Saturday, October 17, 2020

இலங்கையில் கொரோனா சமூகப்பரவலாகிவிட்டதா ?

 



மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையை மையப்படுத்திய கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில்  தொற்று பரவியமைக்கான ஆதாரம் இன்னும் அறியப்படாத நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சமூக பரவல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மினுவாங்கொடவுடன் தொடர்புடையன என அதிகாரிகள் கூறினாலும் சமூக பரவல் தொடங்கியிருக்கலாம் என்பதற்கான அறிகுறி இது என்றும் அச்சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அபாய வலையங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு இடையில் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளமையானது ஒரு தீர்வு அல்ல என்றும் ஏனெனில் மக்கள் இன்னும் அனுமதிப் பத்திரத்தை காட்டி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில்இ கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கையின் விரைவான அதிகரிப்பை கட்டுப்படுத்த நாட்டில் தற்போது உள்ள சுகாதார முறை போதுமானதாக உள்ளதா என்ற கவலையையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எழுப்பியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் உண்மை நிலை தொடர்பாக சமுதாய மருத்துவ விசேட நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதனுடன் நடத்திய முழுமையான நேர்காணல் இதோ




No comments:

Post a Comment