Tuesday, December 22, 2020

கொரோனாவால் 15 வயது சிறுவன் இலங்கையில் பலி

 


இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்றையதினம் உயிரிழந்த  இருவரில் ஒருவர் தன்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என அறியமுடிகின்றது. இந்தச் சிறுவன் இரத்தப்புற்றுநோய் (லுகேமியா) காரணமாக அபேக்ஸா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு இலக்காகி தற்போது உயிரிழந்துள்ளார்.  இதேவேளை இன்றையதினம்  இறந்த மற்றையவர் கொழும்பு -7 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 891ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 618 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இதில் 8 ஆயிரத்து 410 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 442 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 183பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment