Thursday, November 9, 2017

கடந்து வந்த பாதைக்கு இலங்கை மீண்டும் திரும்பிவிடக்கூடாது -தென் ஆபிரிக்கத் தூதுவர் ரொபினா பி.மார்க்ஸ்

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் காணப்படாவிடின்  மக்கள் பொறுமையிழக்கும் அபாயநிலை காணப்படுவதாக  இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தென் ஆபிாிக்கத்துாதுவர் ரொபினா பி. மாா்க்ஸ்  எச்சாித்துள்ளாா்.

கடும்போக்காளா்கள் சமூகத்தில் உள்ள நிலையில் இலங்கை கடந்துவந்த பாதைக்கு மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றாா்.



சுடர்ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு:




ஜெனிவாவில் அறிக்கையொன்றை விடுத்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிவதற்காக தென் ஆபிாிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையைப் பின்பற்றப் போவதாக தொிவித்திருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவா்கள் காண்பித்த அா்ப்பணிப்பு மங்கிச் செல்வதாகக் காணப்படுகின்றது. இலங்கையில் இருந்த பல துாதுக்குழுக்கள் தென் ஆபிாிக்காவிற்கு சென்றிருந்தன. ஆனாலும் காத்திரமானதாக எதுவும் சாதிக்கப்பட்டதாக தொியவில்லை. அவா்கள் திரும்பவந்ததும் தாம் கற்றுக்கொண்ட விடயங்கள் என்னவென்பது தொடா்பாகவும்  மக்களுக்கு எதுவும் தொிவிக்கவில்லை. இதனை எப்படிப் பாா்க்கின்றீர்கள்? ஏதேனும் உண்மையான முன்னேற்றம் உள்ளதா? இத்தனை அனுபவங்களை பெற்றுக்கொண்டபின்னா் அவா்கள் நடந்துகொண்ட விதம் தொடா்பாக நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?

( நீங்கள் ஒரு சூழ்நிலையின் நடுப்பகுதியில் இருக்கின்றபோது அதிலுள்ள நகர்வுகளைக் நீங்கள் காண்பது மிகவும் கடினமானதென்பதை நீங்கள் கவனத்தி்ற்கொள்ள வேண்டும். எமக்குாித்தான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நடைமுறையானது 34 வருட கால இன ஒதுக்கல் அடக்குமுறை காலத்தில் என்ன நடைபெற்றது என்ற கதைகளை சொல்லுவதற்கு எமது மக்களுக்கு துணைசெய்கின்ற ஓர் முயற்சியாகும். அந்தவகையில் காலப்பகுதியை வைத்து பாா்க்கையில் எமது நடைமுறை இலங்கையில் இருந்து சற்று வித்தியாசமானதாகும். இரண்டாவதாக நாம் எவ்வாறாக இலங்கையில் இருந்து வேறுபடுகின்றோம் எனில் நாம் பேச்சுவார்த்தை மூலமான சமரச தீர்வைக் கண்டோம். மாறாக உங்கள் விடயத்திலோ ஒருதரப்பினா் வெற்றிபெற்றனா். ஒரு தரப்பினா் யுத்தத்தில் வெற்றிபெற்றனா். எமக்கு அவ்வாறான நிலை காணப்படவில்லை. அந்தவகையில் நீங்கள் முகங்கொடுக்கவேண்டிய பிரச்சனைகள் அன்றேல் சவால்களானது நாங்கள் முகங்கொடுத்த பிரச்சனைகளில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக காணப்படுகின்றன. நாங்கள் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள்ளாக சிலவருடங்களிலேயே ஒரு பேச்சுவாா்த்தை மூலமான சமரசத் தீர்வை அடைந்த அதேவேளை நீங்களோ ஆயுதங்கள் மௌனிக்கச்செய்யப்பட்டு எட்டு வருடங்களைக் கடந்துள்ளீர்கள்.  தாம் ஒரு உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைக் கட்டமைப்பைக் கண்டறிவதில் அா்ப்பணிப்புக்கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளமை மிகவும் முக்கியமானதென நான் கருதுகின்றேன். அந்த உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையானது சா்வதேச நியமங்கள் தராதரங்கள்  சர்வதேச மனித உாிமை சட்டதிட்டங்கள் போன்றவற்றிற்கு அமைய வேண்டும் என்பதில் நாம் மிகவும் ஆா்வமாகவுள்ளோம். அத்தோடு இலங்கையில் இருந்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் போது ஐக்கிய நாடுகளின் உறுப்புநாடுகள் வழங்கியு்ள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுவதாகவும் அது அமைந்திருக்க வேண்டும்.  பொறுமையிழப்பது மனித சுபாவம் என நான் நினைக்கின்றேன். அதேவேளை அரசாங்கம் இதுவரையில் போதுமான விடயங்களைச் செய்யவில்லை எனச் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் கடினமானதாகும். போதுமான விடயங்கள் இன்னமும் செய்யப்படவில்லை என மக்கள் எப்போதுமே உணர்வில் எண்ணுவாா்கள். ஆனால் தற்போதுள்ள முக்கியமான விடயம் யாதெனில் தற்போது உங்களிடம் ஒரு அரசியல் உறுதிப்பாடு காணப்படுகின்றது. கால வரையறை தீர்மானிக்கப்பட்டு முக்கியமான மைல்கல்களை நிலைநிறுத்தி அந்த அரசியல் உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடிய விடயமாக மாற்றியமைப்பதை உறுதிப்படுத்துவது அடுத்த கட்டமாகும். இல்லாவிடின் அரசாங்கம் உண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக என்பதை அளவிடுவதற்கு அதன் முன்னேற்றத்தை கணிப்பிடுவது மிகவும் கடினமாகும். எம்முடைய பாா்வையில் சில முன்னேற்றகரமான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த தேசிய ஒற்றுமை அரசாங்கமானது இலங்கைக்கு வாய்ப்பிற்கான வழியொன்றைத் திறந்துவிட்டுள்ளது என நாம் எண்ணுகின்றோம். அதேநேரத்தில் மக்கள் பொறுமையிழந்துவருகின்றார்கள் என்பது தொடா்பாகவும் நாம் அறிந்துள்ளோம். முன்னேற்றம் காணப்படாவிடின் அந்த முன்னேற்றம் அறியத்தரப்படாவிடின் அந்த பொறுமையீன்மையானது அதிகரிக்கும் என்பதுடன் வாய்ப்புகளுக்கான சந்தரப்பமானது மென்மேலும் குறைவடைந்து செல்லும். அனேகமான சமூகங்களில் எப்போதுமே கடும்போக்காளா்கள் இருப்பாா்கள். அந்தவகையில் அவர்களின் பொறுமையீனமானது வேறெதும் விடயமாக மாற்றம் பெற்று  கடந்தகாலத்திற்கு இட்டுச்சென்றுவிடாது பாா்த்துக்கொள்ளவேண்டி எச்சாிக்கையுடன் செயற்படவேண்டும். 


நான் உங்களுக்கு முன்னர் தூதுவராக இருந்தவரையும் நேர்காணல் செய்துள்ளேன். அவர் நல்லிணக்க முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் விடயத்தில் தென் ஆபிரிக்காவின் பாடங்களைப் பகிர்ந்துகொள்வதில் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். நீங்கள் அவருடைய வழித்தடத்தில் பயணிக்கின்றீர்களா? அன்றேல் மேசைக்கு புதிதாக ஏதேனையும் கொண்டுவர விரும்புகின்றீர்களா?

ஆம் என்று நான் நினைக்கின்றேன். இந்த நேர்காணலுக்கு நன்றி. நான் எமது தரப்பு கருத்துக்களையும்; திட்டங்களையும் குறிப்பாக தமிழ் சமூகத்துடனும் தொடர்பான திட்டங்களையும் பகிர்ந்துகொள்ளக்கிடைக்கும் வாய்ப்புக்களை எப்போதுமே பாராட்டுகின்றவள். ஏனெனில் பரந்தளவிலான மக்களிடம் எமது கருத்துக்களை கொண்டுசேர்க்க நாம் முயற்சிக்கின்றோம். நாம் அடிப்படை விடயங்களை முயற்சிக்க வேண்டும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். நாம் இலங்கைக்குள்ளும் வெளியேகும் உள்ள தரப்பினருடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அப்போது நாம் முயற்சித்துக்கொண்டிருக்கும் சமாதான முன்னெடுப்பில் அவர்களனைவரும் பங்களிக்க முடியும். எனக்கு முன்னர் தூதுவராக இருந்தவரை விடவும் முன்னோக்கியதாக இந்தக் பயணம் அமைந்துள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு எமது ஜனாதிபதி சூமாவிற்கு இலங்கை அரசாங்கத்தரப்பிடமிருந்து ஆணையொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அந்தவகையில் உங்களுடைய முயற்சிகளுக்கு உதவி ஒத்தாசை புரிந்திடவும் விசேடமாக தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிடவும் எமது தற்போதைய துணை ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை 2013ல் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமித்திருந்தோம்.  அது முதற்கொண்டு வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதில் நாம் பங்களிப்பை வழங்கிவருகின்றோம். உங்களுடைய சில முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்கு நாம் பல வழிகளைக் கண்டுபிடித்துள்ளோம். உங்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்களில் கள அனுபவங்களை கற்றுக்கொள்வதற்கான விஜயங்களும் ஒன்றாகும். அரசாங்கத்தைச் சேர்ந்த பல தூதுக்குழுக்கள் தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமைச்சர்கள் பல்வேறு அரச திணைக்களங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கும் நாம் ஆதரவளித்தோம். அவர்களும் தென்ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்து எவ்வாறாக இரத்தம் சிந்தாமல் ஒரு சமாதானமாக தீர்வை சமரசத்தினுர்டாக கண்டடைவதென்ற விடயத்தில் வழிகாட்டுமாறு கோரியிருந்தனர். 1994ல் எமது ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டபின்னர் 23 வருடங்கள் கழிந்தும் சமாதானமானது இன்னமும் தாக்குப்பிடித்துநிற்கின்றது ஏனெனில் நாம் வலுவானதொரு ஜனநாயக நாடாகும். முன்னாள் ஜனாதிபதி  ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்தினதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும்  அழைப்பையடுத்து நாம் மிகவும் தார்மீகரீதியான ஆதரவு நிலைப்பாட்டை வழங்கிவருகின்றோம். அந்த ஆதரவு தொடர்ந்தும் இருக்கும். அண்மையில் ஜனாதிபதி சிறிசேன எமது ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு தென் ஆபிரிக்காவின் விசேட கவனமானது தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். அதுமாத்திரமன்றி எம்மிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளும்; ஒத்துழைப்பும் தேவைப்படுகின்ற் புதியதொரு பட்டியலையும் அவர் முன்னிலைப்படுத்தியிருந்தார். அந்தவகையில் எமது பணி தொடர்ந்தும் முன்செல்லும்.  






 தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களின் பரிமாணம் மாறுபட்டது. இலங்கையில் இழைக்கப்பெற்ற குற்றங்கள் மிகவும் பாரதூரமானவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரே குறிப்பிட்டிருந்தார்.தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பெற்ற குற்றங்களுக்காக யாரேனும் தண்டிக்கப்பட்டார்களா? மீண்டும் மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனக் கருதுகின்றீர்களா? 

தென் ஆபிரிக்காவில் ஒரே காலகட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.நாம் புதிதாக ஒரு அரசியல்யாப்பை உருவாக்கியிருந்தோம். அரசியல்யாப்பானது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையிலான பாலமாக திகழ்கின்றது என நான் உங்களின் முன்னைய கேள்விக்கான பதிலின் போதும் தெரிவித்திருந்தேன். மீண்டும் மோதல்கள் ,அநீதிகள் கடந்தகாலத்தில் போன்று நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக அரசியல்யாப்பு அமைந்துள்ளது.ஏனெனில் அரசியல்யாப்பு இனவாதத்தைத் தடைசெய்துள்ளது. அவதூறுப் பேச்சுக்களைத் தடைசெய்துள்ளது. எங்களுடைய அரசியல் யாப்பை நீங்கள் பார்க்கும் போது அதிலுள்ள சம உரிமைச் சரத்துக்களைக் உன்னிப்பாக நோக்குங்கள். நாம் மீண்டுமாக பழைய நிலைக்கு திரும்பாது இருப்பதை உறுதிசெய்வதற்கான கருவியாக அரசியல்யாப்பு இருக்கின்றதென்பதை பறைசாற்றுவதாக அதிலுள்ள சம உரிமைச்சரத்துக்கள் அமைந்துள்ளன.நாம் மீண்டுமாக துயர்படிந்த கடந்தகாலத்திற்கு திரும்பமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் மிகமுக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக அரசியல்யாப்பு உருவாக்கம் அமைந்திருக்கின்றது.


நீங்கள் ஒரு நீதிமன்றத்திற்கு முன்செல்வதோ அன்றேல் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக செல்வதோ கடந்த கால துயரச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதிப்படுத்தவதற்கு போதுமானதாக அமைந்துவிடாது. நீதியை நிலைநிறுத்தும் நிறுவனங்கள் சீரமைக்கப்படவேண்டுவதும் முக்கியமானதாகும். நீதிக்கட்டமைப்பு பொலிஸ் மனித உரிமை ஆணைக்குழு ஆகியன வலுப்படுத்தப்படவேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக நீதியை கட்டிக்காப்பதற்காக அரசாங்க நிறுவகக் கட்டமைப்பில் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டும்.


தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தமையால் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் என்பன சாத்தியமாயிற்று. ஆனால் இலங்கையில் சிறுபான்மையினரே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தவகையில் தென் ஆபிரிக்க படிப்பினைகள்  எவ்வாறு உதவமுடியும்?


நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவராக இருந்தால் நீங்கள் சிறுபான்மையினராக இருந்தாலோ பெரும்பான்மையினராக இருந்தாலோ நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவரே. மோதல்களின் போது,யாரேனும் உங்களுக்கு எதிராக தீங்கிழைதிருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரை கொலைசெய்திருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரைக் கடத்திச் சென்றிருந்தால் ,யாரேனும் உங்கள் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால், யாரேனும் உங்கள் சகோதரியையோ தாயாரையோ பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருந்தால்  அவை எங்குமே  மாற்றடையப்போவதில்லை.எந்த மோதலின் போதும் அவை ஒரேவிதமானவையாகவே உள்ளன.
தென் ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டமை எம்மைப்பொறுத்தவரையில் அதிர்ஷ்டமிக்கதாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் அது எமக்கு உதவியாக அமைந்தது.இந்த விடயங்களை கையாள்வதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை அது வழங்கியது.

பெரும்பான்மையினரான தென் ஆபிரிக்ர்களைப் பொறுத்தவரையில் வியந்துபார்க்க கூடியவிடயமாக அமைந்ததென்னவென்றால்  ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்கள் அராஜகப்பான்மையுடன் நடந்துகொள்ளவில்லை.அவர்கள் அரசாங்கமமைத்தவுடன் அவர்கள் மன்னிப்பவர்களாக மாறினர். இதனை அனைவரும் எப்போதும் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு நாட்டில் நீங்கள் பெரும்பான்மையினராக இருந்தால் ஏன் நீங்கள் நல்லிணக்கத்தினை நோக்கி வழிநடத்தக்கூடாது. தென் ஆபிக்காவில் கறுப்பினத்தவர்கள்  வெள்ளையரல்லாதவர்கள் தான் பெரும்பான்மையினர். அவர்களே நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் தலைமைதாங்கிவழிநடத்தியிருந்தனர். பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தலைமைதாங்கியிருந்தனர். கறுப்பினத்தவர்களிடத்தில் இருந்தே பொறுப்புக்கூறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தென்பிரிக்காவில் உண்மை மறறும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கு அங்குள்ள கறுப்பினத்தவர்களே காரணமாக அமைந்தனர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். அது மிக முக்கியமான விடயம். அந்த வகையில்  பல சிக்கலான பாடங்களை  தென் ஆபிரிக்காவில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் போன்ற விடயங்களை இலங்கைககு உசிதமான வகையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.நீங்கள் என்ன வேண்டும் என்பதை கூறுகின்ற தகவலாக இந்தப்பாடங்கள் அமையமாட்டாது.மாறாக நீங்கள் அதைப் பார்த்து தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்கள் பல்வேறு துயர்களை எதிர்கொண்டிருந்தபோதும் அந்த துயரங்களை விளைவித்த சிறுபான்மையினரை அவர்கள் மன்னித்தவிடயத்தை மனதில் நிறுத்திக்கொள்ளலாம்.இங்குள்ள பெரும்பான்மையினர் எப்படி சிறுபான்மையினருடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அந்த அனுபவத்தைக் கொண்டு ஆராயமுடியும். அந்த வகையில் பல வித்தியாசமான படிப்பினைகளை தென் ஆபிரிக்காவிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். தென் ஆபிரிக்காவில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவர்கள் அரசாங்கததையமைப்பார்கள் என நான் நினைககவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினர்  ஆட்சியதிகாரத்திற்கு வந்தமை முன்னோக்கிய பயணத்திற்கு பேருதவியாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்கள் முன்னோக்கிச்  செல்லவிரும்பினர். நாடு முன்னோக்கிச் செல்வதை அவர்கள் விரும்பினர்.இதற்காக அவர்கள் மன்னிப்புணர்வை வெளிப்படுத்தினர்.இது போன்ற படிப்பினைகளையே நாம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.கடந்த காலத்தில் மிகக் கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை அங்கீகரித்துக்கொண்டு அவற்றைப் பின்னோக்கி வைத்துவிட்டு அனைவரும் முன்னோக்கிச் செல்லமுடியும்.


தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக டெஸ்மண்ட் டுட்டு இருந்தார். ஏனைய அங்கத்தவர்கள்  யார்? அவர்களின் வெளிநாட்டவர்களும் இடம்பெற்றிருந்தனரா?ஆணைக்குழு எப்படி கட்டமைக்கப்பட்டிருந்தது?


ஆணைக்குழுவில் தென் ஆபிரிக்கர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தனர். நான் ஒரு நீதிபதியாக இருந்தால் என்னுடைய நாட்டின் அரசியல்யாப்பிற்கு பிரமாணிக்காக உள்ளதாக நான் சத்தியம் செய்யவேண்டும். இன்னொருவருடைய நாட்டில் நான் நீதிபதியாக இருக்க முடியாது. அந்தநாட்டின் நீதிமன்றமொன்றில் போய் நான் அமரமுடியாது.ஆனால் என்னுடைய நிபுணத்துவ ஆற்றலை அந்த நாட்டில் வடிவமைக்கப்படும் பொறிமுறைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளமுடியும். மண்டேலா அனைத்து அரசியற்கட்சிகளுடனும் கலந்தாலோசித்திருந்தார். அவர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.அது கலந்தாலோசித்தலினூடாக இணக்கங்காணப்பட்ட அணுகுமுறையாக இருந்தது. ஆனால் எமக்கு தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச நிபுணத்துவ ஆற்றலுள்ளவர்கள் உதவியிருந்தனர். இங்கு  சர்வதேச வழக்குத் தொடுநர்கள் சர்வதேச நீதிபதிகளைக் அழைப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை நான்  அறிவேன். அரசாங்கம் இது விடயத்தில் எப்படி நடந்துகொள்ளப்போகின்றது என்பதை அவதானிக்கின்றோம். எம்முடைய தென் ஆபிரிக்க அனுவவத்தைப் பொறுத்தவரையில் நீதிபதி முதற்கொண்டு அனைவரும் தென்ஆபிரிக்கர்களாகவே இருந்தனர்.

 உங்களுடைய தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு காலவரையை நிர்ணயிக்கப்பட்டிருந்ததா?
ஆம் நிச்சயமாக அதற்கென ஒரு காலவரையறை இருந்தது. ஆணைக்குழு,1995ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு 1998ல்  அறிக்கை வெளியிடப்பட்டது.தெட்டத்தெளிவான காலவரையிருந்தது.




தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற உலகப் பொது அபிப்பிராயம் உள்ள நிலையில் நாடுகள் சில தமது புவிசார் நலன்களுக்காக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்க முற்படுவதான எண்ணப்பாடு தமிழ்மக்களிடத்திலே காணப்படுகின்றது. இவர்களுக்கு நீங்கள் கூறுவிரும்பும் செய்தியென்ன?

சர்வதேச சமூகத்திலுள்ள அனைவருமே பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதிப்பாடாக இருக்கின்றனர் என்பதை மிக முக்கியமாக கூறிவைக்க விரும்புகின்றேன். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எப்படி உணர்கின்றார்கள் என்று அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நாடும் இருக்கமாட்டாது என நான் நினைக்கின்றேன். சர்வதேச சமூகத்திலுள்ள அனைவரும் இதனை அறிந்துவைத்துள்ளனர். அனைவருமே பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படுவதைக் காண விரும்புகின்றனர்.இதிலே பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு எந்தவகையான பொறிமுறையினை நாம் ஏற்றுக்கொள்ளப்போகின்றேர்ம் என்பதிலேயே சிக்கலுள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.எந்த பொறிமுறைக்கு இணக்கம் காணப்பட்டாலும் அதிலே தென்ஆபிரிக்கா தனது பங்களிப்பை வழங்கியது என்பதை அனைத்து சமூகத்தவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.எத்தகைய பொறிமுறை நடைமுறைப்படுத்தாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளில் அக்கறைசெலுத்துவதாக அவற்றிற்கு தீர்வுகாண்பதாக அமையவேண்டும் என்பதை தென்ஆபிரிக்கா உறுதிப்படுத்த விரும்புகின்றது.
இலங்கையில் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டும். அப்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைத்ததாக உணர்ந்துகொள்ளமுடியும் என தென்ஆபிரிக்கா 2011 கூறியதையே 2017லும் கூறுகின்றது.


No comments:

Post a Comment