Wednesday, August 12, 2020

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதை எப்படி அர்த்தப்படுத்துவது?

 


மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் மக்களுக்கு முக்கியமான ஒரு செய்தியைக்  கூறுவதாக மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த நியமனம் தொடர்பாக அவரிடம் வினவியபோது, "இந்த நாட்டில்   இனப்பிரச்சனையென்று ஒன்றும் இல்லை எனவும் எந்தவிதமான அதிகாரப்பகிர்விற்கும் ஆதரவளிக்காத 13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என கடந்த காலத்தில் சரத் வீரசேகர வலியுறுத்திவந்துள்ளார். அத்தகைய ஒருவரை மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சிக்கும் பொறுப்பான இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளதன் மூலம் ஆட்சியாளர்கள் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது' என்ற முக்கியமான செய்தியைக் கூறுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்ததத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர இம்முறை கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பாக போட்டியிட்டு 3லட்சத்திற்கும் அதிகமான விருப்புவாக்குகளைப் பெற்று முதலாவதாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment