Wednesday, January 27, 2021

இலங்கையில் "எதிர்கால வன்முறைகளுக்கும் மோதல்களுக்குமான விதைகள்" நாட்டப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை சுட்டிக்காட்டு

 


இலங்கையில் எதிர்கால வன்முறைக்கும் மோதல்களுக்குமான விதைகள் நாட்டப்பட்டுள்ளதாக  சற்றுமுன்னர் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட  இலங்கை தொடர்பான அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லேட் தெரிவித்துள்ளதுடன் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட  இலங்கை அதிகாரிகள் மீது அங்கத்துவ நாடுகள் பயணத்தடைகளை விதிப்பது குறித்தும் அவர்களது சொத்துக்களை முடக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என கோரியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை  இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக இரகசியமான முறையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம்  அது கசியவிடப்பட்டிருந்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்திருந்தார். 

மனித உரிமை பேரவைக்கு வெளியே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்புக்கூறலை முன்நகர்த்துவது நாடுகள் தமது உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தி நம்பகரமான பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல பரிந்துரைகளை அவர் முன்வைத்திருந்தார். 

. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஆரம்ப மாகு முன்னர் இலங்கை தொடர்பான கடுமையான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment