Friday, May 15, 2009

அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது

-ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் வழமையாக அறிக்கை வெளியிடுவதானே வழமை என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டின் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத்தெரிவித்தார்
படையினரின் இழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் நீண்டநாட்களாக வெளியிடப்படவில்லையே என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்
(யுத்தத்தின் போது அனைத்தையும் குறிப்பாக அதனை வெளியிடுவதில்லை ஆனால் விடுவிக்கும் முயற்சியலமுன்னெப்போதிலும் பார்க்க காயமேற்படுதல் அதிகரித்துள்ளது படையினரைப்பொறுத்தவரையில் உயிரிழப்புக்களல்ல அதிகரித்த அளவில் காயமேற்படுதல் அதிகரித்துள்ளது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியபோது எமக்கு இந்தப்பிரச்சனை இருக்கவில்லை ஆனால் தற்போது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதில்லை ஆப்கானிஸ்தானில் இதனைச்செய்யமுடியும் தலிபான்களுக்கு எதிராக செய்யமுடியும் ஈராக்கிற்கு சென்று அமெரிக்காவினால் எந்தவித ஈவிரக்கமுமின்றி தாக்குதல் நடத்தமுடியும் ஆனால் எமது நாட்டு மக்கள் மீது எங்களால் தாக்குதல் முடியாதல்லவா ஒன்றாக சேர்ந்து சுதந்திரத்தை வென்றெடுத்த இந்த நாட்டின் பிரஜைகள் மீது ஒன்றாக வாழ்ந்த மக்கள் மீது அவ்வாறு கனரக ஆயுதங்களைப்பயன்படுத்தி தாக்குதல் நடத்தமுடியாது அல்லவா பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினாலும் மக்கள் மீது தாக்குதல் நடத்தமுடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது வெளிநாட்டு அழுத்தங்கள் வந்தாலும் வராவிட்டாலும் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது இதுதொடர்பில் அழுத்தங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியுமல்லவா பாகிஸ்தானில் சுவட் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்திய போது யாரும் கணக்கு கேட்கவில்லையல்லவா யாரும் சென்று அங்கு புகைப்படமெடுக்கவில்லையல்லவா வேறு பேச்சுவார்த்தைகள்நடத்தப்படவில்லையல்லவா பாதுகாப்புச்சபைக்கு யோசனை சமர்ப்பிக்கப்படவில்லையல்லவா இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள் லட்சக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர் அங்கு தாக்குதல் நடத்தியபோது எந்தவொரு உலக நாடுகளும் பேசவில்லை அங்கு சமாதான படைகளை அனுப்பவேண்டும் என்று கோரினார்களா ? எது எப்படியிருப்பினும் இந்தப்பிரச்சனையில் பொதுமக்களுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படாதிருப்பதென்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் )






இங்கு ஐநா பாதுகாப்புச்சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது பதிலளித்த அமைச்சர் அது பற்றி தமக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது ஒரு பிரச்சனையும் கிடையாது அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர் வழமையாக அவர்கள் அறிக்கை வெளியிடுவதுண்டு தானே எனப்பதிலளித்தார்



No comments:

Post a Comment