Saturday, November 28, 2020

100ஐத் தாண்டியது இலங்கையில் கொரோனா மரணங்கள் :இறந்தவர்கள் பற்றியவிபரங்கள் உள்ளே

 


இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐத்தாண்டியுள்ளது.  இன்று வெள்ளிக்கிழமை மட்டும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை நூறைக் கடந்து 107ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு, உயிரிழந்தவர்களில் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (26) கொவிட்-19 தொடர்பான (தற்போது அறிவிக்கப்பட்ட இரு மரணங்களுடன்) 3 மரணங்களும் நேற்று முன்தினம் (25) (தற்போது அறிவிக்கப்பட்ட 3 மரணங்களுடன்) 5 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டவர்களில் 4 பெண்களும் 4 ஆண்களும் உள்ளடங்குவதோடு, இவர்களில் இருவர் இன்றும் (27) இருவர் நேற்றும் (26) மூவர் நேற்றுமுன்தினமும் (25) ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் (23) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்கள்இ கொழும்பு 13, 09, 10, 15, 02, 10, 13 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, ஒருவர் வெலிக்கடை மெகசின் சிறையில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



100ஆவது மரணம்

கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த திங்கட் கிழமை (23) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்று காரணமான மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


101ஆவது மரணம்

கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 54 வயதான பெண் ஒருவர்இ மஹரகமை அபேக்‌ஷா வைத்தியசாலையில் வைத்து கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்துஇ ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவ்வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம்இ புற்றுநோயுடன் உக்கிரமடைந்த கொவிட்-19  தொற்று எனஇ அறிவிக்கப்பட்டுள்ளது.


102ஆவது மரணம்

கொழும்பு 10, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான பெண் ஒருவர் வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


103ஆவது மரணம்

கொழும்பு 15, (மோதறைஃமட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 36 வயதான ஆண் ஒருவர்இ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்துஇ கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து IDHவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட நுரையீரல் நோயுடனான கொவிட்-19  தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.


104ஆவது மரணம்

கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


105ஆவது மரணம்

கொழும்பு 10 (மருதானைஃமாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவுஇ நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


106ஆவது மரணம்

கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர் வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமாவுடன் உக்கிரமடைந்த கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.


107ஆவது மரணம்

வெலிக்கடை, மெகசின் சிறைச்சாலையில் இருந்த 70 வயதான ஆண் ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிரமடைந்த சிறுநீரக தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment