Tuesday, March 16, 2021

அஸ்ரா செனேக்கா தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லை : உலக சுகாதார அமைப்பு

 


அஸ்ரா செனேக்கா astrazeneca தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லையென உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. தடுப்பூசியினை தொடர்ந்தும் செலுத்துமாறு அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் உள்ளிட்ட சில நாடுகள் அஸ்ரா செனேக்கா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையிலையே உலக சுகாதார அமைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுதிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரத்தம் உறைவதாக கருத்துக்கள் வெளியானதை அடுத்து அந்நாடுகள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை இடைநிறுத்தியுள்ளன.



எவ்வாறெனினும் இரத்தம் உறைவதற்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பேதும் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தடுப்பூசி வழங்கலை இரத்து செய்யுமளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லையென உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment