Wednesday, August 26, 2020

பொருளாதார அபிவிருத்தியே பிரதான கரிசனை - பிரதமர் மஹிந்த பிரித்தானிய பதில் தூதுவரிடம் எடுத்துரைப்பு



கொவிட்-19 பிந்திய காலப்பகுதிக்கு  உலகம் தயாராகிவரும் நிலையில் பொருளாதார அபிவிருத்தியே  நாட்டிற்கு முன்பாக உள்ள பிரதான கரிசனையாகவுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் சிறிய மத்திய தொழில்முயற்சிகளில் முதலீடுகளை ஊக்குவித்தல் விவசாயம் வறுமை ஒழிப்பு ஆகியனவே முக்கிய கரிசனைகள் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (புதன்கிழமை) காலை அலரிமாளிகையில்  தன்னை சந்திக்க வந்த.இலங்கைக்கான பிரித்தானிய பதில் தூதுவர் லீஸா வன்ஸ்டேலிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தக்கருத்துக்களைக் கூறியுள்ளார். 

 இதன் போது இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் இலங்கையுடன் உறவுகளைப் பேணுவதில் பிரித்தானிய அரசாங்கமும் அமைச்சர்களும் ஆர்வமாக உள்ளனர் என பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் ரணில் ஜெயவர்தன இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார் என்றும் பதில் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சந்திப்பின்போது இருவரும் துறைமுக நகரத்தின் முன்னேற்றம், முதலீட்டை ஈர்த்தல், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நிலையான விவசாயம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment