Monday, August 31, 2020

ஒரே நாளில் 78,761 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உலக சாதனை: இலங்கையின் நிலை என்ன?

 




கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கியமை முதல் ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.  நேற்று மாத்திரம் 78,761 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது. 

இதற்கு முன்பாக ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவான சந்தர்ப்பமாக கடந்த ஜுலை மாதம் 16ம் திகதி அமெரிக்காவில் 77, 299 தொற்றாளர்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 19 ஆயிரத்து 169 ஆக பதிவாகியுள்ளது. 

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 19 ஆயிரத்து 169 ஆக பதிவாகியுள்ளது. இதன்படி அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 61லட்சம் தொற்றாளர்களையும் 2வது இடத்தில் உள்ள பிரேசில் 38 லட்சம் தொற்றாளர்களையும் கொண்டுள்ளது. கடந்த இருவாரமாக இந்தியாவில் பதிவுசெய்யப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கையை அவதானிக்கும் போது அடுத்து ஓரிரு தினங்களில் பிரேசிலைத்தாண்டிவிடும்  என்பதைக் கூற கணிதமேதைகள் தேவையில்லை.



கடந்த சில நாட்களாக இந்தியாவில் பதிவாகிவரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையை நோக்குகின்றபோது கொரோனா பரவலின் மத்திய ஸ்தானமாக இந்திய உபகண்டம் மாறியுள்ளதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. 

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்றையதினத்தில் மாத்திரம் இந்தியாவில் 948 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 64,617 ஆக காணப்படுகின்றது. கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் 187,224 உடன் அமெரிக்க முதலிடத்திலும் 120,896  உடன் பிரேசில்  2ம்  இடத்திலும் உள்ளது.

உலகில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 850,149 ஆக பதிவாகியுள்ளதுடன் ஜோன் ஹோப்பின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளுக்கு அமைவாக  இதுவரை கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 25 மில்லியன்களை உலகளவில் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றையதினம் முதன் முறையாக 3000 ஐ தாண்டியது . தற்போதுவரை 3012 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதில் 2,860 பேர் சிகிச்சை குணமடைந்து வெளியேறியுள்ளனர். 12 பேர் மாத்திரமே இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




No comments:

Post a Comment