Friday, May 15, 2009

போர்நிறுத்தத்திற்கு செல்வதா என்பது தற்போது கேள்விக்குரியதல்ல !

- மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
போர்நிறுத்தத்திற்கு செல்வதா என்பது தற்போது கேள்விக்குரியதல்ல மாறாக பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவித்து அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் வாழ்வதற்காக உரிமையைப்பெற்றுத்தருவதே பிரதான நோக்காகும் என மனித உரிமைகள்
அமைச்சா மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்
எமக்களித்த பிரத்தியேகப்பேட்டியின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்

மக்களின் மனிதாபிமான விடயமே முதன்மைக்குரிய முக்கிய விடயம் என குறிப்பிடும் நீங்கள் ஏன் சர்வதேச சமூகத்தினதும் ஏனைய பல்வேறு தரப்பினரதும் போர்நிறுத்தக்கோரிக்கைகளை நிராகரிக்கின்றீர்கள் இதில் முரண்பாடுகள் உள்ளதாக தோன்றுகின்றதே இது பற்றி விளக்கிக்கூறுங்கள் என அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வினவியபோது ?
(நாம் யுத்தநிறுத்தத்திற்கு செல்வதா மோதல்தவிர்ப்பை மேற்கொள்வதா அன்றேல் தற்காலிக மோதல் இடைநிறுத்தத்தை மேற்கொள்வதா என்பது தற்போது கேள்விக்குரியதல்ல தற்போதைய நிலையில் இந்த அப்பாவிப்பொதுமக்களை மிகவும் கொடுரமான பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்து தென்பகுதியிலுள்ள அவர்களது சகோதரர்களும் சகோதரிகளும் பலவருடகாலமாக மகிழ்ந்துணர்வதைப்போன்ற வாழ்க்கையை பெற்றுத்தருவதே மிகவும் முக்கியமான விடயமாகும் வலுக்கட்டாயமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தப்பொதுமக்களது சுதந்திர நடமாட்டத்திற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதுடன் பேச்சுச்சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது அதேபோன்று தாம் விரும்பியவர்களைத்தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது பலகட்சிகளைக்கொண்ட பன்மைவாதம் அந்தப்பகுதிகளில் ஒருபோதுமே இருந்ததில்லை நாட்டின் ஏனைய பாகங்களில்ஏனையோர் அனுபவித்துமகிழ்வதைப்போன்ற ஜனநாயக உரிமைகள் ஏதும் அங்கே கிடையாது அந்தவகையில் பயங்கரவாதத்தை ப+ண்டோடழித்தொழிப்பதற்கான எமது செயற்பாடு வெறுமனே பயங்கரவாதத்தை அழிப்பதுடன் நிறுத்திக்கொள்வதா மட்டுமன்றி இந்த மக்களை விடுவித்து ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் வாழ்வதற்கான உரிமையை பெற்றுத்தருவதுடன் அவர்களது உண்மையான சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளுக்கு அதிகார பகிர்வு ஏற்பாட்டினூடாக அரசியல் தீர்வுமூலமாக தீர்வுகாண்பதுடன் அந்தப்பகுதிகளை அபிவிருத்திசெய்தன் மூலமாக அவர்களது வாழ்க்கையை மீளநிலைநிறுத்துவடன் அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலம் கிடைக்கக்கூடியாதாகவிருக்கும் )
உலகில் வேறு எங்குமே நிகழ்ந்திராத படிக்கு சாட்சியங்கள் ஏதுமின்றி வன்னியில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை பற்றி அமைச்சர் மஹிந்த சமரசிங்க விடம் வினவியபோது ?
(திரு சம்பந்தனைப்பொறுத்தவரை அவர் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எப்போதெல்லாம் அவர் உரையாற்றுகின்றபோதும் குறிப்பாக அவசரகால சட்ட நீடிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் நாளிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக அவர் உரையாற்றுகின்றபோது அவர் குறிப்பாக அவர் கூறுகின்ற விடயங்களை கூறுமாறு அழுத்தங்களுக்கு மத்தியில் உரையாற்றுவதனை நாம் அறிவோம் அனுபவமிக்க கல்விகற்ற அரசியல் வாதியான சம்பந்தன் போன்றவர்கள் இனப்படுகொலை என்பதன் அர்த்தத்தை அறிவர் இனப்படுகொலை என்பதன் அர்த்தத்தை அறிவார்களேயானால் புத்திஉணர்வுள்ள எந்தமனிதரும் எமது படையினரையோ அன்றேல் இலங்கை அரசாங்கத்தையோ இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டமாட்டார்கள் இன்றைய நிலையில் கொழும்பு நகரின் சனத்தொகையைப்பாருங்கள் இங்கு சிங்கள மக்களின் சனத்தொகை மொத்த தொகையில் 27சதவீதமேயாகும் சில ஆண்டுகளுக்கு முன்பாக கொழும்பு நகரில் சிங்கள மக்களின் தொகை 70 இ80 சதவீதங்களில் பிற்பகுதியில் அதிகரித்துக்காணப்பட்டிருந்தது எம்மத்தியில் இனப்படுகொலை கொள்கை இருக்குமானால் தலைநகரில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழமுடியுமா கடந்த வருடங்களில் மக்கள் இங்கு வாழ்வதற்காக தேர்ந்துவந்துள்ளார்கள் நாம் எமது மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றோம் நாம் எமது மக்களை பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க முயற்சிக்கின்றோம் அவர்களுக்கு உரிமைகளைக்கொடுக்க முயல்கின்றோமே தவிர அவர்களை கொல்வதற்கோ அன்றேல் பாராபட்சம் காண்பிக்கவே முயலவில்லை இது சாதாரண மக்களுக்கு எதிரான மோதல் கிடையாது மாறாக பொதுமக்களை விடுவிப்பதற்காக பயங்கரவாதத்துடன் மோதலையை மேற்கொள்கின்றோம் )

No comments:

Post a Comment