Saturday, January 30, 2021

அரச செலவில் வெளிநாடுகளுக்கு மேற்படிப்பிற்காக சென்ற 101 விரிவுரையாளர்கள் நாடுதிரும்பவில்லை



அரச செலவில் வெளிநாடுகளுக்கு மேற்படிப்பிற்காக சென்ற மூன்று பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 101 விரிவுரையாளர்கள் நாடுதிரும்பவில்லை என்ற தகவல் கணக்காய்வின் மூலமாக வெளியாகியுள்ளது. 

நாடு திரும்பாமை காரணமாக இந்த விரிவுரையாளர்கள் 290 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு திருப்பியளிக்க வேண்டியுள்ளது. 

ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 விரிவுரையாளர்களும் மொரடுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 37 விரிவுரையாளர்களும் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 விரிவுரையாளர்களும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் மேற்படிப்பிற்காக சென்றபின்னர் நாடுதிரும்பவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment