Friday, January 8, 2021

முள்ளிவாய்க்கால் நினைவிட தகர்ப்பிற்கு காரணம் இதுவா? கலாநிதி குருபரன் கருத்து.

 


2009ம் ஆண்டு இறுதியுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட ,முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. அதன்பின்னர், வருகைதந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.





இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு ஒன்பது மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

பதற்ற நிலை தொடர்ந்தவண்ணமுள்ள தருணத்தில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.



"முன்னைய உபவேந்தர் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை  நிர்மூலமாக்காமையே காரணம். தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக  நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன" என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment