Thursday, October 21, 2010

உலகத்திற்கு சிலி நாடு தந்த படிப்பினைகள்

வறுமை பட்டினி இயற்கை அனர்த்தங்கள் யுத்தம் சுரண்டல் ஆக்கிரமிப்பு என உலகில் மனிதப் பெறுமதிகளை குறைக்கின்ற செய்திகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்ற நிலையில் மனிதகுலம் மாபெரும் வளர்ச்சியைக்காண்பதற்கு அடித்தளமாக இருந்த மனிதாபிமானம் நம்பிக்கை பொறுப்புக்கூறும் தன்மை கடும் உழைப்பு விடாமுயற்சி புதிய தேடல் போன்ற மகத்தான குணாம்சங்களை எடுத்துக்காட்டிய நிகழ்வு கடந்தவாரத்தில் நிகழ்ந்திருந்தது

 சிலியின் தங்கம் மற்றும் தாமிர சுரங்கத்தில் 2000 அடிக்கு கீழான ஆழத்தில ;சிக்கியிருந்த 33 சுரங்கத்தொழிலாளர்கள் 69நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட நிகழ்வு உலகமக்களின் பெரும் அவதானத்தை ஈர்த்திருந்தது

இந்தச்சுரங்கத்தொழிலாளர்களுக்கு என்ன நடந்தது எப்படி நடந்தது மீட்புபணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன போன்ற விடயங்களெல்லாம் கடந்த ஒருவாரகாலத்திற்கும் மேலாக ஊடகங்களில் அதிக அதிகமாக ஆராயப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன

மனித உயிரின் பெறுமதியை எவ்வாறு மதித்து செயற்படவேண்டும் என்பதற்கு இந்த மீ;ட்புச்சம்பவம் எடுத்த்துக்காட்டாக அமைந்ததுடன் இவ்வாறான அனர்த்தங்களின் போது விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் அதற்கு தலைமைத்துவம் கொடுப்பவர்கள் எங்கனம் செயற்படவேண்டும் என்பதற்கும் இது உதாரணமாகியது

பொருளாதாரத்தில் தமது நாடு வளர்ச்சியடையவேண்டும் என்பதற்காக மனித உயிர்களைப்பற்றிப்பற்றிய பொறுப்பின்றி செயற்படுகின்ற நாட்டுத்தலைவர்களுக்கு இந்த சம்பவம் சிறந்த பாடமாக அமைந்திருக்கின்றது

சிலி நாட்டின் தற்போதைய ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா பெருங்கோடிஸ்வரராக இருந்தபோதிலும் அவர் தனது நாட்டுமக்களின் உயிரைக்காப்பாற்றுவதில் வெளிப்படுத்திய தலைமைத்துவம் போற்றத்தக்கது

வெறுமனே 33பேர்தானே என்று அந்த கோடீஸ்வரர் உல்லாசத்தில் மூழ்கியிருக்கவில்லை மாறாக சம்பவ இடத்திற்கே நேரில் சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டும் தேவையான நேரத்தில் உத்தரவுகளை வழங்கியும் தனது பொறுப்பை செவ்வனே செய்திருந்தார்
அவரைத்தவிர சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள் நெருக்கடி நிலையின் போது நடந்துகொண்ட பாங்கு அதிலும் சுரங்கத்தில் இருந்தவர்களுக்கு தலைமைதாங்கிய லூயிஸ் உருஸா செயற்பட்ட பாங்கும் தற்போது பெரும் அவதானத்தை ஈர்த்துள்ளன .

உலகமே அவர்கள் இறந்திருக்கக்கூடும் என எண்ணியிருந்த நம்பிக்கையற்ற தருணத்தில் அதளபாதாளத்தில் இருந்து கொண்டு உயர் ஒழுக்க விழுமியத்தை பேணிய சுரங்கத்தொழிலாளர்கள் சுயநலமாக செயற்படாமல் தம்வசம் இருந்த உணவுப்பொருட்கள் போன்றவற்றை மிகச் சிக்கனமாக புத்திசாதுரியத்துடன் பாவித்து உதவிகிட்டும் வரையில் தமது உயிரைத்தக்கவைத்துக்கொண்டமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது

சுரங்கத்தில் இருந்தவர்களுக்கு தலைமைதாங்கிய லூயிஸ் உருஸாவின் வழிகாட்டலில் அவர்கள் உணவையும் பானத்தையும் சிறுசிறு பருக்கையாக அதாவது அருமருந்தாக பயன்படுத்தியிருக்கின்றனர்

இருப்பவற்றை ஒரே நேரத்தில் தின்றுகுடித்துவிட்டு நாளைக்கு என்ன செய்வோம் என்று திண்டாடும் மக்களுக்கும் இது பாடமாகும்
அதிலும் பார்க்க சிறந்த பாடம் விபத்து அனர்த்தம் நேரும் தருணங்களில் வெளி உதவிகள் வந்து சேரும் வரையில் எமது சுயபுத்தியைப் பாவித்து உதவிகளை பெறத்தக்கவாறு எமது உயிரை பாதுகாத்துவைத்திருப்பது எங்கனம் என்பதாகவே இருந்தது

 மீட்கப்பட்டபின்னர் இந்த சுர்ங்கத்தொழிலாளர்களுக்கு உலக நாடுகளில் இருந்து சுற்றுலா அழைப்புக்களும் பரிசுப்பொருட்களும் புகழாரங்களும் குவிந்துகொண்டிருக்க அவர்கள் அனைத்திலும் மேலாக ஒன்றைப்பற்றி சிந்தித்துவருகின்றார்கள் என்பதே தற்போது பிந்திய செய்தியாக கிடைத்திருக்கின்றது

ஆம் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து சுரங்கப்பாதுகாப்பு குறித்த நிறுவனமொன்றை அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியே அதுவாக இருக்கின்றது

ஆகமொத்தத்தில் சிலி சுரங்த்தொழிலாளர்கள் அதளபாதாளத்தில் இருந்து மீட்கப்பட்டது நம்பிக்கையற்ற நிலையில் இருள் சூழ்ந்த பொழுதுகளில் நம்பிக்கை கீற்றாகவும் புதிய வெளிச்சமாகவும் அமைந்திருக்கின்றதென்றால் மிகையல்ல. குறிப்பாக இவ்வாண்டு முற்பகுதியில் இடம் பெற்ற கடும் பூகம்பத்தால் சின்னாபின்னமாகியிருந்த சிலி மக்களின் மன உணர்வுகளுக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் இந்த சம்பவம் வழங்கியிருக்கின்றது

சுpலி நாட்டு சம்பவம் மனிதாபிமானம் நம்பிக்கை பொறுப்புக்கூறும்தன்மை விடாமுயற்சி கடும் உழைப்பு புதிய தேடல் ஆகிய மனித குணாம்சங்களின் எடுத்துக்காட்டாக விளங்கிநின்றது


No comments:

Post a Comment