Thursday, February 11, 2021

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்படியானால் கொரோனா உறுதி - வெளியான புதிய ஆய்வு



பிரித்தானியாவில் கண்டறியப்பட்டட உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் தொடர்பாக பலரும் அச்சமடைந்துள்ளனர்.  உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பில் பிரித்தானியா 5-வது இடத்தில் உள்ளது. அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வரும் சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் புதிதாக 13,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,996,833-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், Xinhua செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 'ஜூன் 2020 முதல் ஜனவரி 2021 வரை 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், வைரஸின் புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

                          அறிகுறிகள் 

தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள அறிகுறிகளான காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், வாசனை / அல்லது சுவை உணர்வு இழப்பு ஆகியவற்றுடன் இந்த புதிய அறிகுறியும் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவலி, தசைவலி 

லண்டன் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டுள்ள ஆய்வின் படி, குளிர், பசியின்மை, தலைவலி மற்றும் தசை வலி உள்ளிட்ட சில புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவிகித நபர்களுக்கு எந்த அறிகுறிகளும் தெரியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.


அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்புகளுடன் பிரித்தானியா நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா, பிரேசில் மெக்ஸிகோ மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் ஐந்தாவது பெரிய நாடாக  பிரித்தானியாஉள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment