Monday, March 16, 2009

தகுதியுள்ளவனிடம் தலைமை வந்தல்லோ …

சர்வதேச கிரிக்கட்டில் கால்பதித்து கிட்டத்தட்ட ஒருதசாப்தம் ஆகிவிட்டநிலையில் சத்தமில்லாமலே விரல்விட்டெண்ணக்கூடிய வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்ட வீரராக நான் குமார் சங்ககாரவைப் பார்க்கின்றேன்

ஆர்ப்பாட்டமில்லாத அவரது சாதனைகளே அவரது ஆற்றல்களுக்கும் சான்றுபகர்கின்றன

இருந்தும் மஹேல ஜயவர்த்தனவிடம் வாழ்நாள்முழுதுமே தலைமைப்பதவியைவிட்டு இரண்டாம் நிலையிலே இருந்திட நேருமோ என ரசிகர்கள் ஆதங்கம் கொண்ட வேளையில் எதிர்பாராதவகையில் தலைமைப்பதவி குமார் சங்ககாரவைத்தேடி வந்திருக்கின்றது

அலங்காரமான இடதுகைத்துடுப்பாட்டத்திற்காக மட்டுமன்றி வழக்கறிஞரான சங்ககார அழகான ஆங்கில உச்சரிப்பிற்காகவும் கிரிக்கட் அரங்கில் வியக்கப்படுபவர்

தகுதியற்றவர்களிடம் பட்டங்களும் பதவிகளும் போய்ச்சேருகின்றபோது சாதாரணமக்களாலும் கூட அதனைச்சகித்துக்கொள்ள முடியாது ஆனால் தகுதியானவர்களைத்தேடி பதவிகள் வந்தால் ஏற்படுகின்ற எல்லையில்லா மகிழ்ச்சிக்கு அளவேயில்லை

ஆகையினால் ஆனந்தக்கூத்தாடுவோம் வாரீர் .

No comments:

Post a Comment