Sunday, January 10, 2021

சர்வதேயமயமான முள்ளிவாய்க்கால் தூபி தகர்ப்பு: பிரித்தானிய அமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவிப்பு




 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பு குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக தெற்காசிய விவகாரங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார். 



"யாழ்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றவற்றையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றேன்.இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் மரணித்த அனைவரையும் நினைவுகூருவது இலங்கை மக்களுக்கு முக்கியமானது .ஏனெனில் அது கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கு மேம்படுத்துவதற்கும் உதவும்" என பிரித்தானிய அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



No comments:

Post a Comment