ஊடகத்துறைப்பணி என இங்கே நான் குறிப்பிடுகின்றேன் .
இப்படியாக என் ஊடகத்துறைப்பணி தேடலுடன் தொடர்ந்துகொண்டிருக்கின்றது

தனிப்பட்ட வாழ்வில் எனது தாயின் அன்பும் ஆதரவும் ஊக்கமுமே இந்த அளவிற்கு என்னை மனிதனாக ஆக்கியிருக்கின்றது எனது தாய் ஏனைய மக்கள் தொடர்பில் காண்பிக்கும் பாசமும் பரிவுமே என்னை எமது மக்களுக்காக சேவைசெய்ய ஊந்தியது என்றால் மிகையாகாது எந்தச்சூழ்நிலையிலும் கலங்கிடாத என்தாயவளின் அஞ்சா நெஞ்சம் சந்தேகமில்லாத இறைபக்தி இவை என் வாழ்க்கையை செம்மைப்படுத்தியதில் முக்கிய பங்காற்றத்தவறவில்லை
என் தந்தை இறந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவர் எனக்குள் விதைத்த அறிவு விருட்சமே இன்றும் என்னை வளர்த்துக்கொண்டுள்ளது தந்தை ஓர் அறிவுபெட்டகம் அவர்தம் தமிழும் ஆங்கிலமும் அபரிமிதமானது பிள்ளைகள் வளர்ந்து ஒளிவிசும் காலத்தில் அவர் இல்லாதது பெரும் குறையே !
எனது சகோதரர்களின் பக்கபலம் எனக்கு எப்போதுமே ஊந்துசக்தியாகவே இருந்து ஊக்கப்படுத்திவருகின்றதை மறுப்பதற்கில்லை

தாய்வழி உறவினர்களின் ஆரம்பகால உதவிகளும் தந்தைவழி உறவினர்களின் இக்கால உதவிகளும் தாம் எமது குடும்பம் குலையாமல் இன்றுவரை நின்றுநிலைக்க வழிகோலின அதை எந்தச்சூழ்நிலையிலும் நான் நன்றியோடு நினைவுகூருவேன் .

இறுதியாக இல்லை இல்லை இனியதாக ஒன்றைக்கூறுவதென்றால் அது என் அன்புமனைவியவளின் அன்பும் அரவணைப்பும் ஊக்குவிப்புமே என் வாழ்வில் இன்றுள்ள புத்துணர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் காரணமாகும்

அவள் ஒரு அன்புப்பொக்கிஷமாக என்னை ஆட்கொண்டு நிற்பதால் இந்த உலகையே என் அன்பால் ஆட்கொண்டு விடமுடியும் மக்களுக்காக அளவற்ற சேவைகளை ஊடகத்துறைப்பணியால் ஆற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்குள் நிறைந்துநிற்கின்றது

சிலிர்க்கும் சிங்கப்பூர்






















Wednesday, March 25, 2009

எவ்வித தடைகள் அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் மனித உரிமைமீறல்களுக்கு எதிரான எமது போராட்டம் தொடரும்


மனோ கணேசன்

தமிழர்களை மாத்திரம் குறிவைத்து தமிழர்களை மாத்திரம் தனிமைப்படுத்தி அவமானப்படுத்தி அலட்சியப்படுத்தி தொல்லைப்படுத்தி தொந்தரவுப்படுத்தி நாள் முழுக்க காக்க வைத்து வயோதிபர்கள் பெரியவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் அரச ஊழியர்கள் தனியார் துறை ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையுமே நிற்கவைத்து ஒரு குற்றவாளிகளைப்போல் நடத்தி பதிவு நடவடிக்கைகளைச்செய்துகொண்டிருக்கின்றனர் அதனால் தான் இந்த நடவடிக்கையை தாம் நிராகரிப்பதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார் .

கேசரிக்கு வழங்கிய நேர்காணல் வருவாறு

பேட்டிகண்டவர் ஆ அருண்



கேள்வி: கொழும்பிலே கடந்த ஐந்துவருடகாலப்பகுதியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் வடமாகாணமக்கள் இருவாரங்களுக்கு முன்னர் பொலிஸ் பதிவிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் கிழக்குமாகாணமக்களும் இவ்வாறான நடைமுறைக்கு உள்ளாகநேர்ந்தது. இதன் போது தமிழ் மக்கள் அனுபவித்த அவமானத்தையும் வேதனையுணர்வையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது என மாற்றுக்கொள்கைக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியிருந்தார் ஆனால் நாட்டின் பாதுகாப்பையும் குறிப்பாக அந்தமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசியபாதுகாப்பிற்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
நீங்கள் இந்த நடைமுறையை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில்: இந்த பதிவுநடவடிக்கைகளை மேலக மக்கள் முன்னணி மக்கள் கண்காணிப்புக்குழு கொள்கைரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முதலில் கூறிவைக்கின்றோம். இதனை முற்றுமுழுதாக நாம் நிராகரிக்கின்றோம் இது தேவையற்றது பிரயோசனமற்றது நன்மைபயக்க மாட்டாது அதையடுத்து பாதுகாப்புப்பேச்சாளர் சொன்னதுபோல தேசியபாதுகாப்பு என்ற பெயரிலே செய்வதென்றால் அவர்களுக்கு அதற்கான சட்டம் வழிவகுத்துக்கொடுத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன் இது எப்படியிருந்தாலும் கூட இதனைச்செய்யும் போது தமிழர்களை மாத்திரம் குறிவைத்துச்செய்கின்றார்கள் தமிழர்களை மாத்திரம் தனிமைப்படுத்தி அவமானப்படுத்தி அலட்சியப்படுத்தி தொல்லைப்படுத்தி தொந்தரவுப்படுத்தி நாள் முழுக்க காக்க வைத்து வயோதிபர்கள் பெரியவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் அரச ஊழியர்கள் தனியார் துறை ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையுமே நிற்கவைத்து ஒரு குற்றவாளிகளைப்போல் நடத்தி அந்தப்பதிவு நடவடிக்கைகளை செய்துகொண்டிருக்கின்றனர் அதனால் தான் இந்த நடவடிக்கையை நாம் நிராகரிக்கின்றோம் இதுபிழையானது இன்று பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு இராணுவத்தினராலும் பொலிஸாராலும் அரசாங்கத்தினாலும் கைதுசெய்யப்பட்ட பலர் இன்று பயங்கரவாத விசாரணைப்பிரிவிலும் குற்ற விசாரணைப்பிரிவிலும் தடுப்புமுகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றனர் எல்லோரும் தமிழர்கள் அல்ல அதில் சிங்களவர்களும் இருக்கின்றார்கள் ஏன் இராணுவத்தையும் பொலிஸையும் சேர்ந்த அரச படையினரைச்சார்ந்த அங்கத்தவர்களும் அங்கு இருக்கின்றார்கள் தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் அல்லர் ஆனால் பயங்கரவாதிகள் அனைவருமே தமிழர்கள் என அமைச்சர் கெஹலிய கூறியிருக்கின்றார் அனைத்துதமிழர்களுமே பயங்கரவாதிகள் அல்லர் என கெஹலிய நற்சான்றிதழ் வழங்குகின்றார் அது எமக்குத்தேவையில்லை ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் தமிழர்கள் என அமைச்சர் கெஹலிய சொல்லியிருந்தார் அது பிழையானது பயங்கரவாதிகள் என அரசாங்கம் சொல்லும் அனைவருமே தமிழர்கள் அல்ல கைதாகியிருப்பவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல என்பது எமக்கு நன்றாகவே தெரியும் ஆகவே தமிழர்களை மாத்திரமே தனிமைப்படுத்துவதில் எவ்வித நியாயமும் கிடையாது தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் அல்ல பயங்கரவாதிகள் அனைவருமே தமிழர்கள் என்று சொல்லி தமது நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றார்கள் தமிழர்களை தொல்லைக்கு உட்படுத்துகின்றார்கள் அதுபிழை பதிவுசெய்யவேண்டாம் என்று நாம் சொல்லுகின்றோம் இல்லை செய்வேன் என்று சட்டத்தைக்காட்டி அடம்பிடிப்பார்களேயானால் எல்லோரையும் பதிவுசெய்யுங்கள் எங்கள் மக்கள் படும் துன்பத்தை அனைவரும் படட்டும் அதற்கான நியாயம் இருக்கின்றது ஏனென்றால் பயங்கரவாதிகள் என்று சொல்லுகின்றவர்களில் தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்களும் இருக்கின்றார்கள் ஆகவே வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொழும்பிற்கு வந்து அல்லது மேல்மாகாணத்திற்கு வந்து தற்காலிகமாக தங்கியிருக்கின்ற நபர்கள் எவராக இருந்தாலும் கூட அனைத்து இனத்தவர்களையும் அவர்கள் பதிவுசெய்யவேண்டும் அது உண்மையில் தேவையானது வந்திருக்க கூடிய நபர்கள் பயங்கரவாதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கிருக்கின்றது ஆகவே தான் அவர்களைப்பதிவுசெய்துகொள்ளவேண்டும் என்று சொல்வதாகக் கூறுகின்றனர் சரி பரவாயில்லை செய்யுங்கள் ஆனால் எல்லோரையும் செய்யுங்கள் தமிழர்களை மாத்திரம் தனிமைப்படுத்தாதீர்கள் அவமானப்படுத்தாதீர்கள் தொந்தரவிற்குள்ளாக்காதீர்கள் ஏனென்றால் நன்றாகத்தெரியும் நாட்டின் தேசியப்பாதுகாப்பிற்காக எதையும் செய்யத்தயாராக இருக்கின்றோம் எந்தவித அர்ப்பணிப்பும் செய்யத்தயாராகவிருக்கின்றோம் எந்தவிதத்தியாகத்தையும் செய்யத்தயாராக விருக்கின்றோம் என்று சொல்வார்களேயானால் சொல்கின்றார்கள் பெரும்பான்மையின் அரசியல்வாதிகள் சொல்கின்றார்கள் அப்படியானால் இதையும் அவர்கள் செய்யட்டுமே இன்று அப்படியல்ல தமிழர்கள் மாத்திரம் பொலிஸ் நிலையங்களிலும் ஏனைய நியமிக்கப்பட்ட இடங்களிலும் நாள்முழுக்க நின்று காவல்காத்து அவமானங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகும் போது அதையெல்லாம் பார்த்துக்கொண்டு வேடிக்கைபார்க்கின்றார்களே தவிர எவரும் முன்வருவதில்லை கஷ்டம் அனைத்தும் எங்கள் மக்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது ஆகவேதான் அனைவரையும் பதிவுசெய்யுமாறு சொல்கின்றோம்

கேள்வி: இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கனடா நாட்டின் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சிறுபான்மையினர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் சிறுபான்மையினர் மத்தியில் ஒருவிதமான சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சிறுபான்மையினரைபிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கண்டனம் வெளியிட்டிருந்தன ஆனால் நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும் ஒரேவிதமான உரிமைகளே அரசியல் சாசனத்திற்கமைவாக இருப்பதாகவும் மாறாக எந்தவொரு இனத்தவருமே தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்க கூடாது உதாரணமாக அண்மையில் ஆசிரியர்கள் முன்வைத்த ஐயாயிரம் ருபா சம்பள உயர்வு கூட தேவையற்ற கோரிக்கை இதேபோன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்க யாருக்கும் உரிமையில்லை என அமைச்சர் கெஹலிய இராணுவத்தளபதியின் கருத்துக்கு தெளிவுரை வழங்கியிருந்தார் இது தொடர்பில் உங்கள் கருத்துயாது ?

பதில் : இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கருத்துக்களைப்பற்றி பதில் சொல்வதற்கு முன்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பற்றி ஒன்றைச்சொல்லவேண்டும் இவர் முழந்காலிற்றும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுகின்றார் தமிழ் மக்கள் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இந்தநாட்டிலே சிறுபான்மைத்தேசிய இனத்தவர்கள் தங்களது அரசியல் அபிலாஷைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பதையிட்டு கேள்விகள் எழுப்பப்படும் பொழுது அதை ஏதோ ஆசிரியர்களோ தொழிலாளர்களோ சம்பள உயர்வு கேட்டு முன்வைக்கும் கோரிக்கைக்கு சமானமாகப்பார்ப்பது ஒரு வெட்கக்கேடான விஷயமாக நினைக்கின்றேன் ஒரு கேவலமான விஷயமென்று நினைக்கின்றேன் உண்மையிலேயே எந்த அளவிற்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தேசியக்கோரிக்கைகளை ஊதாசீனப்படுத்துகின்றது அலட்சியப்படுத்துகின்றது எந்த மாதிரி அவற்றைப்பார்க்கின்றது என்பதற்கு அப்பட்டமான அடையாளம் தான் இது என்றுநினைக்கின்றேன் அவர் அதைமாத்திரம் சொல்லவில்லை கடைசியிலே சரத் பொன்சேகாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி முடித்திருக்கின்றார் இது அவர்களுடைய வழமையான பாணியாகும் சமீபத்தில் சமாதான செயலகத்தின் செயலாளாரும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளருமான ரஜீவ விஜேசிங்க ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அறிக்கையைக்கண்டித்து கருத்து தெரிவித்த போது அவர் ரஜீவ விஜேசிங்கவின் தனிப்பட்ட கருத்து என்றார்கள் அதற்கு முன்புகூட ஐநா பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்திருந்தபோது அப்போதைய அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மற்றும் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க கூட பலசந்தர்ப்பங்களில் கடுமையான வார்த்தைகளைப்பயன்படுத்தி தகாத வார்த்தைகளைப்பயன்படுத்தி அவர்களைக்கண்டித்திருந்தார்கள் விமர்சனம் செய்திருந்தார்கள் அப்போதும் கூட அவற்றை தனிப்பட்ட கருத்துக்கள் என்று கூறியே சமாளித்துவிட்டார்கள் அதுமாத்திரமல்லாமல் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது கூட அரசாங்கத்தரப்பிலுள்ளோர் பரஸ்பரம் ஒன்றுக்குமுரணான கருத்துக்களைக்கூறியிருந்தனர் தமிழர்களைச்சமாளிப்பதற்கு ஒரு கருத்தைச்சொல்கின்றனர் மறுபக்கத்தில் வேறுமாதிரியான கருத்தைச்சொல்கின்றனர் விஷயம் முற்றிச்சிக்கலாகிவிட்டால் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறிச்சமாளிக்கின்றனர் இது இவர்களுடைய வழமையான பாணி . ஐக்கியநாடுகள் சபையில் ஜனாதிபதி தமிழிலே சில வார்த்தைகளைப்பேசியிருக்கின்றார் ஜனாதிபதி தமிழில் பேசுவதையிட்டு மகிழ்ச்சிதான் ஆனால் அது எங்களது கோரிக்கையல்ல சர்வதேச சமூகத்தை முட்டாள்களாக்குவதற்கு அவர்கள் மத்தியிலே தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கினேன் என்று காண்பிப்பதற்காக தமிழிலே பேசியிருக்கலாம் ஆனால் அது வேறு விஷயம் ஆனால் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்கிவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் இலங்கை அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றோம் அதைச்செய்யாமல் ஐநா சபையில் தமிழில் உரையாற்றுவதில் எந்தவித பிரயோசனமும் கிடையாது அதுமாத்திரமன்றி தமிழும் சிங்களத்துடன் அரசகரும மொழியாக இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தும் கூட அது நடைமுறையாக்கப்படுவதில்லை அப்படி மொழிரீதியான குறைபாடுகள் கூட இருக்கின்ற நிலையில் மொழியைப்பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை அவர் அங்கு பேசிய அதே சந்தர்ப்பத்தில் தான் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குட்டைப்போட்டு உடைத்திருக்கின்றார் உண்மையிலேயே சரத் பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் நான் நன்றி கூறி விரும்புகின்றேன் ஏனெனில் அவர் உண்மையைச்சொல்லியிருக்கின்றார் அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கின்றார் இவர்கள் சொல்லும் அரசியல் தீர்வு என்பது எது என்பதைச்சுட்டிக்காட்டியிருக்கின்றார் இந்த நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் உரிமையானது தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏன் சிங்களக்கிறிஸ்தவர்கள் கூட அந்நியர்கள் இரண்டாம் மூன்றாந்தரக்குடிமக்கள் தான் தமது நோக்கம் அதுவாகத்தான் இருக்கின்றதென்பதை அவர் காட்டியிருக்கின்றார் எதிர்காலத்தில் தரப்போவதாகச்சொல்லக்கூடிய அந்த அரசியல் தீர்வு என்பது என்பது தீர்வாக அன்றி திணிப்பாகவே இருக்கும் அவரது கருத்துக்களுடாக வெளிப்படையாகவே காட்டியிருக்கின்றார் இன்று பாருங்கள் திஸ்ஸ விதாரணவென்று ஒரு அப்பாவி அமைச்சர் பழைய இடதுசாரி அமைச்சர் இலங்கையின் இனப்பிரச்ச்னைக்கு தீர்வுயோசனையை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டஅனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமைதாங்கும் திஸ்ஸ விதாரணவிடம் இராணுவத்தளபதியின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்கவிரும்புகின்றேன் அரசாங்கத்தின் நோக்கம் இதுவாக இருக்குமானால் உங்கள் அரசியல் தீர்வு என்ன என்று கேட்க விரும்புகின்றேன் அமைச்சர் கெஹலிய இந்தக்கருத்துதொடர்பில் சமாளிப்பை வெளியிட்டிருந்தபோதும் இராணுவத்தளபதியின் கருத்துதொடர்பில் அதனைக்கண்டித்து அரசாங்கம் அதிகாரப+ர்வமாக கருத்தெதனையும் வெளியிடவில்லை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றது அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் மிகப்பெரிய பங்காளியாக கூறப்படும் இனவாதக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயகட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் இராணுவத்தளபதியின் கருத்தை ஆதரித்து அதுவே சரியானது உண்மையானது என்று கருத்துவவெளியிட்டுள்ளார் அது பிழையானது வடகிழக்கிலே வாழும் தமிழர்கள் தங்கள் சொந்தத்தாயகத்தைக்கொண்டிருப்பவர்கள் சொந்த இராஜ்ஜியங்களைக்கொண்டிருந்தவர்கள் சிங்கவர்களுக்கு சமனான முறையில் ப+ர்வீகமாக இந்த நாட்டிலே ஆண்டாண்டு காலமாக வாழ்ந்தவர்கள் அவர்களைப்பார்த்த சிறுபான்மையினர் என்று சொல்லி தேசிய உரிமை இல்லை என்று சொல்லுவார்களேயானால் அது பிழையானது ஒன்று வரலாறு தெரியாமல் சரத் பொன்சேகா பேசுகின்றார் அன்றேல் முட்டாள்களாக எங்களை மாற்ற நினைக்கின்றார் இரண்டும் சரிவராது என்று நான் நினைக்கின்றேன் .

கேள்வி: தற்போது வன்னியில் போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் உலகின் கவனம் வன்னியை நோக்கி குவிந்திருக்கின்றது அங்குள்ள மக்கள் சொல்லோணா துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் உணவு மருத்துப்பொருட்கள் பற்றாக்குறையாக மோசமான இன்னல்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச தரப்பில் பலர் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் உலகநாடுகளை விடவும் தமக்கே தமது மக்களின் மீது அதிக அக்கறை இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது தாம் அவர்களைப்பராமரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது இது விடயத்தில் உங்கள் உணர்வலைகள் யாதாகவிருக்கின்றது ?

பதில் :முதலில் ஐக்கியநாடுகள் சபை உட்பட அனைத்து தொண்டர்நிறுவனங்களையும் வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறச்சொல்லிவிட்டு பிறகு மீண்டும் இறங்கி வந்து ஐநா சபையின் ஆதரவுடன் துணையுடன் உணவுப்பொருட்களை மீண்டும் அங்கு அனுப்பியதில் இருந்து அரசாங்கம் ஆரம்பத்தில் செய்த அந்த செயற்பாடு கருத்து நிலைப்ப்hடு பிழையானது என்பதை அரசாங்கமே தனது செயல்கள் மூலமாக நிருபித்திருக்கின்றது அதுதான் உண்மை மற்றும் படி அங்கேயுள்ள மக்கள் அரசகட்டுப்பாட்டுபகுதிக்கு வரும்படி அரசாங்கம் அழைக்கின்றதென்றால் வரவிரும்புகின்றவர்கள் வரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை விடுதலைப்புலிகள் அவர்களை பலாத்காரமாக நிறுத்திவைத்திருப்பார்களேயானால் அது பிழையானது அவர்கள் விடவேண்டும் ஆனால் இங்கே வந்து வாழ்வதற்கான சூழல் இல்லை என்று தான் தமிழ்மக்கள் நினைக்கின்றார்கள் இங்கே கொழும்பிலேபாருங்கள் தமிழ் மக்களைக்கைது செய்கின்றார்கள் பதிவுசெய்யச்சொல்கின்றார்கள் சொல்லோணாத்துன்பங்களுக்கு தமிழ்மக்கள் உள்ளாகின்றார்கள் வன்னியைப்பிறகுபார்க்கலாம் வன்னிக்கு முதலில் இங்குபாருங்கள் அதேபோன்று இந்தியாவிற்கு அகதிகளாகச்சென்ற தமிழர்களில் சிலர் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள் அவர்களுக்கு குடியுரிமைவழங்கப்படவேண்டும் என்று கூட ஒரு பிரேரணை பாரர்ளுமன்றத்தில் கடந்தவாரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது அது சம்பந்தமான ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கூட நான் பேசியிருந்தேன் யு என் எச் சி ஆர் என்ற ஐநா நிறுவனம் தான் அவர்களுக்கு உதவிசெய்கின்றது அந்தநிறுவனம் கூட இலங்கைக்கு அகதிகள் திPரும்புவதை ஊக்குவிக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கின்றனர் அவ்வாறு திரும்பிவரும் மக்களை சொந்தக்கிராமங்களில் சென்று குடியமர்த்துவதில்லை என்பதே இதற்கு காரணமாகும் அவர்களைத்தடைமுகாம்களில் வைத்திருக்கின்றனர் வன்னிமக்களின் வரவை எதிர்பார்த்து வவுனியாவில் அமைக்கப்படும் முகாம்கள் கூட வெறுமனே தடைமுகாம்களாக இருக்கின்றன மக்கள் நகரமுடியாது அங்கிங்கு செல்ல முடியாது அதைமீறி அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து விட்டார்களேயானால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது காணாமல் போவார்கள் ஒருநிம்மதியான வாழ்க்கை இங்கு கிடையாது அந்தக்காரணத்தினாலேதான் வன்னியில் இருந்து மக்கள் வரத்தயங்குகின்றார்கள் வரமுடியாத நிலைமை இருக்கின்றது அங்கேயுள்ள மக்களுக்கு உணவு வழங்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது ஒரேநாடுதானே அங்கேயுள்ள மக்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்குகின்றோம் அவர்களுக்கும் நாங்கள் தான் உதவிசெய்கின்றோம் மருந்துகளை அனுப்புகின்றோம் என்று சொல்லி அரசாங்கம் பெருமையடித்துக்கொள்ள முடியாது ஒரே நாடு என்று சொல்லும் பொழுது நாட்டில் அரசாங்கமாக இருக்கும் பொழுது தமிழர்களிடம் உட்பட சகலரிடமும் வரி அறவிட்டுத்தான் அரசாங்கம் நடந்துகொண்டிருக்கின்றது வரி வாங்கும் போது நிச்சயமாக இந்த அரசாங்கத்திற்கு அந்த மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு இருக்கின்றது முடியாவிட்டால் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி அதன் மூலமாக மக்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் வழங்கவேண்டும் ஏனென்றால் அவர்கள் கேட்கும் உணவும் மருந்தும் அடிப்படைத்தேவைகளாக இருக்கின்றன அத்தியாவசியத்தேவைகளாக இருக்கின்றன மாறாக மேலதீகமான உணவு கேட்கவில்லை மேலதீக சலுகைகளைக்கேட்கவில்லை வாழ்வதற்கான உணவைத்தான் கேட்கின்றார்கள் அதனைவழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது


கேள்வி : நீங்கள் அண்மையில் இந்திய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தீர்கள் இந்தப்பயணம் எப்படி அமைந்திருந்தது?

பதில் :இந்தியாவிற்கு நான் சென்று வந்த பயணம் இந்த முறை மிகவும் முற்போக்கானதாக சிறந்ததாக அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன் இந்தியாவிலே ஒருவிடயத்தைப்புரிந்துகொள்ள வேண்டும் விடுதலைப்புலிகளைப்பொறுத்தவரையில் அங்கே சட்டம் ஒழுங்குப்பிரச்சனையிருக்கின்றது ராஜீவ் காந்தி கொலையை அடுத்து அங்கொரு பிரச்சனையிருக்கின்றது அந்தப்பிரச்சனையை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும் ஆனால் அந்தப்பிரச்சனையை மாத்திரம் ப+தாகரப்படுத்தி அந்தப்பிரச்சனையை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கைத்தமிழர்களைப்பார்க்கும் அந்த வழமை பாரம் பரியம் அங்கே தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது விடுதலைப்புலிகள் ஆதரவுக்குழு எதிர்ப்புக்குழு என்று இரு குழுக்களுக்கிடையில் தர்க்கம் நடந்துகொண்டிருக்கின்றது கருத்துமோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன அந்தச்சத்தத்திலே கூச்சலிலே இலங்கையின் பலியாகும் அப்பாவி மக்களின் அவலக்குரல் அங்கு எட்டாமல் இருந்தது ஆனால் அந்த நிலைமை மாறி இன்று மக்களின் பிரச்சனை துன்பப்படும் மக்களின் பிரச்சனை கொல்லப்படும் மக்களின் பிரச்சனை கஷ்டப்படும் மக்களின் பிரச்சனை அந்தக்கரையை எட்டியிருக்கின்றது மக்களை விழித்தெழ வைத்திருக்கின்றது அரசியல் தலைவர்களை விழித்தெழ வைத்திருக்கின்றது பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த தலைவர்களும் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பெரும் பாலும் மறந்து ஒரேயணியிலே ஒரே மேடையிலே தோன்றத்தொடங்கியிருக்கின்றார்கள் படிப்படியாக தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள் தமிழக அரசும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமையிலே இதுசம்பந்தமாக புதிய நடவடிக்கை எடுப்பதற்கு தயாராவதை நாங்கள் பார்க்க முடிகின்றது அதேபோன்று மத்திய அரசாங்கமும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை அவதானித்துக்கொண்டிருக்கின்றது ஆகவே இன்று தமிழகம் எழுச்சி பெற்றிருக்கின்றது உணர்வலைகள் அங்கே பாரிய அளவில் எழுந்துகொண்டிருக்கின்றன பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த இலங்கைத்தமிழர் தொடர்பிலே பாரிய கருணை இரக்கம் பரிதாபம் உணர்வலைகள் எழுந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது

