Saturday, November 28, 2020

காணாமலாக்கப்பட்டடோருக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் யாவை?

 


காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குறித்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென அவ்வலுகலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாக கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் ஊடாக பெறப்பட்டு பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகள், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் பேரில் ஆயுதப்படையினரால் வழங்கப்பட்ட போரில் காணாமல்போன படையினரின் விபரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் காணாமல் போனோரின் உறவினர்களிடம் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்தவகையில் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்களை காணாமல்போனோரின் உறவினர்கள் மீளாய்வு செய்வதுடன், ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றை அறிவிக்குமாறு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அறிக்கையை தெளிவாக வாசிக்க 


we.tl/t-bwPQ8yHU27

No comments:

Post a Comment