Wednesday, May 20, 2009

புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான்-அனுர பிரியதர்ஷன யாப்பா




விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.



அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார். விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள். எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள்இ பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக சிவிலியன்களை புலிகள் கொலை செய்தனர். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர். இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது. எப்போதும் நிம்மதியற்ற வகையிலேயே காலத்தை கழித்தோம். ஆனால்இ தற்போது எதிர்கால சந்ததியினருக்கு நாம் அதனை விட்டு வைக்கவில்லை. இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்.


இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இறுதியாக நடைபெற்றது என்ன என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லவிட ம் வினவியபோது ?

நாம் எதிர்கொள்வது என தீர்மானித்தோம் இறுதியாக பயங்கரவாதிகளை 300 சதுரமீற்றர் பகுதிக்குள் முடக்கினோம் அந்தவேளை நாம் முற்றாக துடைத்தளிப்பதற்கு முன்செல்லவேண்டும் எனத்தீர்மானித்தோம் பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது என்ற நாம் தீர்மானத்தில் நிலைத்திருந்தோம் எமது முக்கிய நோக்கமாக இருந்தது அனைத்து பொதுமக்களையும் விடுவித்ததை உறுதிசெய்தோம் இந்தக்காலப்பகுதியில் 62ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை விடுவித்தோம் இதன்போது பொதுமக்கள் எவரும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம் இதனைத்n;தாடாந்து முற்றுமுழுதான தாக்குதலைத்தொடுத்தோம் தொடர்ந்து சண்டையிட்டு அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்றொழித்தோம் இதன்போது 300ற்கு மேற்பட்டோரின் சடலங்களைக் கண்டெடுத்தோம் இதில் பிரபாகரனின் சடலமும் இருந்தது

தெளிவாக கூறுங்கள் என வினவியபோது


நேற்றையதினம் மோதல்கள் நீடித்தது ( எத்தனை மணிவரை மோதல்கள் இடம்பெற்றது என அருகிலிருந்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவிடம் வினவுகின்றார் )

பின்னர் தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர் கெகலிய
மோதல்கள் நேற்று இடம்பெற்றது பின்னர் அங்கு பல சடலங்கள் அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பதை கண்டோம்

அப்போது சரியாக பதில் தெளிவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்

இதற்கு நான் மேலும் தெளிவாக கூறவான என தெரிவித்த கெகலிய

நேற்றையதினம் மோதல்கள் இடம்பெற்றது மரணமும் நேற்றையதினமே இடம்பெற்றது ஆனால் சடலம் இன்றையதினமே அடையாளம் காணப்பட்டது எனத்தெரிவித்தார்

No comments:

Post a Comment