Wednesday, March 17, 2021

அஸாத் சாலிக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு? கைதுசெய்யப்பட்டமைக்கு அதுவே காரணம் என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

 


ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதால் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அசாத் சாலி 3 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினராரல் விசாரிக்கப்படுகின்றார்.

சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கமைய கொள்ளுபிடி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நாட்டின் சட்டங்கள் தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அக்கூற்று தொடர்பா பல தரப்பினரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அசாத் சாலி பயணித்த மோட்டார் காரில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் ரவைகளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேக்கர கருத்து வெளியிடுகையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதற்கான விடயங்கள் தெரியவந்தமையினால் அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment