Friday, September 25, 2020

கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்த ஜப்பானிய கப்பல்கள்




 இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவரும் நிலையில் இந்தோ-பசுபிக்  சமுத்திர பிராந்தியமானது எப்போதும் சுதந்திரமானதாக அனைவரும் பயன்படுத்தத்தக்கதாக இருக்க வேண்டும் என வலியுறுத்திவரும்  ஜப்பான் கடற்படையின் பாரிய கப்பல்களில் ஒன்றான ககா (“KAGA (DDH-184)”)
 
மற்றும் இகாசுச்சி (“IKAZUCHI (DD-107)”)ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு நட்பு விஜயமொன்றை செப்டெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தன. 



நீண்ட காலமாக நட்புறவைப் பேணும் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகியன, இந்தியப் பெருங்கடலில் இலங்கை கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் சமாதானம், உறுதித்தன்மை மற்றும் சுபீட்சத்தை ஊக்குவிப்பதற்கு நெருக்கமாக செயலாற்றி வருகின்றன. 

இந்த கப்பல்களின் நட்பு விஜயத்தினூடாக, இலங்கை கடற்படை மற்றும் ஜப்பானிய கடற்படை இடையே நீண்ட காலமாக பேணப்படும் நட்புறவு மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பரஸ்பர தேசிய இணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இரு படைகளும் கொண்டுள்ள பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment