Tuesday, October 20, 2020

முரளிதரனின் திரைப்படத்தை எடுக்க தயார் - கோமாளிகிங்ஸ் படத்தயாரிப்பாளர்

 முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சுயசரிதை திரைப்படத்தை எடுப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தால் அதனை த் தயாரிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தெரிவிக்கின்றார். 

குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 


மோஸன் போஸ்டர் வெளியான நிலையில் '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியான நிலையில் முரளிதரனின் வேண்டுகோளை அடுத்து சேதுபதி விலகிக்கொண்டார். இந்த நிலையில் படம் வேறுநடிகர்களைக் கொண்டு வெளிவருமா அன்றேல் படம் கைவிடப்படுமா என்பது நிச்சயமற்றதாக உள்ளது.  இந்த நிலையில் முரளிதரன் படத்தை  தயாரிப்பதற்கு வாய்ப்பு வந்தால் அதனை தயாரிக்க தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரராக திகழ்ந்த மகா தேவா சதாசிவத்தின் வாழ்க்கை சுயதரிதைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக ஆராய்ச்சி இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment