Thursday, December 31, 2020

இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள்: மொத்த எண்ணிக்கை 204 ஆக உயர்வு

 


இலங்கையில் நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் Covid-19 காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 592 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் 7,595 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 706 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில்,தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,329 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment