Friday, November 27, 2020

பதில்பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து புதிய பொலிஸ்மா அதிபரான சீ.டி. விக்ரமரத்ன!

 



இலங்கையின் 35ஆவது பொலிஸ் மாஅதிபராக, சீ.டி. விக்ரமரத்ன இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதில் பொலிஸ் மாஅதிபராக சுமார் இரண்டு வருடங்களாக பணியாற்றிய, சீ.டி. விக்ரமரத்ன, 1986 இல் பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததோடு, பொலிஸ் திணைக்களத்தில் 34 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட, பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் இடத்திற்கு, பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன அந்த பதவியில் சுமார் ஒரு வருடம் ஏழு மாதங்கள் பணியாற்றினார்.அதற்கு முன்பாக 13 தடவைகள் வெவ்வெறு சந்தர்ப்பங்களில் பதில் பொலிஸ்மா அதிபராக  பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



ஏற்கனவே காணப்பட்ட அரசியலமைப்பிற்கு அமைய, பொலிஸ் மாஅதிபரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத நிலையில், தற்போது கொண்டுவரப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, சீ.டி. விக்ரமரத்னவை பொலிஸ் மாஅதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பரிந்துரையை, பாராளுமன்ற பேரவை அங்கீகரித்திருந்தது.


No comments:

Post a Comment