Wednesday, May 20, 2009

கடைசிநாட்களில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை விளங்கிக்கொள்வது சர்வதேச சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது -அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக்







விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிநாட்களில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை விளங்கிக்கொள்வது சர்வதேச சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது என் இலங்கைகான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்தார்

யுத்த மீறல்கள் நடைபெற்றிருப்பதாக தாம் கருதுவதாகவும் இதனை விளங்கிக்கொள்வதற்கு அந்தப்பகுதிக்கு செல்வதற்கான அனுமதி முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்


இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடந்த மூன்றாண்டுகள் பணியாற்றிய நிலையில் தனது பதவிக்காலத்தை ப+ர்த்திசெய்து இன்று விடைபெற்றுச்செல்லும் முன்பாக நடத்திய இறுதி ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்


இதன்போது யுத்தத்தில் படையினர் கடைசிநாட்களில் மிகவும் நேர்த்தியாக தொழில்ரீதியான ராணுவமாக நடந்துகொண்டது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர்


படவிளக்கம்

(இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்னைப்பொறுத்தவரையில் கடினமானது யுத்தத்தின் கடைசிநாட்களை உண்மையாக புரிந்துகொள்வதற்கு யாருக்குமே பாதுகாப்பு வலயத்திற்கு செல்வதற்கான அனுமதியிருக்கவில்லை அமெரிக்கா தொடர்ச்சியாக பலதடவைகள் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டிருந்த பொதுமக்களின் நலன்கள் தொடர்பில் அக்கறையை வெளிப்படுத்திவந்தது அவர்கள் விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் அவர்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்பட்டிருந்தார்கள் அதேவேளையில் நாம் அரசாங்கத்திடமும் பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை போன்ற உறுதிமொழிகளுக்கு கட்டுப்பட்டுநடக்குமாறு கோரியிருந்தோம் இந்த விடயத்தில் யுத்த மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக நான் கருதுகின்றேன் நான் முன்னமே குறிப்பிட்டவாறு உண்மையில் அங்கு என்ன நடைபெற்றது என்பதை விளங்கிக்கொள்வதற்கு அந்தப்பகுதிக்கு செல்வதற்காக அனுமதி முக்கியமானது )
(இந்தப்புதிய யுகத்தின் ஆரம்பம் வழங்குகின்ற நம்பிக்கையை அடைவதற்கும் பயங்கரவாதத்திற்கு இறுதிமுடிவுகட்டுவதற்கும் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுவதுடன் இலங்கையிலுள்ள அனைத்து இனங்களுக்கும் நம்பிக்கை மதிப்புணர்வு கண்ணியம் மிக்க எதிர்காலம் உறுதிசெய்யப்படவேண்டும் அப்படியான நடவடிக்கைகளினூடாகவே ஒரு உண்மையான இலங்கை உருவாக முடியும் ஜனநாயகத்திலும் சகிப்புத்தன்மையிலும் ஆழவேருண்டியதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதும் ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படக்கூடியதும் அனைத்து இலங்கையர்களும் நாட்டை எங்கனம் முன்னெடுத்துச்செல்ல முடியும் என்ற பகிரங்க கலந்துரையாடலில் சுதந்தரமாக பங்கேற்கக்கூடியதுமான நிலைகாணப்பட்டாலே ஒரு உண்மையான இலங்கை உருவாகமுடியும் வெற்றிகரமான நல்லிணக்க நடவடிக்கையும் காயங்களை ஆற்றுகின்ற முயற்சியும் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு இறுதியாக முடிவுகட்டுவதற்கு துணைபுரியும் இதன்மூலமாகவே அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் நம்பிக்கை மற்றும் சந்தர்ப்பங்கள் நிறைந்த எதிர்காலத்திற்கான பாதை உருவாக்கப்படும் )

No comments:

Post a Comment