Tuesday, January 26, 2021

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை கட்டாயமாக எரிப்பது மனித உரிமை மீறலாகும்-ஐநா நிபுணர்கள் கூட்டாக அறிக்கை

 




கொவிட்-19அன்றேல் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்கின்ற  கொள்கையை இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

 அப்படி இல்லாதவிடத்து ஏற்கனவே வேர்விட்டுள்ள பாரபட்சம் சகிப்புத்தன்மையின்மை மற்றும் வன்முறைகளுக்கு தூபமிடுவதாக இது அமைந்துவிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 



"கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டதாக அன்றேல் சந்தேசமுள்ளதாக இனங்காணப்படும் சடலங்களை கையாளும் போது தகனம் செய்வது ( எரிப்பது) என்ற நிலைப்பாட்டை மாத்திரமே கொண்டிருப்பது  மனித உரிமை மீறலுக்கு நிகரானதாகும். கொவிட்டால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதனால்  கொவிட்-19 போன்ற தொற்றுநோய்களின் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதென்ற கூறப்படும் விடயத்தில் இலங்கையிலோ அன்றேல் ஏனைய நாடுகளிலோ மருத்துவ ரீதியான அன்றேல் விஞ்ஞான ரீதியான சான்றுகள் இல்லை" எனவும் ஐநா நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் நான்கு பிரதிநிதிகளால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகளான  Ahmed Shaheed, Fernand de Varennes, Clément Nyaletsossi Voule மற்றும் Tlaleng Mofokeng  ஆகியோரால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

தாம் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களையே பின்பற்றுவதாகவும் அதனை நிராகரித்தால் ஏற்படக்கூடிய மோசமான நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியேற்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

 

No comments:

Post a Comment