Monday, September 28, 2020

அங்கிலிக்கன் திருச்சபையின் புதிய கொழும்பு பேராயர் நியமனம் !

 



அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு பேராயராக அருட்தந்தை டுசாந்த ரொட்றிகோ நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் கன்டபெரி அதிமேற்றாணியார் ஜஸ்ரின் வெல்பி இன்றைய தினம் இதனை அறிவித்தார்.

புதிய ஆயரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் கடந்த மாதத்தில் கொழும்பிலுள்ள அங்கிலிக்கன் திருச்சபையின் பேரவை அதன் யாப்பிற்கு அமைய புதிய ஆயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை  இங்கிலாந்திலுள்ள  கன்டபெரி பேராயரிடத்தில் ஒப்படைத்திருந்தது. 

இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் போசகர் என்றவகையிலே கன்டபெரி பேராயர் ஜஸ்ரின் வெல்பி இந்த  தெரிவை மேற்கொண்டுள்ளார்.


No comments:

Post a Comment