Friday, May 15, 2009

இலங்கைப்பிரச்சனை மிகவும் சர்வதேசமயமாகியுள்ளது

-கலாநிதி ஜெஹான் பெரேரா
இலங்கைப்பிரச்சனை மிகவும் சர்வதேசமயமாகியுள்ளதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
ஐநா பாதுகாப்புச்சபையில் முதன் முறையாக இலங்கைபிரச்சனை ஆராயப்பட்டுள்ளமை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோபூர்வமாக அறிக்கைவிடுத்துள்ளமையானது எதனைக்காட்டுகின்றது என வினவியபோதே அவர் இதனைத்தெரிவித்தார் .
கலாநிதி ஜெஹான் பெரேரா மேலும் கருத்துவெளியிடுகையில் தெரிவித்ததாவது
(இலங்கைப்பிரச்சனையானது மிகவும் சர்வதேசமயமாகியுள்ளதென்பதனையே இவை காண்பிக்கின்றது இதனை அரசாங்கம் உண்மையில் விரும்பாது ஏனெனில் அரசாங்கம் தன்னால் முடிந்தளவில் இதனை முடிவிற்கு கொண்டுவரவே முயற்சிக்கும் பொதுவாக அரசாங்கங்கள் உள்ளகப்பிரச்சனைகளை ஒருதலைப்பட்டசமான முறையிலேயே தீர்ப்பதற்கு முயற்சிப்பதுண்டு பிரச்சனைகள் சர்வதேசமயப்படுவதை விரும்புவதில்லை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்டசமான பாதையில் சென்று இந்தப்பிரச்சனைக்கு இலங்கையின் பல்வேறு அரசியற்கட்சிகள் அன்றேல் சமூகங்கள் திருப்தியடைவதைவிடவும் தனக்கு திருப்திகரமான வகையில் தீர்வுகாண்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது இந்தப்பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளமையானது எதைக்காண்பிக்கின்றதென்றால் இலங்கை எப்போமே நல்லவிடயத்திலும் மோசமான விடயத்திலும் ஒரு முன்மாதிரியாக பார்க்கப்படும் ஒரு தரப்பினர் எவ்வாறு ஒரு மோதலை முடிவிற்கு கொண்டுவருகின்றனர் என்பது ஒருவித ஆர்வத்;துடன் உன்னிப்பாக அவதானிக்கப்படும் மக்கள் உண்மையில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையிலும் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றநிலையிலும் இராணுவத்தினர் உள்நுழைய முயற்சிக்கின்ற நிலையிலும் இது உண்மையில் மிகவும் சிக்கலான விடயம் இது எப்படி நடைமுறைச்சாத்தியமாகும் என்பதைப்பார்க்க பல தரப்பினரும் முனையக்கூடும் இந்தப்பிரச்சனை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளமை காரணமாகவும் மோதல்களால பாதிக்கப்பட்டவர்கள் மீதான மக்களின் அனுதாபம் காரணமாகவும் இயன்றவரை விரைவாக சர்வதேச சமூகம் எமக்கு உதவும் அதிகமதிகமான மனிதாபிமான உதவிகளை வழங்கும் என நான் நினைக்கின்றேன் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என பல நாடுகளில் மக்கள் அபிப்பிராயம் ஏற்படக்கூடும் சர்வதேச மயப்படுத்தப்பட்டு;ள்ளமையால்இராணுவரீதியில் இலங்கை விவகாரம் நோக்கப்படும் எவ்வாறு இலங்கை அரசாங்கம் மிகவும் சக்திவாய்ந்த போராளிக்குழுவினை குறுகிய காலப்பகுதிக்குள்ளாக எதிர்கொண்டதென இராணுரீதியல் பார்ககப்படும் சர்வதேச மயப்பட்டுள்ள இலங்கைப்பிரச்சனையால் மூன்றாவது விடயமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் சர்வதேச சட்டம் என்பது குறித்து நோக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் முறைமையின் கோரிக்கைகளுக்கு வலுவ+ட்டுவதாக இது அமையும் இலங்கையும் அதன் வீச்சுக்குள் வருகின்றது இலங்கையின் பிரச்சனை சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக ஏற்கனவே நாடுகள் இலங்கை இராணுரீதியில் ஆராயத்தலைப்பட்டுள்ளன சில நாடுகள் ஏற்கனவே அதனைப்பின்பற்றத்தொடங்கியுள்ளன மனிதாபிமான உதவிகளும் விரைவில் முன்னெடுக்கப்படும் சாத்தியமுள்ளன அதாவது சூழ்நிலை அனுமதிக்குமானால் சர்வதேச மனிதாபிமான சமூகம் இதுவிடயத்தில் உதவும் ஆனால் மனித உரிமைகள் சார்ந்த விடயத்திற்கு சில காலப்பகுதி செல்லும் ஆனால் இன்னும் 5வருட பத்துவருடகாலப்பகுதிக்குள்ளாக இலங்கை ஒரு மனித உரிமைகள் சவாலை எதிர்கொள்ளும் என நான் உணர்கின்றேன் இது தற்போது சர்வதேச மயமாகியுள்ளபிரச்சனையால் வலுப்பெறும் என நான் கருதுகின்றேன் )

No comments:

Post a Comment