கேள்வி : நீங்கள் கடத்தல் காணமல் போதல் நீதிக்கு புறம்பான படுகொலைகளுக்கு எதிராக மக்கள் கண்காணிப்புக்குழு மூலமாக
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றீர்கள் தற்போது மனித உரிமைகள் நிலைமை இலங்கையில் எவ்வாறு காணப்படுகின்றது ?


பதில்: மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லமுடியாது ஆனால் எமது செயற்பாடுகள் இரண்டு நோக்கத்தைக்கொண்டிருக்கின்றன ஏற்கனவே காணமல் போனவர்களைக்கண்டுபிடிப்பது ஒருவிடயம் எதிர்காலத்தில் நடக்ககூடிய சம்பவங்களைத்தடுத்து நிறுத்துவது மற்றையநோக்கமாகும் அதாவது ஒன்று நோய்நிவாரணம் மற்றையது நோய்த்தடுப்பு அந்த அடிப்படையில் எமதுசெயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம் மக்கள் கண்காணிப்புக்குழுவின் போராட்டம் கொழும்பில் இருந்து பாரிய அளவில் நடத்தப்பட்டிருக்காவிட்டால் இன்று மக்கள் சந்தித்திருக்ககூடிய அவலத்தை விட அதிகமான அவலத்தை சந்தித்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாகவிருக்கும் தற்போதும் மக்கள் நிம்மதியுடன் துன்பதுயரமின்றி இருக்கின்றனர் என்பது இதன் அர்த்தமல்ல தொடர்ந்து காணமல்போதல்கள் படுகொலைகள் கடத்தல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன அவற்றை காலத்திற்கு காலம் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் ஐநா சபை பிரதிநிதிகள் போன்ற உரிய நபர்களின் அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டவந்துகொண்டுதான் இருக்கின்றோம் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது பல்வேறு துன்பங்கள் துயரங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாம் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் கொழும்பிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்


கேள்வி : நீங்கள் அரசாங்கத்திற்கு அபகீர்;த்தியை உண்டுபண்ணும் நோக்குடன் விடுதலைப்புலிகள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்த மனித உரிமைவிடயத்;;;தினை கையிலெடுத்து செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படுவது தொடர்பாக நீங்கள் கூறுவதென்ன?



பதில் :மனித உரிமைமீறல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அதற்காக குரல்கொடுப்போரை புலிமுத்திரதை குத்தி மௌனிகளாக்குகின்ற செயற்பாட்டைத்தான் காலகாலமாக இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது ஆனால் 1989ம் ஆண்டுகாலப்பகுதியில் தென்னிலங்கையில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்குவதற்கு அப்போதைய அரசாங்கம் மேற்கொண்ட மோசமான அடக்குமுறை நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது ஜெனிவாவிற்கெல்லாம் சென்று குரல் கொடுத்தார் அப்போது தாக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருந்தமையால் அவரது மனித உரிமை பிரசாரங்களை மேற்கொள்ளமுடிந்தது ஆனால் இன்று பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலாக தமிழ் மக்களாக இருப்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் போது புலிகளின் ஆதரவாளராக அடையாளம் காண்பித்து உண்மையை மூடிமறைக்கப்பார்க்கின்றனர் ஆனால் எவ்வித அச்சுறுத்தல் தடைகள் வந்தபோதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எனது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் .

பிடெல் காஸ்ட்ரோ


கலக்கல் வீரன்


கார் பந்தய சக்கரவர்த்தி


அகாசி ஒரு சகாப்தம்




மெய்யாகவே புன்னகையின் தேசம் தாய்லாந்து











பருவமழை இடம்பெயர்ந்தமக்களுக்கான எமது பணிகளை மேலும் சிக்கலாக்கிவிட்டுள்ளது

-செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் பேச்சாளர் அலெக்ஸாண்ட்ரா மெடியேவிக்
கேள்வி :ஒமந்தைச்சோதனைச்சாவடியை ஒட்டுசுட்டானுக்கு நகர்த்துமாறு பாதுகாப்புச்செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?

பதில் :இதனை என்னால் உறுதிப்படுதவோ அன்றேல் நிராகரிக்கவோ முடியாது ஏனெனில் அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளுடனான எமது இரகசிய கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்

கேள்வி :வன்னியில் இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்களுக்காக தமிழ் நாட்டில் சேகரிக்கப்பட்ட செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் மூலமாக மக்களிடம் கையளிக்கப்படும் என தமிழ் நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது எனினும் இலங்கை அரசாங்கமே இதனை நேரில் கையளிக்கும் என ஜனாதிபதி புதுடில்லியில் வைத்து தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன இதன் உண்மையான நிலையாது ?

பதில் :வன்னியில் இடம்பெயர்ந்துள்ளமக்களுக்காகவும் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்காகவும் நிவாரணப்பபொருட்களை விநியோகிப்பதற்காக இந்திய அதிகாரிகள் செஞ்சிலுவை சர்வதேச குழுவை அண்மையில் அணுகியிருந்தனர் இலங்கையை வந்தடையும் இந்திய நிவாரணப்பொருட்கள் வரும் நாட்களில் இலங்கையிலுள்ள செஞ்சிலுவை சர்வதேசக்குழு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படும் என நாம் நினைக்கின்றோம் இந்தப்பொருட்களின் பின்னர் வன்னியில் விநியோகிக்கப்படும் நிவாரணப்பொருட்கள் தமிழ்நாட்டில் பொதியிடப்படுவதற்கு முன்னதாக செஞ்சிலுவை சர்வதேக்குழுவின் பிரதிநிதிகள் அதனைப்பார்வையிட்டுள்ளனர் அந்தப்பொருட்கள் நல்லதரமானவையென்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருப்பதையும் நாம் உறுதிசெய்துள்ளோம் மிக முக்கியமாக அந்தப்பொருட்கள் வன்னியிலுள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்புடையதாக இருப்பதை நாம் உறுதிசெய்துள்ளோம் அந்தவகையில் எமது பணியாளர்கள் தேவையுடைய பொதுமக்களுக்கு நேரடியாக இந்த பொருட்களை கையளிப்பார்கள் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கும் வன்னியிலுள்ள் குடியிருப்பாளர்களுக்கும் இந்தநிவாரணப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும் .

கேள்வி :வன்னியிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியுள்ள ஒரே அமைப்பாக செஞ்சிலுவை சர்வதேசக்குழு காணப்படுகின்றது வன்னியில் தற்போதைய நிலையில் நீங்கள் ஆற்றிவருகின்ற பங்குபணிபற்றிக்குறிப்பிடுங்கள் ?

பதில் :செஞ்சிலுவைச்சர்வதேச குழுவே தற்போது வன்னியில் நிரந்தரமாக நிலைகொண்டுள்ள ஒரேயொரு சர்வதேச மனிதாபிமான நிறுவனமாகும் வன்னியில் நாம் கடந்தபல ஆண்டுகாலமாக பணியாற்றிவருகின்றோம் தற்போது எமது நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பிலிருந்து முன்னெடுத்துவருகின்றோம் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுடன் நெருக்கமாக இருந்து மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு துணைபுரிவது எமது நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகவுள்ளது மக்களின் அடிப்படைத்தேவைகள் ஈடுசெய்வதற்கு உதவிசெய்வதுடன் நெருக்கடியான நிலையின் போது மக்களுக்கு போசாக்கு பொருட்கள் மற்றும் வீட்டுப்பாவனைப்பொருட்கள் மற்றும் நுளம்புவலைகள் போன்றவற்றை விநியோகித்து அவர்களின் இடம்பெயர்வின் கஷ்டமான காலப்பகுதியில் உதவிசெய்துவருகின்றோம் அத்தோடு குடியிருப்புக்களை அமைத்துக்கொடுத்தல் நீர் கழிப்படவசதிகள் என்பன தொடர்பாகவும் நாம் உதவிபுரிந்துவருகின்றோம் இலங்கையின் ஏனைய பாகங்களில் செயற்படுவதைப்போன்றே நாம் தொடர்ந்தும் பாதுகாப்புநல விடயங்களிலும் பணியாற்றிவருறோம் ஏனெனில் பாதுகாப்பு விடயமும் ஆயுதமோதல்களில் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளை வழங்குவதும் செஞ்சிலுவைச்சர்வதேசக்குழுவின் ஆணையில் அடங்கியுள்ளது



கேள்வி : வன்னியில் பருவமழை ஆரம்பித்துவிட்டதாக சுட்டிக்காட்டப்படும் நிலையில் அங்குள்ள மக்கள் எவ்வாறான இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் ?

பதில் :வன்னியில் பருவமழை காரணமாக குடியிருப்புக்களுக்கான தேவை பெருமளமாக அதிகரித்திருப்பதை நாம் கண்ணுற்றுள்ளோம் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 750ற்கும் அதிகமான அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான தற்காலிக குடியிருப்புக்கான பொருட்களை நாம் வழங்கியுள்ளோம் அதற்கு மேலதீகமாக ஏறத்தாழ 18000 தாவார விரிப்புக்கள் இவற்றை பல்வேறுவகைகளில் பாவனைக்குட்படுத்த முடியும்

கேள்வி: தாவார விரிப்புகளை வன்னிக்கு எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வந்தன அப்படி தடையுள்ளதா ?

பதில் :இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான எமது உதவிநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதுமான கையிருப்புக்களுள்ளன தற்போது வன்னியில் உள்ளன

கேள்வி : வன்னியில் சுகாதார சேவை எவ்வாறு காணப்படுகின்றது ? செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் இந்தவிடயத்தில் எத்தகைய பங்களிப்பை ஆற்றுகின்றது ?

பதில் :வன்னியில் தற்போது மக்கள் மட்டும் இடம்பெயர்ந்திருக்கவில்லை மாறாக மக்களுடன் பல சுகாதாரக்கட்டமைப்புக்களுமே இடம்பெயர்க்கப்பட்டுள்ளன கடினமான சூழ்நிலையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அங்குள்ளவர்கள் பணியாற்றுதற்கு ஏற்புடைய ஆற்றலைக்கொண்டுள்ளனர் வன்னியில் இயங்கும் சுகாதாரக்கட்டமைப்புடன் இணைந்து செஞ்சிலுவை சர்வதேசக்குழுவானது தற்போது அங்குள்ள நிலைமைகளை அவதானித்துவருகின்றது ஒக்டோபர் மாதத்தில் 15 மலேரியா நோயர்கள்கள் பதிவுசெய்யப்பட்டதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அந்தவகையில் பருவமழையின் வருகையுடன் நுளம்புடன் தொடர்புடைய நோய்களின் பரவுகை தொடர்பாக நாம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றோம் அதுமட்டுமன்றி சுகாதாரப்பிரிவினருடன் நாம் தினந்தோறும் தகவல்களைப்பரிமாறிக்கொண்டிருக்கின்றோம் அவர்களுக்கு உதவுவதற்கு நாம் அர்ப்பணிப்புக்கொண்டுள்ளோம் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக நாம் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்

கேள்வி : இவ்வருடத்தில் ஒமந்தைச்சோதனைச்சாவடியை பயன்படுத்திய மக்கள் தொடர்பான தரவுகள் ஏதேனும் உள்ளதா?

பதில் : இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 270 000 அதிகமான பொதுமக்கள் இருபக்கங்களிலிருந்துமாக ஒமந்தை கடவையை பயன்படுத்தியுள்ளனர் பொதுமக்கள் பணியின் நிமித்தமாகவோ அன்றேல் மருத்துவ தேவைகளின்நிமித்தமாகவோ அன்றேல் குடும்ப அங்கத்தவர்களைக்காண்பதற்காகவோ ஒமந்தைக்கடவையை பயன்படுத்தியுள்ளனர் ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒமந்தைக்கடவையை பயன்படுத்தியுள்ளனர் .இதில் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு80ற்கு மேற்பட்ட அம்புலன்ஸ்களில் வந்த 530ற்குமேற்பட்ட நோயாளர்களும் அடங்குவர்

கேள்வி : ஒமந்தைச்சோதனைச்சாவடி கடந்த வாரத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் திறக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளதே எதற்காக இப்படி அறிவிப்புக்கள் வந்தன ?

பதில் :ஆயுதமோதல்காரணமாக நிலவுகின்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையைக்கருத்தில்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது நவம்பர் 14ம்திகதி எமது அலுவலகர்கள் ஒமந்தை கடவையில் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒமந்தை கடவையைப்பயன்படுத்துவதானது பொதுமக்களுக்கும் எமது அலுவலகர்ககளும் பாதுகாப்பானது என்ற உத்தரவாதங்களை அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து பெற்றுக்கொண்ட நிலையிலேயே இது சாத்தியமாகியுள்ளது ஒமந்தை கடவையை திறக்கவோ அன்றேல் மூடுவதற்கோ உரித்தான ஆணையை செஞ்சிலுவைச்சர்வதேசக் குழு கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக்கொள்வது பிரதானமானது மாறாக இருதரப்பினரும் இணக்கம் கண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே ஒமந்தைக்கடவைதிறக்கப்படுகின்றது தற்போதைய நிலையில் தற்போதைய இணக்கப்பாட்டைப்பொறுத்தவரையில் இருதரப்பினருக்குமிடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஒமந்தைச்கடவை 4மணித்தியாலங்கள் திறக்கப்படும்



கேள்வி : இந்தக்கஷ்டமான காலகட்டத்தில் செஞ்சிலுவைச்சர்வதேசக்குழு அதன் பணிகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் யாது ?


பதில் : எமது பணியைப்பொறுத்தவரை பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன மக்களுக்கு உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கையை பருவமழையானது மேலும் சிக்கலாக்கிவிட்டுள்ளது சிலவீதிகள் இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலைகாணப்படுகின்றமையால் உதவிப்பொருட்களை கொண்டுவருவது கடினமாகியுள்ளது மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் ஒட்டுமொத்த பாதுகாப்பற்ற சூழ்நிலையும் அங்குள்ள பொதுமக்களுக்கும் எமது பணியாளர்களுக்கும் பெருங்கரிசனையை ஏற்படுத்திவிட்டுள்ளது இருந்தபோதிலும் மிகவும் அவசியமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்ற எம்மால் முடிந்துள்ளது